Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 13 டிசம்பர், 2013

மேயர் மீது குற்றம்சாட்டிய பத்திரிகையாளர்

ரொறொன்ரோவின் மேயர் றொப் வோட்டிற்கு எதிராக நகர சபை நிரூபர் டானியல் டேல் வழக்கு தொடரவுள்ளார்.

கோன்றாட் பிளாக்குடன் இடம்பெற்ற தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் மேயர் வெளியிட்ட கருத்துரை இதற்கு காரணமென தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், மேயர் தன்னை சிறுவர்மீது பாலியல் கவர்ச்சி உள்ளவரென உட்கிடையாக கூறியுள்ளார்.

இதனால் அவர் மீது வழக்கு தொடரவுள்ளேன் என்று கூறியுள்ளார்.

துரோகம் செய்த மாமனாரை தூக்கில் போட்டார் அதிபர்


வடகொரியத் தலைவர் கிம் ஜோங் அன்னின், மாமனாரான, ஜாங் சொங் தேக், தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்டு நேற்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றது, ஊழல் செய்தது, மோசமான நடத்தை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டுக்கடங்காத அழிவுக்கு இட்டு செல்லக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டது போன்ற

குற்றச்சாட்டுகள் மீது நடந்த ஒரு விசேட ராணுவ தீர்ப்பாய விசாரணையில், அவர் தன் மீது சுமத்தப்பட்ட எல்லா குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டார்.அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டது.

சாதாரணமாக ரகசியமாகவே அனைத்தும் நடக்கும் இந்த நாட்டில், இவரது வீழ்ச்சி மட்டும் பரவலாக வெளியில் சொல்லப்பட்டது. வெளி உலகினால் சீர்திருத்தவாதி என்று கருதப்பட்ட இவர் வெளிநாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட புதிய ஒரு அரசை உருவாக்க திட்டமிட்டார் என்று வடகொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் அவரை விமர்சித்திருந்தது.

இவர் ராணுவ துணை தளபதியாக இருந்ததுடன் அதிபருக்கு அடுத்த 2வது இடத்தில் அதிகாரம்மிக்கவராக செயல்பட்டவர். தூக்கிலிடப்பட்ட ஜாங் அதிபர் கிம் ஜாங் யுனின் தந்தையுடன் பிறந்த அத்தை கிம் கியாங் ஹுயின் கணவர் ஆவார். அவர் கொல்லப்பட்டிருப்பது கிம் ஜோங் அன் தனது நிலையை பலப்படுத்திக்கொள்ள எடுத்திருக்கும் ஒரு முயற்சியாகவே பரவலாகப் பார்க்கப்படுகிறது.