siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 3 டிசம்பர், 2013

அமெரிக்காவில் நோயை பரப்பிய மருத்துவருக்கு 39 வருட சிறை

 அமெரிக்காவில் ஊசி மூலம் மஞ்சள் காமாலை நோயை பரப்பிய மருத்துவருக்கு 39 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூஹம்ப்ஷியர் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் கியாட் கோவ்ஸ்கி (34). இருதய மருத்துவரான இவர், 3 மாகாணங்களில் 18 மருத்துவமனைகளில் மாறி மாறி பணி புரிந்தார்.
இந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டில் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்த போது அவரை பொலிஸார் கைது செய்தனர். 46 பேருக்கு மஞ்சள் காமாலை நோயை பரப்பியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் தடை செய்யப்பட்ட மருந்துகளை பலருக்கு செலுத்தியதும், பல மருந்துகளை திருடியதும் தெரியவந்தது.

இவர் வலி நிவாரண மருந்துகளை திருடி அதனுடன் ஆல்கஹாலை கலந்து கெட்டுபோன ஊசி மூலம் நோயாளிகளின் உடலில் செலுத்தினார். அதனால் பலர் மஞ்சள் காமாலை, கல்லீரல் உள்ளிட்ட நோயினால் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட மருத்துவர் மீது நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 39 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
 

ஜனாதிபதி போர்க்குற்றவாளி: நவநீதம்பிள்ளை குற்றச்சாட்டு

சிரிய ஜனாதிபதி பஸார் அல் அசாத் உட்பட்ட உயரதிகாரிகளுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளுக்காக சாட்சியங்களையும் முன்வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

சிரியாவின் ஜனாதிபதி அஸாத் மீது ஐக்கிய நாடுகள் நேரடியாக போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை இதுவே முதல்தடவையாகும்.

ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின்படி சிரிய உள்நாட்டு போரில் ஓரு லட்சம் பேர் பலியாகியுள்ளனர்