siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 27 ஜூலை, 2013

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி: ரொறன்ரோவில் சம்பவம்


கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள ரொறன்ரோ பகுதியில் இளைஞன் ஒருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றச் இசம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞனே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் ஒன்ராறியோவின் விசேட புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
இதற்கிடையில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், டுண்டாஸ் வீதியை சுற்றி பொலிசார் நின்றுகொண்டிருந்ததாகவும், ஒரு பொலிசார் அவர்கள் ஒருவரைப் பார்த்து கத்தியைக் கீழே போடுமாறு கூறினார்கள்.
அதன் பின்னர் ஒரு பொலிஸ்காரர் 10 தடைவைகள் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டாகவும் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பத்திற்கு பின்னர் குறித்த நபரை வைத்திசாலைக்கு எடுத்துச்செல்ல முற்பட்ட போதிலும் அவர் இறந்துவிட்டதாக விசேட புலனாய்வுப் பிரிவினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும் இத்துப்பாக்கிப்பிரயோகத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை

மூன்று பெண்களை வீட்டுச் சிறையில் அடைத்து கற்பழித்த காமூகன்


அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 10 ஆண்டுகளாக மூன்று பெண்களை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்து கற்பழித்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தை சேர்ந்தவர் ஏரியல் காஸ்ட்ரோ(வயது 53).
இவன் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டிற்குள் மிச்சேல் நைட்(வயது 20 ),அமெண்டா பெர்ரி(வயது 17), கினா டிஜெசஸ்(வயது 14) என்ற மூன்று பெண்களை கிளீவ்லாந்து வீதிகளில் கடத்திச் சென்று தனது வீட்டிற்குள் சிறை வைத்திருந்தான்.
இவர்களை கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக வெளியே விடாமல் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக அடித்து துன்புறுத்தி வந்துள்ளான்.
இதில் பெண் ஒருவர் கர்ப்பமான போது, கருவை கலைக்கும் வரை அடித்து உதைத்து பட்டினி போட்டுள்ளான்.
இந்நிலையில் கடந்த மே மாதம், மூன்று பெண்களில் ஒருவர் தப்பித்து வந்த போது தான், இவனின் சுயரூபம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து விரைந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள் காஸ்ட்ரோவை கைது செய்ததுடன், மற்ற பெண்களையும், பெர்ரிக்கு பிறந்த ஆறு வயது சிறுமியையும் விடுவித்தனர்.
 

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில், காஸ்ட்ரோவுக்கு ஜாமினில் வெளியே வராதபடி, ஆயிரம் ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவனது சொத்துக்கள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

துருக்கி நாட்டை உளவு பார்த்த பறவையால் பரபரப்பு

 

துருக்கி நாட்டை உளவு பார்க்க வந்த பறவையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அண்டை நாடுகளை உளவு பார்ப்பதற்கு ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் துருக்கி நாட்டை உளவு பார்க்க பறவை ஒன்று எலாஷிக் மாகாணத்தின் அல்டினால்யா கிராமத்தில் வித்தியாசமாக பறந்து கொண்டிருந்தது.
அதைப்பார்த்த மக்கள் கிராம அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கவே உடனே அவர்கள் அந்த பறவையை பிடித்தனர்.
அதன் உடலில் ஒரு உலோகத்தினால் ஆன வளையம் பொருத்தப்பட்டிருந்தது.
அந்த வளையத்தில் “24311 டெல் அவி வுனியா இஸ்ரேல்” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
எனவே, எக்ஸ்ரே உள்ளிட்ட மருத்துவபரிசோதனை எடுத்து பரிசோதிக்கப்பட்ட பின்பு, மீண்டும் பறவை பறக்கவிடப்பட்டது.
துருக்கியை உளவு பார்க்க இஸ்ரேல் இப்பறவையை அனுப்பிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர்

குர்ஹாம் சாக்கி சம்பவத்திற்காக அமைச்சர் பசில்


பிரித்தானிய தன்னார்வ தொண்டர் குர்ஹாம் சாக்கீ படுகொலைச் சம்பத்திற்காக, இலங்iயின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வருத்தம் வெளியிட்டதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் தெரிவித்துள்ளார். குர்ஹாம் சாக்கீ படுகொலை மற்றும் அவரது ரஸ்ய காதலி தாக்கப்பட்டமைக்காக அமைச்சர் பசில் ராஜபக்ஷ மன்னிப்பு கோரியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியாக கேள்வி எழுப்ப உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பாராளுமன்றில் இது குறித்து கேள்வி எழுப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

குர்ஹாம் சாக்கீ கொலை குறித்த விசாரணைகள் நிறைவடையாவிட்டால் அது குறித்து பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது கேள்வி எழுப்ப வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 2011ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினமன்று குர்ஹாம் சாக்கீ மற்றும் அவரது ரஸ்ய காதலி தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் தன்னார்வ தொண்டரான குர்ஹாம் சாக்கீ படுகொலை செய்யப்பட்டார்

தடுப்பு முகாமிலிருந்து இலங்கையர்கள் தப்பியோட்டம்


இந்தோனேஷிய தடுப்பு முகாமொன்றிலிருந்து இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்தோனேஷியாவின் சுகாபுமி என்னும் தடுப்பு முகாமிலிருந்து இவ்வாறு இலங்கையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

மூன்று இலங்கையர்களும், மூன்று ஈரானியர்களும் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த முகாமில் 66 புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தற்போது 60 புகலிடக்கோரிக்கையாளர்களே இந்த முகாமில் இருப்பதாகவும், ஆறு பேர் தப்பிச் சென்றுள்ளதாகவும் முகாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாருக்கும் தெரியாமல் எவ்வாறு குறித்த இலங்கை மற்றும் ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பிச் சென்றாhகள் என்பது புரியவில்லை என முகாம் பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது