siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 7 ஆகஸ்ட், 2013

பறக்கும் சைக்கிளை உலகின் முதல் கண்டுபிடித்து லண்டன்


 
 லண்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகளான, ஜான் போடன் மற்றும் யானிக் ரீட் ஆகியோர் இணைந்து உலகில் முதல் பறக்கும் சைக்கிளை வடிவமைத்து சாதனைப்படைத்துள்ளனர்.
பல ஆண்டுகளாக பறக்கும் சைக்கிளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்ட இவர்கள் இதன் பயனாக குறைந்த எடையும் அதிக திறனும் உடைய காற்றாடியும் இறக்கைகளும் பொருத்தப்பட்ட சைக்கிளை வடிவமைத்து உள்ளனர்.
பயோ டீசல் மூலம் சைக்கிளை இயக்குவதற்கான சிறிய இன்ஜின் வடிவமைக்கப்பட்டு அதில் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த இன்ஜின் மூலம் இயக்கப்படும் சைக்கிளானது, சற்று உயரத்தில் பறக்க ஆரம்பித்தவுடன் காற்றின் உதவியுடன் காற்றாடி சுழல ஆரம்பிக்கிறது.
இதனால் குறைந்த எடையில் வடிவமைக்கப்பட்ட சைக்கிள் காற்றின் உதவியுடன் பறக்கிறது. அதிக எரிபொருள் செலவில்லாமல் 40 கி.மீ., வேகத்தில் இயங்கும் இந்த சைக்கிள் தரையிலிருந்து 4,000 அடி உயரம் வரை பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதன் வடிவமைப்பாளர்கள் பறக்கும் சைக்கிளை மேலும் நவீனப்படுத்தி உலக அளவில் இதை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளனர். பலரையும் அணுகி அதற்கான நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். இந்த பறக்கும் சைக்கிளை இயக்க லைசென்சு எதுவும் தேவையில்லை என்பதே இதன் சிறப்பம்சமாகும்

தனது தூதரங்களை அமெரிக்கா, மூடக் காரணம் என்ன?


அல்கைதா இயக்கத் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலே அமெரிக்க தூதரங்கள் மூடப்படுவதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்கைதா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் சவாஹிரி இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
செம்டம்பர் 11 இரட்டைக் கோபுரக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் இவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாகவே வடஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள தூதரங்களை மூடியதாக அமெரிக்கா முன்னர் கூறியிருந்தது.
சுமார் 20 அமெரிக்க தூதரங்கள் மற்றும் கன்சியூலர் அலுவலகங்கள் நேற்று முன்தினம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அபுதாபி, அமான், கெய்ரோ, ரியாத், டஹ்ரான், ஜேட்டா, டோஹா, டுபாய், குவைத், மனாமா, மஸ்கட், சனா மற்றும் த்ரிப்போலி ஆகிய நகரங்களிலுள்ள இராஜதந்திர அலுவலகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதேவேளை, யேமனிலுள்ள தமது இராஜதந்திர அலுவலகங்களை பல ஐரோப்பிய நாடுகள் தற்காலிகமாக மூடியுள்ளதுடன், பிரித்தானியா தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது