Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 14 டிசம்பர், 2013

போராளிகளின் துப்பாக்கிச்சூட்டில் 18 தொழிலாளர்கள்

   கடந்த 2008 ஆம் ஆண்டில் ஈராக்கில் நடைபெற்ற இனவாதக் கலவரங்களே அந்நாட்டு வரலாற்றில் பெரியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு அங்கு மீண்டும் தொடங்கியுள்ள இனக்கலவரங்களும்,வன்முறைகளும் அமைதியின்மையையும், பாதுகாப்பு அபாயங்களையும் ஏற்படுத்துவதாக மக்களிடையே அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. நேற்று மாலை தலைநகர் பாக்தாதிலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ள இமாம் வைஸ் என்ற நகரத்தில் எரிவாயுக்குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த இணைப்பு ஈராக்கை அண்டை நாடான ஈரானுடன் இணைக்கும் திட்டமாகும். அப்போது மூன்று வாகனங்களில் வந்த ஆயுதமேந்திய போராளிகள் அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். அதில் ஈரானியத் தொழிலாளர்கள் 15 பேரும், ஈராக்கியர்கள் மூன்று பேரும் உயிரிழந்தனர். ஐந்து ஈரானியர்களும், ஒரு ஈராக் நாட்டவரும் காயமடைந்ததாகக் கூறப்படுகின்றது.
   
இதேபோல் பிற இடங்களில் நடைபெற்ற கார்குண்டு தாக்குதல்களில் 18 பேர் பலியானதாகவும், 37 பேர் காயமடைந்தள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஆதாரங்கள் அடிப்படையிலான ஏஃஎப்பி புள்ளிவிபரப்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பலியானவர்களின் எண்ணிக்கையை இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் முதல் எட்டு நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை தாண்டியுள்ளது தெரியவருகின்றது.
 

பாகிஸ்தான் அரசு தனது நன்றிகெட்ட புத்தியை நிலைநாட்டியுள்ளது:


வங்காள தேசத்தின் ஐமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் அப்துல்காதர் மொல்லா. கடந்த 1971ம் ஆண்டு வங்காள தேச விடுதலைக்காக நடந்த போரின்போது இனப்படுகொலைகள் நடந்தன. பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இக்குற்றங்களில் ஈடுபட்டதாக மொல்லாவுக்கு சுப்ரீம் கோர்ட் மரண தண்டனை விதித்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்க்கோரி மனு செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. அதைத்தொடர்ந்து அடுத்த சில மணி நேரத்தில் அவர் தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்பட்டதற்கு ஜம்மு காஷ்மீரில் இயங்கி வரும் ஹுரியத் கட்சி தலைவர் சையத் அலி ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், 'பாகிஸ்தான் நாட்டின் மீது அன்புடனும் விசுவாசத்துடனும் நடந்ததற்காக வங்காள தேசத்தில் ஜமாத்.இ-இஸ்லாமி தலைவர்கள் தூக்கிலிட்டு கொல்லப்படுகின்றனர்.
   
இதை எல்லாம் வெறும் ஊமை பார்வையாளனாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் பாகிஸ்தான் அரசு தனது நன்றிகெட்ட புத்தியை நிலைநாட்டியுள்ளது" என்று கூறியுள்ளார்