Link

ணக்கம் வருக வருக....

Pages

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

தரம் குறைந்த செயற்கை மார்பக! நிறுவன உரிமையாளருக்கு

செயற்கை மார்பக தயாரிப்பில் மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளருக்கு
 4 ஆண்டுகள்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தங்களது அழகுக்காகவும், நோயினால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழந்தவர்களும் அறுவை சிகிச்சை மூலம் செயற்கை மார்பகங்களை பொருத்திக் கொள்வதுண்டு.
பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் செயற்கை மார்பகங்களை தயாரிக்கின்றன.
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அழகுசாதன நிறுவனம் ஒன்று தயாரித்து விற்பனை செய்த செயற்கை மார்பகங்களை சுமார் 65 நாடுகளைச் சேர்ந்த 3,00,000 பெண்கள் உபயோகப் படுத்தியுள்ளனர்.

இதில் பயன்படுத்தப்பட்ட சிலிகான் ஜெல் என்ற தரம் குறைவாக இருந்ததினால், விரைவிலேயே கிழியத் தொடங்கியதாக புகார் அளிக்க தொடங்கினர்.
இதனை தொடர்ந்து செயற்கை மார்பகம் தயாரித்ததாக குறித்த நிறுவனத்தின் நிர்வாகிகள் நான்கு பேரைக் கைது செய்தது.

வழக்கு விசாரணையின் முடிவில், அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ஜீன் கிளாட் மாசுக்கு நான்கு வருட சிறைத்தண்டனையும், 75,000 யூரோக்கள் அபராதத் தொகையையும் விதித்து மார்செயில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வெள்ளிகிழமை மற்றும் 13ம் திகதியில் அபாயம் ஏற்படுமாம்! ஜேர்மன்

 ஜேர்மன் மக்கள் வெள்ளிகிழமை மற்றும் 13 என்ற திகதி வரும் நாட்களில் சாலைகளில் வாகனம் ஓட்டி செல்வது அபாயகரமானது என கருதுவதாக புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில் 13 என்ற திகதி மற்றும் வெள்ளிகிழமை என தொடர்ந்து மூன்று முறை வந்ததால் மொத்தம் 1,197 மக்கள் கொலை மற்றும் படுகாயத்திற்குள்ளாகியுள்ளனர்.

13 என்ற திகதியில் வரும் வெள்ளியன்று மட்டும் 1253 இறப்புகள் நிகழ்கின்றன .இந்நாளில் வாரயிருதி என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். இது மற்ற வெள்ளிகிழமைகளை காட்டிலும் மிகவும் ஆபத்தானது என்கிறது புள்ளிவிவரம்.

மேலும் மற்ற வார நாட்களில் விபத்துகள் மற்றும் படுகாய சம்பவங்கள் நிகழ்கின்றன. மொத்தம் 794 சம்பவங்கள் மற்றும் 1029 இறப்புகள் நடந்துள்ளன. ஆனால் இதை வெள்ளிகிழமையுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது 970 விபத்துகள் நேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது
 

சந்திரனில் தரையிறங்கியது; சோவியத்!!,

சீன விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது; சோவியத், அமெரிக்காவுக்கு அடுத்து சீனா சாதனை
சீனாவின் விண்கலமொன்று இன்று சனிக்கிழமை வெற்றிகரமாக சந்திரனில் தரையிறங்கியுள்ளது. Chang'e 3 என இவ்விண்கலத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் சந்திரனில் விண்கலமொன்றை வெற்றிகரமாக தரையிறங்கிய மூன்றாவது நாடாகியுள்ளது சீனா. இதற்குமுன் சோவியத் யூனியன், அமெரிக்கா ஆகிய நாடுகள் மாத்திரமே இத்தகைய விண்கலங்களை சந்திரனில் இறக்கியுள்ளன.

அத்துடன் 1976 ஆம் ஆண்டு சோவியத் விண்கலமொன்று சந்திரனில் தரையிறக்கப்பட்ட பின்னர்  சந்திரனில் விண்கலமொன்று தரையிறக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

இவ்விண்கலத்தில் உள்ள யுட்டு எனப் பெயரிடப்பட்ட ரோபோ வாகனமொன்று சந்திரனின் தரையில் பல மாதங்கள் திரிந்து ஆய்வுகளில் ஈடுபடவுள்ளது.