siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 17 ஜூலை, 2013

பாதியில் இடைநிறுத்தப்பட்ட விண்வெளி பயணம்


நாசா விண்வெளி மையத்திலிருந்து ஆறு விண்வெளிவீரர்கள் விண்ணிற்கு செலுத்தப்பட்டுள்ளனர்.
அதில் லுகா பர்மிடானோ என்ற இத்தாலி வீரர் விண்ணில் நடக்க இருக்கும் முதல் இத்தாலியர் என்ற பெருமையுடன் கிறிஸ்டோபர் காசிடி என்ற மற்றொரு வீரருடன் இன்று விண்வெளியில் நடக்க ஆரம்பித்தார்.
விண்வெளியில் நடத்தப்பட வேண்டிய வழக்கமான பராமரிப்பு பணியுடன், கேபிள் இணைப்பு போன்ற பணியையும் செய்வதற்காக அவர்கள் ஆறு மணி நேரம் விண்வெளியில் இருப்பதாக இருந்தது. ஆனால், ஒரு மணி நேரத்திற்கெல்லாம் பர்மிடானோ தனது பின்னந்தலையில் நிறைய தண்ணீர் இருப்பதுபோல் உணருவதாக சொன்னதும் கண்காணித்துக் கொண்டிருந்த அனைவரும் திடுக்கிட்டனர்.
முதலில், அதனை வியர்வை என்று அவர் நினைத்தார். தண்ணீர் குடிப்பதற்காக ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர்ப் பையிலிருந்து கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று அவரது சக வீரர் காசிடி தெரிவித்தார். ஆனால், சிறிது நேரத்திற்கெல்லாம் அந்தத் தண்ணீர் அவரது கண்ணில் நிறைய ஆரம்பித்தது.
இதனால் நாசா மையம் இருவரையும் விண்வெளி மையத்திற்கு திரும்ப அழைத்தது. அதற்குள் அவரது மூக்கு,வாய் போன்ற இடங்களிலும் நீர் சேர ஆரம்பித்து அவரால் நாசாவின் அறிவிப்பைக் கூட கேட்க இயலவில்லை. பர்மிடானோ திரும்புவதற்கு உதவிய காசிடி, உடனடியாக தாங்கள் நின்றிருந்த பகுதியை சுத்தம் செய்த பின்னர் மீண்டும் விண்வெளி மையத்திற்குள் நுழைந்தார்.
அங்கிருந்த மீதி நால்வரும் பர்மிடானோவின் ஹெல்மெட்டைக் கழற்றி அவரது தலையைத் துவட்ட உதவினர். நாசாவின் தொலைக்காட்சியில் தோன்றிய பர்மிடானோ அனைவரையும் நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தார்.
இந்த நீர்க்கசிவு எதனால் ஏற்பட்டது என்று ஆராயப்பட்டு வருகின்றது. கடந்த 2004-ம் ஆண்டு, ரஷ்ய வீரர்களும், அமெரிக்க வீரர்களும் விண்வெளியில் நடந்தபோது, அவர்கள் அணிந்திருந்த உடையில் ஏற்பட்ட பிரச்சினையினால் 14 நிமிடத்திற்கெல்லாம் திரும்ப அழைக்கப்பட்டனர். இப்போது இவர்களின் விண்வெளி நடை ஒரு மணி 32 நிமிடம் நீடித்தது
 

மண்டேலாவின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட


தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பினத் தலைவரும், இனவெறிக் கொள்கையை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டு ஜனாதிபதியாக உயர்வு பெற்ற நெல்சன் மண்டேலாவின் பிறந்ததினம் வெகு விமர்சையாக கொண்டாப்படவுள்ளது.
எதிர்வரும் 18ம் தேதி அவரின் பிறந்த நாள் ஆகும்.
உயிர் காக்கும் சாதனங்களின் உதவியுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்த நாளை உலகளாவிய அளவில் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பொது வாழ்க்கையில் நெல்சன் மண்டேலாவின் 67 ஆண்டு கால தொண்டினை போற்றும் விதமாக 67 நிமிடங்களை பொதுப்பணிக்கு செலவிட உள்ளேன் என இங்கிலாந்தின் பிரபல தொழிலதிபரான ரிச்சர்ட் பிரான்சன் தெரிவித்துள்ளார்.
மண்டேலா பிறந்த ஊரில் வரும் 18ம் தேதி அவரது பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட சிறப்பு அறிவியல் பாடசாலை திறக்கப்படுகிறது. தென்னாபிரிக்காவிலுள்ள பாடசாலைகளுக்கு  வர்ணம் பூசவும், ஏழை குழந்தைகளுக்கு இலவச ஆடைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 17 நகரங்களில் நலத்திட்ட உதவிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஆப்பிரிக்க இசை கலைஞர்கள் மெல்போர்ன் நகரில் மாபெரும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தனது வாழ்நாளில் 46 ஆண்டுகளை சிறை தண்டனையில் கழித்த மண்டேலா 2010ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக நெல்சன் மண்டேலா கடந்த மாதம் 8ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலைமை மோசமாகவே, உயிர் காப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டன.
இதனிடையில் மண்டேலா குடும்பத்தினரின் கல்லறைப் பிரச்சினைகள் நீதிமன்றம் வரை சென்றன. அவ்வழக்கை விரைந்து முடிப்பதற்காக மண்டேலா கோமா நிலைக்குச் சென்றுவிட்டார் என்றும் சொல்லப்பட்டது.
பின்னர், அரசும், அவரது மனைவி மற்றும் நண்பர்கள் அனைவரும் இதற்கு மறுப்பு அறிக்கையும் விடுத்தனர். பொதுமக்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 6 வாரங்கள் கடந்த நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. அவரது மனைவியும் அதனை ஆமோதித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா முழுவதும் இருக்கும் பாடசாலை குழந்தைகள் ஒரே நேரத்தில் அவரை வாழ்த்தி 'ஹேப்பி பேர்த் டே டூ யூ..' என இசைக்க உள்ளனர்