siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 19 நவம்பர், 2013

றொரண்டோ மேயரின் அதிகாரம் பறிப்பு



    கனடாவில் றொரண்டோ நகர மேயரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
கனடாவின் றொரண்டோ நகர மேயர் ராப் போர்டின் சில அதிகாரங்கள்
பறிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக,
1. அலுவலக பட்ஜெட் குறைக்கப்பட்டு மீதமுள்ளவைகள் 2013ல் உள்ள காலாண்டுக்கு மாற்றப்பட்டு, ஜனவரி 1ம் திகதி 2014 முதல் உதவி மேயரின் பெயருக்கு மாற்றம் செய்யப்படுகின்றது.
2. மேயரின் உதவியாளர் வேலைமாற்றம் செய்யப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட உள்ளார்.

3. முதலில் பேசும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.
4. அவையின் நிர்வாக குழுத்தலைவர் என்ற பதவி பறிக்கப்பட்டுள்ளதுடன், தலைவர்களை நியமிக்கவும், நீக்கவும் இருந்த அதிகாரம் பிடுங்கப்பட்டுள்ளது.
5. துணை மேயரை நியமிக்க அல்லது பதவியிலிருந்து நீக்க இருந்த அதிகாரமும் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு சாதாரண அங்கத்தினரை போன்று செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மேயர், கூடவே இருந்து குழிப்பறிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திடீரென என்னை பதவியிலிருந்து நீக்குவதற்கு கவுன்சிலர்கள் செய்த சதிச்செயல் என்றும் விமர்சித்துள்ளார்.
 

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாரிக்கும் ஆளில்லா விமானம்


ஈரான் அணு ஆயுதங்களை குவித்து வருவதாக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டிவருகின்றன.
இதனால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் மிரட்டி வருகிறது. ஈரானுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஈரான் தனது புதியவகை விமானம் ஒன்றை இன்று காட்சிக்கு வைத்தது. 30 மணி நேரம் வானில் வலம் வரக்கூடிய இந்த மிகப்பெரிய ஆளில்லா விமானம் விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படும். அது இஸ்ரேல் வரை சென்று தாக்க வல்லமையுடையதாகும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் விஞ்ஞானிகள் வடிவமைத்து தயாரித்துள்ள இந்த பொட்ராஸ் ஆளில்லா விமானம் 25,000 அடி உயரத்தில் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்குதல் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் வல்லமை படைத்ததாகும் என்று கூறப்படுகிறது.

ஈரானுக்கு எதிராக பல்வேறு தடைகள் இருந்தும், எமது விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ள இந்த ஆளில்லா விமானம் ஈரான் ராணுவத்திற்கு அதிக பலம் அதிகரிக்கும் என்றும் ஈரான் கூறியுள்ளது.

முன்னதாக ஈரான் தயாரித்த ஷாஹத்- 129 என்ற ஆளில்லா விமானம் 24 மணி நேரம் வரை பயனித்து அதே 2000 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடியதாகும்.

புயலால் உருக்குலைந்த பிலிப்பைன்சுக்கு நிதியுதவி


சமீபத்தில் பிலிப்பைன்சை தாக்கிய ஹையான் புயலுக்கு, நாடே உருக்குலைந்து விட்டது.

தக்லோபான் நகரில் மின்சார அடியோடு துண்டிக்கப்பட்டதால் இரவில் தெருவிளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கி கிடக்கிடது. இதனால் 3 ஜெனரேட்டர்களை இயக்கி நேற்று தெருவிளக்குகளுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது.

இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் கார்லோஸ் கூறுகையில், தற்போது 4 கிலோ மீட்டர் தூரம் மின்சாரம் கொடுத்துள்ளோம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் நகர் முழுவதும் மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புயல் பாதித்த பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உலக வங்கி ரூ.3 ஆயிரம் கோடி(500 மில்லியன் டாலர்) நிதி உதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது