Link

ணக்கம் வருக வருக....

Pages

வியாழன், 18 ஜூலை, 2013

குழந்தை பிறக்க தாமதம் ஏன் கேத் மிடில்டனுக்கு ?


இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியும், நிறைமாத கர்ப்பிணியுமான கேத் மிடில்டன் பிரசவத்திற்காக லண்டன் செயிண்ட்மேரிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு கடந்த வாரம் சனிக்கிழமை குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது, இதனால் போனில் எப்போது தகவல் வரும் என அரச குடும்பமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
இதேபோன்று பிறக்க போகும் குழந்தையும், தாயையும் புகைப்படம் எடுப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த பத்திரிக்கையாளர்களும், புகைப்பட நிபுணர்களும் குவிந்துள்ளனர்.
இதற்கிடையே ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா? என்று பெரிய அளவில் சூதாட்டமே நடக்கிறது.
மேலும் குழந்தை பிறப்புக்காக ராணுவத்தில் இருந்து விடுமுறையில் வந்துள்ள இளவரசர் வில்லியம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சகோதரர் ஹாரியுடன் போலோ விளையாடி பொழுதை கழிக்கிறார்

சேர்க்கையாளர்கள் திருமண சட்டமூலத்திற்கு மகாராணி ""


இங்கிலாந்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துக்கொண்டு சேர்ந்து வாழ்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வந்தது.
பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் சில மாநிலங்கள் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு அங்கீகாரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை வலுப்பெற்றது.
இதுதொடர்பாக ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கிடையே கருத்து பேதம் ஏற்பட்டதால் இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடித்தது. பல ஆண்டு கால தடைகளை முறியடித்து பாராளுமன்ற கீழ்சபையில் ஓட்டெடுப்பின் மூலம் இந்த மசோதா வெற்றி பெற்றது.
மேல்சபையான பிரபுக்கள் சபையில் சிறிய விவாதத்திற்கு பின்னர் ஓட்டெடுப்பு இல்லாமல் இந்த மசோதா நிறைவேறியது.
இங்கிலாந்து நாட்டு சட்டப்படி, எல்லா மசோதாக்களும் இங்கிலாந்து ராணியின் ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டமாக முடியும். எனவே, இந்த சட்ட மசோதா ராணியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இந்த மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்கான அறிவிப்பு நேற்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட போது எம்.பி.க்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இதனையடுத்து, ஓரின சேர்க்கையாளர்கள் தேவாலயங்களில் திருமணம் செய்துக்கொண்டு சேர்ந்து வாழ்வதற்கு இங்கிலாந்தில் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் அடுத்த (2014) ஆண்டு துவக்கத்தில் முதல் ஓரினச் சேர்க்கையாளர் திருமணம் இங்கிலாந்தில் நடைபெறும் என தெரிகிறது

5520 லட்சம் கோடி ரூபாய் கணக்கில் வந்ததால் இன்ப அதிர்ச்சி!!


அமெரிக்காவை சேர்ந்த கிரிஸ் ரெனால்ட்ஸ்(56) என்பவர் பழங்கால கார் உதிரி பாகங்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வருகிறார்.
இணையதளம் மூலமாக இந்த தொழிலை செய்ய வசதியாக 'ஆன் லைன் பேங்கிங்' எனப்படும் உடனடி பணப் பறிமாற்ற நிறுவனமான 'பே பால்' நிறுவனத்தில் இவர் கணக்கு தொடங்கியுள்ளார்.
சென்ற மாதத்தின் கணக்கு இறுதி அறிக்கையை பே பால் நிறுவனம் கிரிஸ் ரெனால்டுக்கு அனுப்பி வைத்தது.
இதைக் கண்ட அவருக்கு இன்ப அதிர்ச்சியில் மூச்சே நின்று விடுவது போல் ஆகிவிட்டது. அவரது கணக்கில் கையிருப்பாக 92 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு 5 ஆயிரத்து 520 லட்சம் கோடி ரூபாய்)இருப்பதாக அந்த மாத அறிக்கை குறிப்பிட்டது.
பே பால் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கணக்கு வைத்திருக்கும் கிரிஸ் ரெனால்ட், 'இதுவரை இந்த கணக்கின் மூலம் மாதமொன்றுக்கு 100 டாலர்களுக்கு மேல் நான் வரவு - செலவு செய்தது கிடையாது.
என் கணக்கில் இவ்வளவு பெரிய தொகை இருப்பதாக அறிக்கை வந்ததும், நாம் வங்கிக்கு இவ்வளவு பணம் கட்ட வேண்டுமா? என்று பயந்து விட்டேன். பிறகுதான் என் கணக்கில் இந்த தொகை பற்றாகி இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக 'ஆன் லைன்' மூலம் என் கணக்கு விபரத்தை சரிபார்த்த போது எனது கையிருப்பு பூஜ்ஜியம் டாலராக இருந்தது' என்கிறார்.
கம்ப்யூட்டர் குளறுபடியால் இந்த தவறு நேர்ந்து விட்டதாக பே பால் நிறுவனம் அறிவித்துள்ளது.
உண்மையாகவே இவ்வளவு பெரிய தொகை உங்களுக்கு கிடைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? என்று அவரிடம் கேட்டபோது, 'நான் சமூக பொறுப்பு மிகுந்த குடிமகன். முதலில் அமெரிக்காவின் எல்லா கடனையும் அடைத்துவிட ஏற்பாடு செய்வேன்' என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார்