Link

ணக்கம் வருக வருக....

Pages

புதன், 3 ஜூலை, 2013

பிராஸ்னனின் செல்ல மகள் மரணம்


ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்து புகழ் பெற்ற பியர்ஸ் பிராஸ்னனின் மகள் சார்லட் பிராஸ்னன் புற்றுநோயால் மரணமடைந்துள்ளார்.
60 வயதாகும் பியர்ஸ் பிராஸ்னனுக்கு இரு மகன்கள் மட்டுமே, மகள் சார்லட்டை சிறு வயதிலேயே தத்தெடுத்து வளர்த்தார்.
இவரது தாயார் காஸென்ட்ரா தனது கணவரைப் பிரிந்து குழந்தையுடன் தனியாக நின்ற போது காஸென்ட்ராவை மணந்து கொண்டு சார்லெட்டை தத்தெடுத்துக் கொண்டார்.
மகள் மீது நிறையப் பிரியம் வைத்திருந்தார் பிராஸ்னன்.
சார்லெட்டுக்கு கருப்பை புற்றுநோய் இருந்தது சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தனக்கு புற்றுநோய் வந்திருப்பது தெரிந்தும் கூட மனம் தளராத சார்லெட், மிகவும் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் சிகிச்சையை தொடர்ந்து வந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சார்லெட்டின் நிலைமை மோசமானது.
இதையடுத்து அவர் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டார். கடந்த மாதம் 28ம் திகதி மரணமடைந்தார்.
இத்தகவலை பிராஸ்னன் ஒரு சிறு அறிக்கை மூலம் உலகுக்கு அறிவித்தார்.
அதில், ஜூன் 28ம் திகதி எனது அன்பு மகள் சார்லெட் எமிலி, இறைவனடி சேர்ந்தார். கருப்பை புற்றுநோயால் அவர் மரணமடைந்தார்.
அவர் மரணித்தபோது கணவர் அலெக்ஸ், குழந்தைகள் இசபெல்லா, லூகாஸ், சகோதரர்கள் கிறிஸ்டோபர், சீன் ஆகியோர் உடன் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தான் நடித்து வரும் நவம்பர் மேன் இன் செர்பியா என்ற படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட பிராஸ்னன், அதில் வரும் ஒரு சண்டைக் காட்சியில் வழக்கம்போல நடித்துக் கொடுத்தாராம்.
சார்லெட்டின் தாயார் காஸன்ட்ராவும் இதே போலத்தான் புற்று நோய்க்கு தனது 42வது வயதில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது

 

நாடுகளை உளவு பார்த்ததற்கு மன்னிப்பு கேட்க முடியாது:


மற்ற நாட்டு தூதரகங்களை உளவு பார்த்த விடயத்தில் யாரிடமும் மன்னிப்பு கேட்க தேவையில்லை என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பாட்ரிக் வென்ட்ரல் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் பெரும்பாலான நாடுகளுடன் மிகவும் நெருக்கமான நட்புறவுடன் உள்ளோம்.
அவர்களுடனான இந்த தூதரக ரீதியிலான உறவு மேலும் தொடரும். எனவே அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் உள்பட 38 நாடுகளின் தூதரகங்களை உளவு பார்த்த விஷயத்தில் யாரிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை.
இது அனைத்து நாடுகளும் மேற்கொள்ளும் வழக்கமான ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஐரோப்பிய நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்க தொடரும். இதுதொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் ஒருவாரத்தில் தொடங்க உள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பயனடைவார்கள். இதுவே மற்ற நாடுகளுடன் எங்களின் ஒளிவுமறைவற்ற செயல்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சான்று என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே இது தொடர்பாக ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், ஒரு நாடு மற்ற நாடுகளை உளவு பார்ப்பது என்பது வழக்கமான ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார்
 

ஆறுமுகம் தொண்டமானுக்கும் பா.சிதம்பரத்திற்கும் இடையில் பேச்சுக்கள்!


இந்தியா சென்றுள்ள சிறீலங்கா அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தலையிலான குழுவினருக்கும் இந்திய நிதிஅமைச்சர் பா.சிதம்பரத்திற்கம் இடையிலான பேச்சுக்கள் நடைபெற்றுள்ளது.
நேற்று மாலை இந்திய நிதிஅமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கடந்த மாதம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தொழிலாளர் காங்கிரசின் குழுவினர் இந்தியா காங்கிரஸ் கட்சி தலைவி சோனியாவுடன் கலந்துரையாடியுள்ளார்கள்
இதன் தொடர்ச்சியான பேச்சுக்களே சிதம்பரத்துடன் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
இதன்போது இந்திய வம்சாவளி தோட்ட மக்களுக்கான வீடமைப்பு,மாணவர்களுக்கான கல்வி, இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு,தொழில்பயிற்சி,தோட்ட மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.