Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 2 ஜூலை, 2013

மைதானத்தில் தோன்றிய திடீர் புத்தர் சிலை!


மட்டக்களப்பு ஓட்டமாவடிப்பகுதியில் பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் திடீர் என புத்தர் சிலை இருந்ததால் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வாழைச்சேனை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளது.
பிறைந்துரைச்சேனையில் உள்ள அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் சாதுலியா வித்தியாலயம் என்பவற்றுக்கு உள்ள ஒரே விளையாட்டு மைதானம் இம்மைதானமாகும். இம்மைதானம் வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரைக்கு அருகில் அமைந்துள்ளது.
கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக பாடசாலைகளின் விளையாட்டு நிகழ்ச்சிகள் பிரதேச விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டுப் போட்டிகள் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்று வந்தன.
விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதியால் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 01ம் திகதி சுற்றுமதில் உடைக்கப்பட்டு இக்காணி புத்த ஜயந்தி விகாரைக்குரிய காணி என்றும் இதற்குள் வெளியாட்கள் எவரும் விளையாட வரக்கூடாது என்று அறிவித்தார்.
இது தொடர்பில் பாடசாலை நிருவாகத்தால் வாழைச்சேனை பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் வழங்குத் தொடரப்பட்டு 11 தவணைகள் இடம்பெற்றதன் பின்னர் நீதிமன்றத்தால் விகாரைக்குரிய இடம் அல்ல என்று பாடசாலை மைதானம் என்று சுட்டிக்காட்டி 2013ம் ஆண்டு ஜீன் 25ம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.
இன்று திங்கட்கிழமை அதிகாலை மீண்டும் புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதியினால் மைதானத்தின் நடுவில் மேசையின் மீது புத்தர் சிலை ஒன்றை வைத்துள்ளதனால் குழப்பம் அடைந்த பாடசாலை நிருவாகம் வாழைச்சேனை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்

யாழில் சட்டவிரோத மணல் அகழ்வில் படையினர்!


வலி.கிழக்கின் அக்கரை கிராம கடற்கரையோரங்களில் படையினர் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் படையினர் என்னத்தையும் கொண்டு போகலாம் என்ற நிலையினை ஏற்றுக் கொள்ள முடியாது சட்டவிரோத மணல் அகழ்வினை காவல்துறையினரும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.இப்பகுதி நீண்ட காலமாக படை கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது மீள்குடியேற்றத்திற்காக அந்த பகுதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் மிதிவெடி உள்ளதாக மக்கள் அச்சங் கொண்டிருந்ததால் முழுமையாக அப்பகுதியை கண்ணிவெடியகற்றித் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்ததோடு அயல் கிராமங்களிலும் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.பொது மக்களது உழவு இயந்திரங்களைப் பாவித்து படையினர் மணல் அகழ்ந்து கொண்டு செல்கின்றனர்.
மணல் அள்ளப்படுவதற்குரிய எந்த அனுமதிகளும் உரியவாறு எடுக்கப்படவில்லை. கடற்கரையிலுள்ள இந்த மணலானது அகழ்ந்து எடுக்கப்படுவதானது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இதனைப் பொது மக்கள் கேட்டபோது பிரிகேடியரிடம் கேளுங்கள் அல்லது இராணுவத் தலைமையத்திடம் கேளுங்கள் என்ற பதில்கள் சொல்லப்படுகின்றது.
படையினர் தமக்கான புதிய முகாம்கள் அமைப்பதற்கும் புதிய பல விடயங்களைச் செய்வதற்கும் இந்த மணலைப் பாவிக்கின்றனர். படையினர் அடிக்கும் மணல் கொள்ளைக்கு இணையாக உழவு இயந்திரங்களை படையினருக்க வழங்குபவர்களும் கொள்ளை அடிக்கின்றனர்.அகழ்ந்த மணலை இராணுவம் கொண்டு செல்கின்றது என்று காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்