Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 30 நவம்பர், 2013

பிரான்சில் உயிரை விட்ட பிரித்தானிய தம்பதி

பிரான்சில் இரண்டு லாரிகளுக்கிடையே நசுக்கப்பட்டு 54 வயதுடைய பிரித்தானிய தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வட பிரான்ஸில் இன்று 11.30 மணியளவில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து நடந்தபோது இரண்டு லாரிகள் சடுதியாக நிறுத்தப்பட்டபோது எதிரே வந்த தம்பதியினர் பயணம் செய்த கார் நசுக்கப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே பிரித்த்தானிய தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். மேலும் வாகன ஓட்டுனர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இரண்டு ஓட்டுனர்களும் எங்களது பாதுகாப்பில் உள்ளனர் என்றும் அவர்களுக்கு மது பரிசோதனைகள் நடத்தப்பட்டன. எனினும் அவர்கள் மது அருந்தவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
 

எச்.ஐ.வி ஆராய்ச்சிக்காக மில்லியன் கணக்கில் பணம் ஒதுக்கீடு

 
எச்.ஐ.வி எனப்படும் உயிர்க்கொல்லி நோயை குணப்படுத்துவதற்காக கனடிய அரசாங்கம் 10.7 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து கனடிய சுகாதாரத் துறை அமைச்சர் றொனா அம்ப்றோஸ் கூறுகையில், எச்.ஐ.வி-யை குணப்படுத்துவதற்காக அரசாங்கம் 10.7 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 5 ஆண்டுத் திட்டங்களுக்கு இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், ஆராய்ச்சி நிலையமானது கிட்டத்தட்ட 8.7 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

71,000 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும், இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட 11 சதவிகிதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.