siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 9 ஜூலை, 2013

வேலையில்லா திண்டாட்டத்தில் தவிக்கும் ஜேர்மன் மக்கள்


 ஜேர்மன் நாட்டு மக்கள் வேலையின்மை மற்றும் பணம் பற்றாக் குறைவு குறித்து மிகுந்த கவலையில் இருப்பதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேலையில்லா திண்டாட்டம் குறித்து 7 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 72 சதவீதம் ஸ்பானிஷ் (Spanish), 69 சதவீதம் பிரான்ஸ் (France), மற்றும் 32 சதவீதம் ஜேர்மன் (German) மக்கள் இந்த ஆய்வு குறித்து பதிலளித்துள்ளனர்.
ஐரிஸ்(Irish) மற்றும் ஸ்வேட்ஸ்(Swedes) நாடுகள் மிகவும் கவனமாக இருந்ததாகவும் ஆனால் ஜேர்மன் நாடானது வேலையின்மை குறித்து மிகவும் கவலையில் இருப்பதாக இலாப நோக்கமற்ற சந்தை ஆராய்ச்சி குழு தகவல் தெரிவித்துள்ளது.
ஒட்டு மொத்தமாக இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளின் சதவீதமானது ஜேர்மன் நாட்டினருக்கு 2.5 பிரச்சனைகளும் மற்றும் ஐரிஸ்(Irish), ஸ்வேடஸ்(Swedes) நாட்டினருக்கு 1.2 பிரச்சனைகள் இருப்பதாக அந்நாட்டினர் பதிலளித்துள்ளனர்.
ஐரோப்பா முழுவதும் உள்ள 10 பிரச்சனைகளில் முக்கியமானதாக வேலையின்மை, பணவீக்கம், பொருளாதார பற்றாக்குறை, வீட்டு வாடகை மற்றும் கல்வி, ஊழல் என்று இந்த மாதிரியான பிரச்சனைகளே அதிகம் காணப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் இன்றியமையாத பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் ஐரோப்பாவில் 2013ம் ஆண்டிற்கான இன்றியமையாத பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்யப்படவில்லை.
ஐரோப்பாவில் ரஷ்யா மற்றும் நெதர்லாந்து நாடுகளைத் தவிர 37 சதவீதம் பேர் வேலையின்மை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
மேற்கொண்ட ஆய்வானது 13,300 மக்களிடம் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆஸ்திரியா, ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போலந்து, ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளடங்கியுள்ளன.
முதன்முறையாக அயர்லாந்து நாடானது இந்த ஆய்வில் சேர்த்துக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

இலங்கைச் சிறுவன் அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில்

  
11 வயதான இலங்கைச் சிறுவன் ஒருவன் அவுஸ்திரேலியாவின் தஸ்மானியா  தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோரியதனால் இவ்வாறு சிறுவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

குறித்த சிறுவன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தஸ்மானியா ஹோபார்ட் முகாமிற்கு அண்மையில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் டோனி புர்க்கே விஜயம் செய்துள்ளார். குறித்த தடுப்பு முகாம் சிறுவர்களை நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்க உகந்ததல்ல எனத் தெரிவித்துள்ளார்.

11 வயதான இலங்கைச் சிறுவனை தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்