siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 30 ஜூன், 2013

ஆள ஊடுருவும் படையினரின் நச்சுவாயு முகமூடிகள்


2009ம் ஆண்டுக்கு முன்னதாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பல இடங்களில், இலங்கைப் படையின் ஆள ஊடுருவும் படையினர் தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள். குறிப்பாக இவர்களது தாக்குதல் விஸ்வமடு கிளிநொச்சி மற்றும், முல்லைத் தீவுக்குச் செல்லும் பாதைகளில் கூட நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். விடுதலைப் புலிகளின் அதி உச்ச தலைவர்கள் நடமாடும் இப் பிரதேசங்களை புலிகள் கடுமையாகப் பாதுகாத்து வந்தனர். இருப்பினும் அப்பிரதேசங்கள்ல் அவ்வேளைகளில் ஆள ஊடுருவும் இலங்கைப் படையால் நடத்தப்பட்ட சில தாக்குதல்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இருந்தபோதிலும் அதற்கான விடைகள் இப்போது கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் சில அதிர்சி தகவல்களும் உள்ளது. அதாவது வன்னியில் தற்சமயம் கண்ணிவெடிகளை அகற்றிவரும் சில அரசசார்பற்ற நிறுவனங்களில் வேலைசெய்யும் சிலர் வழங்கியுள்ள தகவல்கள் இவை. தாம் சில பகுதிகளில் ( பாதுகாப்பு காரணங்களுக்காக இடங்கள் குறிப்பிடப்படவில்லை) கண்ணிவெடிகளை அகற்றியவேளை, புதர் மற்றும் பற்றைகளில் இருந்து மறைத்துவைக்கப்பட்ட சீருடைகளை கண்டு பிடித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவை விடுதலைப் புலிகளினுடையது அல்ல என்றும், மாறாக இலங்கை இராணுவ சீருடைகளும் அல்ல எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப் பகுதிகளில் இவை ஏன் மறைத்துவைக்கப்பட்டுள்ளது என ஆராயப்பட்டவேளை சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இச் சீருடைகளை எடுத்துச் செல்லவந்த இராணுவத்தினர், அவை ஆள ஊடுருவும் அணியினர் பாவிக்கும் சீருடை என்று கூறியுள்ளார்கள். இதில் திடுக்கிடும் தகவல் என்னவென்றால், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீருடையுடன் அதி நவீன ஆயுதங்கள் மற்றும் தொடர்பாடல் கருவிகள் இருந்ததாகவும், கூடவே நச்சுவாய்க் குண்டுகளைப் பாவிக்கும்போது அணியும் தலைக் கவசமும் இருந்தாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் சில குறிப்புகள், மற்றும் வரை படங்கள் என்பன தமிழில் தான் எழுதப்பட்டிருந்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படி என்றால் இலங்கை இராணுவத்தின் ஆள ஊடுருவும் அணியை வழிநடத்தியது , இல்லை என்றால் இயக்கியதே கருணாவின் குழுவில் உள்ளவர்கள் தான் என்பது, தெளிவாகப் புலணாகிறது. இறு நேரத்தில் புலிகள் அமைப்பில் பல கருணாவின் குழுவின கலந்து போராளிகள் போல இருந்திருக்கிறார்கள். இவர்களே ஆள ஊடுருவும் அணியில் செயல்பட்டிருப்பதும் தற்போது ஆதாரபூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது -

பஸில் ராஜபக்ஷ இந்தியா பயணம்!


 சிறீலங்காவிற்கும் இந்தியாவுக்கும் இடையே இராஜதந்திர ரீதியிலும் படை ரீதியிலும் முறுகல் நிலை வலுவடைந்துள்ள இந்த நேரத்தில் இந்திய அரசின் அவசர அழைப்பின் பேரில் ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ எதிர்வரும் 4 ஆம் திகதி புதுடில்லிக்குப் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசமைப்பின் '13' ஆவது திருத்தம் மற்றும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் என்பன தொடர்பில் சிறீலங்கா அரசின் நிலைப்பாட்டை இந்தியாவுக்குத் தெளிவாக விளக்குவதற்கே பஸில் அழைக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய சிறீலங்கா ஒப்பந்தத்தை இல்லாதொழிப்பதற்கு சிறீலங்கா அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படும் நிலையில் இந்தியா இதற்குத் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.
அவ்வாறு ஏதாவது நடந்தால் சிறீலங்காவில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிப்பதற்கும் அது எண்ணியுள்ளது. அத்துடன் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எதிர்வரும் 7 ஆம் திகதி சிறீலங்கா செல்லவுள்ளார் இதேவேளை இந்தியாவில் பயிற்சிக்குச் சென்ற சிறீலங்கா படையினரை தமிழகத்தின் எதிர்ப்புக் காரணமாக நாட்டுக்குத் திருப்பி அழைத்துள்ளது இலங்கை. இவ்வாறாறு இராஜதந்திர முறுகல் நிலை வலுவடைந்து வரும் நிலையில் இந்திய அரசின் அவசர அழைப்பின் பேரில் அமைச் சர் பஸில் ராஜபக்ஷ புது டில்லிக்கு விரைகிறார் எனத் தெரியவருகிறது