siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 20 ஜூலை, 2013

தீவிரவாதியின் 5 குழந்தைகள் குண்டு வெடித்து ?


ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதி தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த குண்டு வெடித்து ஒரு தீவிரவாதியின் குடும்பமே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாத கும்பலான தலிபான் இயக்கத்தின் பக்திக்கா மாகாண தளபதியாக இருப்பவன் அப்துல்லா. அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை கொல்லும் நோக்கத்தில் நேற்று முன்தினம் தனது வீட்டில் அப்துல்லா ரகசியமாக வெடி குண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தான்.
குண்டுகளை காய வைத்துவிட்டு அப்துல்லா வெளியே சென்றிருந்தபோது அவனது குழந்தைகள் அந்த வெடி குண்டுகளை எடுத்து பந்து போல் உருட்டி விளையாடின. சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனையடுத்து, மற்ற குண்டுகளும் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இந்த விபத்தில் அப்துல்லாவின் வீட்டில் இருந்த ஒரு பெண்ணும் அவனது 5 குழந்தைகளும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலியான குழந்தைகள் 3 முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ஒன்றிய கண்காணிப்பாளர்களை அழைக்கவும்-


 ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தேர்தல் கண்காணிப்பாளர்களை கொண்டுவருமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
தேர்தல் கண்காணிப்பாளர்கள் என்ற வகையில் அவர்களுக்கு உலகளாவிய அங்கீகாரம் உள்ளதால் அவர்கள் கருத்துக்கு கூடிய நம்பகத்தன்மை இருக்கும். இதை நாம் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம் என்று பவ்ரல் அமைப்பின் தலைவர் ஜெஸிமா இஸ்மெயில் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணையாளருடன் நான் தொடர்புகொண்டபோது ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் வரும் சாத்தியம் இன்னும் உள்ளது என்றும். ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளிலிருந்து கண்காணிப்பாளர்களை அழைப்பதை தான் நிராகரிக்கவில்லையென பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் றோகன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
சுதந்திர தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பைச்சேர்ந்த நேபாளம் பங்களாதேஷ் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் 10 பேரை பவ்ரல் அழைக்கவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
'ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு தேர்தல் செயன்முறையில் பங்குபற்றுவதற்கு பிரஜைகளை இணைத்துக்கொள்ளல்' எனும் திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் 88 677 அமெரிக்க டொலர்களை வழங்கும்போதே பவ்ரவ் அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு ஜப்பானிய தூதரகத்தில் நேற்று நடைபெற்றது. வட மாகாண சபைத்தேர்தலுக்காக 4500 தேர்தல் கண்காணிப்பாளர்களை பயிற்றுவிப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது