siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 24 ஜூலை, 2013

அஸ்தியை திருடிய வாலிபர்போதைப்பொருள் என நினைத்து


அமெரிக்காவில் உள்ள டென்னிசி நகரில் 28 வயதான வில்லியம்   என்ற வாலிபர் பக்கத்து வீட்டு கதவை உடைத்து ஒரு மர்ம பெட்டியை திருடினார்.
அந்த பெட்டியுடன் தனது பாட்டி வீட்டிற்கு தப்பி ஓடினார். ஆனால் அதில் அவர் எதிர்பார்த்த பொருள் இல்லாமல் பெரும் ஏமாற்றம் அடைந்தார்.
பிறகு வில்லியம்சை கைது செய்து விசாரித்ததில் அவர் கூறிய பதில் பொலிஸாரை வியப்படைய வைத்தது.
‘அந்த பெட்டியில் போதைப்பொருளை வைத்திருப்பதாக நினைத்து திருடினேன். ஆனால் அதில் அஸ்தி இருந்தது’ என்று கூறினார்.
பெட்டியின் உரிமையாளர் ஸ்டீவன் மிட்லே கூறுகையில்
அது தனது தாயின் அஸ்தி என்று தெரிவித்தார். அதை அவர் ஏன் பாதுகாத்து வருகிறார் என்பது தெரியவில்லை. இருப்பினும் வீடு புகுந்து திருடியதற்காக வில்லியம்சை பொலிஸார் கைது செய்தனர்

பிரதமரை கொலை செய்ய சதி முயற்சி!!!


பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை மனித வெடிகுண்டு மூலம் கொல்லும் சதி திட்டம் முறியடிக்கப்பட்டதாக பாகிஸ்தான் உளவுத்துறையினர் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ராஜா கிலானியின் மகன் ஹைதர் கிலானி கடந்த மே மாதம் மர்ம மனிதர்களால் கடத்தப்பட்டார்.
இது தொடர்பாக வசீரிஸ்தான் பகுதியில் இயங்கிவரும் தீவிரவாத அமைப்பினரை உளவுத்துறையினர் பிடித்து விசாரித்தபோது ரைவிண்ட் பகுதியில் உள்ள பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டை சுற்றி அவரை கொல்வதற்காக அனுப்பப்பட்ட தற்கொலை படை தீவிரவாதிகள் சுற்றி வருவதாக தெரிய வந்தது.
இதற்காக பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷரப், முன்னாள் பிரதமர் சவுக்கத் அஜீஸ் ஆகியோர் மீது வெற்றிகரமாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய மடியுர் ரஹ்மான், முஹம்மது யாசீன் ஆகியோர் நியமிக்கப்பட்டதாக விசாரணையில் தெரிந்தது.
இவர்கள் இருவரையும் உயிருடனோ, பிணமாகவோ ஒப்படைப்பவர்களுக்கு ரூ.30 லட்சம் சன்மானம் வழங்குவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் வீடு அமைந்துள்ள ரைவிண்ட் பகுதியில் உள்ள தப்லீகி ஜமாத் அலுவலக வளாகத்தில் தங்கியிருந்த தற்கொலை படையினர் செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு பொது தொலைபேசி மூலமாகவே பிரதமரின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
சுமார் ஒரு வார காலம் அங்கே தங்கியிருந்த அவர்கள் உளவுத்துறையினர் தேடும் தகவலை ரகசியமாக தெரிந்துகொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டதாகவும் இதன்மூலம் பிரதமரை கொல்ல நடத்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் உளவுத்துறையினர் தெரிவித்ததாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் 'எக்ஸ்பிரஸ் டிரிபியூன்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 

புயல் வீசலாம்! பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை!!



[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 02:38.54 பி.ப GMT ]
பிரான்ஸின் வடக்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனல் காற்று வீசலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலை படிப்படையாகக் குறைவடைந்து தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
கடும் மழையினால் வீதிகளின் மேலாக நீர் தேங்கியிருப்பதால், மக்கள் போக்குவரத்திற்கு சிரமப்படுகின்றனர். கட்டிடங்களினுள்ளும் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை மழையுடன் கூடிய கடுங்காற்று காணப்படுவதனால் புயல் ஏற்படும் சாத்தியம் அதிகளவில் இருப்பதாகவும், இது மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தினைக் கொண்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

{காணொளி, இணைப்பு)