Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 25 நவம்பர், 2013

ஜேர்மன் பத்திரிக்கையாளர் மர்ம மாயம்

ஜேர்மன் நாட்டை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் எகிப்தில் காணாமல்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனில் ஹமீத் அப்தல் என்பவர் பத்திரிக்கையாளராக பணிபுரிகிறார். மேலும் இவர் 2009ம் ஆண்டில் இஸ்லாமியம் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்நிலையில் இவர் அல் அக்ரா பூங்காவில் அருகில் இருந்தபோது திடீரென காணாமல் போயுள்ளார்.
இவர் இஸ்லாமியர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
 

உலகில் முதன்முறையாக இஸ்லாத்திற்கு தடை! மசூதிகளை இடிக்க உத்தரவு


உலக நாடுகளிலேயே முதன் முறையாக இஸ்லாம் மதத்துக்கு அங்கோலா நாடு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து அங்கோலா நாட்டின் கலாசாரத்துறை அமைச்சர் ரோசா க்ரூஸி சில்வா கூறுகையில், நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சகம் இஸ்லாத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை இஸ்லாத்துக்கு அங்கோலாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை மசூதிகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
இத்தடையின் ஒருபகுதியாக நாடு முழுவதும் இருக்கும் மசூதிகள் இடிக்கப்படும்.
இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அங்கோலா ஜனாதிபதி ஜோஸே ஈடுர்டோ, இந்நாட்டில் இஸ்லாமிய செல்வாக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இத்தகைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
 

திடீரென தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு

சிறியரக வாடகை விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம் இதர வாகன வரிசைகளுடன் ஓடிய சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பால்மவுத் பகுதியை சேர்ந்த சச்சின் ஹெஜெஜி என்பவர் தனியார் வாடகை விமான நிறுவனத்திடம் இருந்து சிறியரக 'செஸ்னா' விமானத்தை வாடகைக்கு எடுத்தார்.

வாட்டர் வில்லியில் இருந்து போர்ட்லேண்ட் நோக்கி அவர் பறந்துக் கொண்டிருந்த போது விமான இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் இயந்திரம் இயக்கம் முற்றிலுமாக நின்றுவிட்டது.
அவ்வேலையில் விமானம் கம்பர்லேண்ட் நெடுஞ்சாலைக்கு மேலே வானத்தில் பறந்துக் கொண்டிருந்தது. உடனடியாக தரையிறங்கா விட்டால் விமானம் கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் எனனபதை உணர்ந்த விமானி, வாகன போக்குவரத்து மிகுந்த போர்ட்லேண்ட் நெடுஞ்சாலையில் விமானத்தை இறக்கினார்.

விமானம் சாலையில் இறங்குவதை கண்ட இதர வாகன ஓட்டிகள் திகைத்துக் போய் தங்களது வாகனங்களை ஓரம்கட்டி விட்டு விமானம் செல்ல வழி விட்டனர்.
விமானத்தின் இயந்திரம் இயக்கம் இழந்து சில கிலோமீட்டர் தூரம் வரை ஓடி சாலை தடுப்பு சுவற்றின் மீது மோதி நின்றது.
எனினும் இந்த சம்பவத்தினால் எந்தவித விபத்தும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.