Link

ணக்கம் வருக வருக....

Pages

வியாழன், 30 ஜனவரி, 2014

லண்டனில் தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டை! பெண்ணை கைது

லண்டனில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில், பெண் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டனில் நீதிபதியாக இருந்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீதிபதி மீனா பட்டேல், இவரது மகள் குன்டல் பட்டேல்.

இவர் கனேரி வாஃபில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
கிழக்கு லண்டனில் வசித்து வரும் இவர், தாமெஸ் மாஜிஸ்திரேட் கோர்ட் வளாகத்தில் அமர்ந்திருந்த போது பொலிசார் கைது செய்தனர்.

கிழக்கு லண்டனில் நடைபெற்று வரும் பயங்கரவாத தடுப்பு சோதனையின் ஒரு பகுதியாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குன்டல் இன்று வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், 36 வயதாகும் அப்பெண் ஜனவரி 26ம் திகதி, பயங்கரவாத தடுப்பு சோதனையின் போது கைது செய்யப்பட்டார், பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் பாதுகாப்பு சட்டம் 2001ன் கீழும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு லண்டனில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், மற்ற விபரங்களை வெளியிட முடியாது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குன்டல் பட்டேல் செய்த குற்றம் குறித்து பதிலளிக்க மறுத்த பொலிசார் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போது எந்த விபரமும் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர்களுது குடும்பம் பற்றி கருத்து தெரிவித்த அங்குள்ள மக்கள், அவர்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்று கூறியுள்ளனர்.
 

செவ்வாய், 28 ஜனவரி, 2014

பொருளாதாரத்தில் வலுவான நாடாக பாகிஸ்தான் மாறும்:

பாகிஸ்தான் எதிர்காலத்தில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர்களை சேர்த்து சீர்திருத்தங்கள் செய்து பொருளாதாரத்தில் வலுவான நாடக மாறும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோன் கெரி  தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல்முறையாக சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பை அடுத்து இந்த இருநாடுகளுக்கும் இடையேயான நம்பிக்கை வளர தொடங்கியது. ஆனால் அல்கொய்தா தலைவர் ஓசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின் இரு நாடுகளுக்கிடையே இருந்த இந்த நம்பிக்கை உடைய தொடங்கின.

எனினும் பல பில்லியன் டொலர் மதிப்பிலான ஆதரவுகளை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துள்ளது.

பாகிஸ்தான் மக்களுடன் ஒரு வலுவான உறவு வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது. இந்த இருநாட்டு கூட்டுறவால் ஆப்கான் போரை வெல்ல முடியும் என்று கெரி நம்பிக்கை தெரிவித்தார்
 

திங்கள், 27 ஜனவரி, 2014

செக்ஸ் அடிமைகளாக வைத்திருந்த கடாபி! புதிய ஆவணப்படம் வெளியானது

 லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி சிறுமிகளை கற்பழித்து செக்ஸ் அடிமைகளாக வைத்திருந்தார் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு ஆப்ரிக்கா நாடான லிபியாவில் 42 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி, மக்கள் போராட்டத்தின் விளைவாக கடந்த 2011ம் ஆண்டு கொல்லப்பட்டார்.

இவர் ஆட்சியின்போது நூற்றுக்கணக்கான சிறுமிகளை கற்பழித்து அவர்களை தனது செக்ஸ்காக பயன்படுத்தி தொந்தரவு செய்துள்ளார் என்று புதிய தகவலை நியூ பி.பி.சி. 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

மேலும் டெய்லி மெயில் பத்திரிக்கை தகவலின் படி, கடாபியின் உத்தரவின்படியே பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த மாணவிகள் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடாபி சிறுமிகளை கற்பழித்து கொடுமைபடுத்தியதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மேலும் பல கொடுமைகளை சிறுமிகளுக்கு கொடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வாதிகாரி மறைவிடத்தில் இருந்து தப்பிய பெண்ணின் மூலம் இந்த தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
இந்த ஆவணப்படம் “ஸ்டோரிவில்லே: மேடு டாக் - கடாபியின் சீக்ரெட் உலகம்” என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
 

ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டன்

 அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட செய்வதற்கு ஆதரவாக நிதி வசூலை தொடங்கப்போவதாக அரசியல் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

2008-ம் ஆண்டு ஜனநாயக கட்சிக்குள் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தலில் ஹிலாரி தோல்வியடைந்தார்.

அதில் வெற்றி பெற்ற ஒபாமா, பின்னர் அதிபர் தேர்தலிலும் வெற்றி வாகை சூடினார். அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் இம்முறை ஹிலாரி கிளிண்டன் நிறுத்தப்படலாம் என பரவலாக பேச்சு எழுந்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஹிலாரி,

"தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. அதில் போட்டியிடுவது தொடர்பான எனது முடிவை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிப்பேன்" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரியாரிட்டிஸ் யு.எஸ்.ஏ. ஆக்சன் என்ற லாப நோக்கமற்ற அரசியல் அமைப்பு, ஹிலாரி கிளிண்டன் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவாக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த செல்வந்தர்களிடம் நிதி திரட்டும் பணியை விரைவில் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது.

வியாழன், 23 ஜனவரி, 2014

குழந்தைகளுக்கு தடை விதித்த பிரதமர்

இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கமரூன் தனது குழந்தைகளுக்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூனின் குழந்தைகள் நான்சி, எல்வென் மற்றும் புளோரன்ஸ்.
இவர்களுக்கு கமரூன் பல்வேறு தடைகளை விதித்துள்ளார், முக்கியமாக காலை வேளையில் தொலைக்காட்சி மற்றும் வார விடுமுறை நாட்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்ககூடாது என கூறியுள்ளார்.
எப்போதும் டிஸ்னி சேனலை விரும்பி பார்க்கும் குழந்தைகள் தற்போது, இயற்கை சார்ந்த நிகழ்ச்சிகளை மட்டுமே கண்டுகளிக்கின்றனர்.
கமரூனின் மகள் நான்சி படம் வரைவதில் ஆர்வம் உள்ளவராகவும், மகன் எல்வென் கால்பந்து மற்றும் ரக்பி ஆகிய விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவராகவும் மாறியுள்ளனர்.
இந்த தடை அவர்களை வேறு ரசனைகள் கொண்டவர்களாக மாற்றியுள்ளது என்று கமரூன் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
 

  

சனி, 18 ஜனவரி, 2014

சுவிஸை விட அமெரிக்காவையே பிடிக்கும்: ராக் ஸ்டார் ஜானி ஷாலிடே


சுவிட்சர்லாந்தை விட அமெரிக்காவில் வாழ்வதையே விரும்புகிறேன் என்று பிரபல ராக் பாடகர் ஜானி ஷாலிடே தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு நாட்டின் மிகப் பிரபலமான ராக் பாடகர் ஜானி ஷாலிடே பாடகர் மட்டுமல்லாமல், நடிகரும் ஆவார், இவர் தனது 70 வயதிலும் மேடைக் கச்சேரிகளிலும், பிரெஞ்சுத் திரைப்படங்களிலும் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் நாற்பது வருடங்களாக ராக் ஸ்டாராக பிரெஞ்சு நாட்டு மக்களின் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இவர், தான் சேர்த்து வைத்த பணத்தில் சுவிட்சர்லாந்திலுள்ள GSTAAD என்ற பெரிய வாசஸ்தலத்தை விலைக்கு வாங்கியிருந்தார்.

இதனால் பிரெஞ்சு அரசாங்கம் இவர் மீது வருமான வரி விதித்திருந்ததால், வருமான வரியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பிரெஞ்சு நாட்டிலிருந்து, சுவிஸ் நாட்டிற்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டிலுள்ள GSTAADஇல் 2006ம் ஆண்டு குடி புகுந்தார்.

சுவிட்சர்லாந்தின் வருமான வரித்திட்டத்தின்படி, சுவிட்சர்லாந்தில் குடிபுகும் பணக்கார வெளிநாட்டவர்கள் 6 மாதங்களும் 1 நாளும் நிரந்தரமாகத் தங்கியிருந்து நிரந்தர குடியுரிமை பெற்றிருந்தால், அவர்களுக்கு வருமான வரியில் நிறையச் சலுகைகள் அளிக்கப்படுகிறது.

அவர்களது செலவினைப் பெறுத்து, ஒரு குறிப்பிட்ட அளவு வருமான வரி கட்டினால் போதுமானது, இந்த வரிச்சலுகையைப் பெறவே ஜானி ஷாலிடே இங்கு கொஞ்சக் காலம் வாழ்ந்துள்ளார்.
ஆனால், சுவிஸ் வருமானத் துறை அதிகாரிகள் இவர் தொடர்ச்சியாக ஆறு மாத காலங்களாக சுவிட்சர்லாந்தில் இருக்க இயலாமல் வேறு இடங்களுக்கு பிரயாணம் செய்திருந்ததால், இவருக்கு வருமான வரியில் சலுகைகள் அளிக்கவில்லை.

இதனால் கோபமடைந்த ஜானி ஷாலிடே தன்னுடைய இருப்பிடத்தை சுவிட்சர்லாந்திலுள்ள GSTAAD ஐ விட்டு அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவிற்கு மாற்றிவிடப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் கலிபோர்னியாவில் வாழ்வதையே விரும்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 16 ஜனவரி, 2014

சீனப்பிரஜைகள் ரூ.77 இலட்சத்தை கடத்த முயன்ற இருவர் கைது


ரூ.77 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை தங்களுடைய பயணப்பையில் வைத்து சீனாவுக்கு கடத்துவதற்கு முயன்ற சீனப்பிரஜைகள் இருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ்  நீண்ட நாட்களாக  கடமையாற்றுபவர் என்றும் மற்றவர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அவருடைய நண்பன் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

கடத்தல் கும்பலுக்கு உதவிய மருத்துவருக்கு சீனாவில்

   சீனாவின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள சான்ஷி நகரில் மருதுவமனையில் இருந்து குழந்தைகளை கடத்த கடத்தல் கும்பலுக்கு உதவியாக இருந்த மருத்துவரை கடந்த சில வாரங்களுக்கு முன் கைதுசெய்தனர். இந்நிலையில் அந்த மருத்துவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இன்று அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.

திங்கள், 13 ஜனவரி, 2014

ஹெலிகொப்டர் விபத்து! - ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர்


கொலம்பியாவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். கொலம்பியாவில் தனியார் ஹெலிகொப்டர் ஒன்று ராணுவ பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. அந்த ஹெலிகொப்டர் நாட்டின் வடமேற்கு பகுதியில் பொகடாவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்த போது அனோரி என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகொப்டரில் பயணம் செய்த 5 பேரும் பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 2 ராணுவ வீரர்கள், ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு ராணுவ மதகுரு மற்றும் விமானியும் பலியானார் என்று ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். ஹெலிகொப்டர் விபத்துக்குள் சிக்கியதற்கான காரணம் தெரியவரவில்லை.

புதன், 8 ஜனவரி, 2014

துருக்கிய 350 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்

துருக்கிய அரசாங்கத்துடன் நெருக்கமானவர்களின் ஊழல்  விசாரணைகளை தொடர்ந்து,  தலைநகர் அங்காராவிலுள்ள 350 பொலிஸ் உத்தியோகத்தர்களை துருக்கி பணிநீக்கம் செய்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதிலிருந்து நூற்றுக்கணக்கான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பதவிநீக்கப்பட்டுள்ளனர் அல்லது இராஜினாமாச் செய்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்படி சோதனையின்போது தங்களது மகன்கள் தடுத்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து 03 அமைச்சரவை அமைச்சர்கள் இராஜினாமாச் செய்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரினதும் நீதித்துறையினரதும் கறைபடிந்த சதியென பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், கடந்த டிசெம்பர் மாதம் 17ஆம் திகதி தடுத்துவைக்கப்பட்டோரில் பிரதமருக்கு நெருக்கமான

 அரசாங்க அதிகாரிகளும் தொழில் அதிபர்களும் அடங்கியிருந்ததாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன

மைக்கேல் ஷுமாக்கர் மனைவியின் அன்பான வேண்டுகோள்

பார்முலா1 கார்பந்தயத்தில் 7 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தவர் மைக்கேல் ஷுமாக்கர். இவர் கடந்த டிசம்பர் மாதம் 29ம் திகதி பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது விபத்தில் சிக்கினார். தற்போது பிரான்சில் உள்ள கிரனோபில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலை குறித்த தகவல்களை சேகரிக்க தினமும் ஏராளமான செய்தியாளர்கள் அங்கு குவிகிறார்கள். அவர்களுக்கு ஷுமாக்கரின் மனைவி கோரினா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், ஷுமாக்கரை காப்பாற்ற போராடும் எங்களுடன் உங்களின் ஆதரவை தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

அதே நேரத்தில் மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நெருக்கடி இன்றி இருந்தால் தான் அவர்கள் தங்களது பணியை இயல்பாக செய்ய முடியும். எனவே நீங்கள் (ஊடகத்தினர்) இந்த அறிக்கை மீது நம்பிக்கை வைத்து, மருத்துவமனை பகுதியில் கூடுவதை கைவிட்டு வெளியேற வேண்டும். அது மட்டுமின்றி எங்களது குடும்பத்தினர் அமைதியுடன் இருக்க தனிமையில் விட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

"மோசடியான கேலிக்கூத்து" வன்முறைகளுக்கு மத்தியில்

எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், வங்கதேசத்தில் தேர்தல் கடும் வன்முறைகளுக்கு இடையே நடந்து வருகிறது.
வங்கதேசத்தில் இன்று நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடந்து வருகிறது.
எதிர்க்கட்சிகள் இத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், தொண்டர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே நடந்த மோதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் எதிர்க்கட்சியினர் யாரும் போட்டியிடாததால், ஆளும் கட்சியின் வேட்பாளர்களே வெற்றி பெற்றதாக முன் கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கவில்லை.
உள்ளுர் நேரப்படி காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடக்கிறது.
எதிர்க்கட்சியான, பங்களாதேஷ் தேசியக் கட்சி, சனிக்கிழமையிலிருந்து இரண்டு நாள் வேலை நிறுத்தத்துக்குக் குரல் கொடுத்திருக்கிறது.
தேர்தல்களை ஒரு "மோசடியான கேலிக்கூத்து" என்று எதிர்க்கட்சித் தலைவி கலீதா ஸியா வர்ணித்துள்ளார்.
தான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார், ஆனால் இதனை அரசு மறுத்துள்ளது.
இதற்கு முன்னரும் பல நாட்களாக நடந்த வன்முறை சம்பவங்களில் பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



 

வியாழன், 2 ஜனவரி, 2014

பிற நாடுகளின் மீது தாக்குதல் தொடுக்க தயாராகிறதா ஜப்பான்?

தங்கள் நாட்டு படைகள் பிற நாடுகளின் மீது படையெடுக்கு
இரண்டாம் உலகப் போரின்போது சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது ஜப்பான் படையெடுத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
ம் படி அரசியல் சாசனத்தில் ஜப்பான் மாற்றம் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைதொடர்ந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால், முப்படைகளும் நாட்டை பாதுகாப்பதற்கு மட்டுமே பயன்படும் என வரையறை செய்யப்பட்டது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய தீவுகள் விவகாரத்தில் சீனாவின் அதிரடி நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, ஜப்பான் அரசியல் சாசனத்தில் மாற்றங்களை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்ஸா அபே அளித்துள்ள பேட்டியில், 2020-ஆம் ஆண்டுக்குள் ஜப்பானின் அரசியல் சாசனத்தில் மாற்றம் வரலாம்.
சுய பாதுகாப்புக்காக மட்டுமே ராணுவம் என்ற நிலை மாறுகையில், இந்த பிராந்தியத்தில் குலைந்துள்ள அமைதியும், ஸ்திரத்தன்மையும் மீண்டும் நிலைநிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது புத்தாண்டு உரையில், நம் நாட்டின் அரசியல் சாசனம் இயற்றப்பட்டு 68 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்நிலையில், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப அதில் மாற்றம் கொண்டு வருவது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

புதன், 1 ஜனவரி, 2014

கடந்து வந்த பாதையின் சுவடுகள் (வீடியோ இணைப்பு)

டிசம்பர் 21, 2012 உலகம் அழிந்து விடும் என்ற மூட நம்பிக்கையை தகர்த்து எறிந்து, வெற்றிகரமாக 2013ம் ஆண்டையும் நிறைவு செய்து விட்டோம்.
இந்த ஆண்டில் ஏராளமான வளர்ச்சிகளை சந்தித்திருந்தாலும், உலகையே உலுக்கும் வண்ணம் நடந்தேறிய நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு
 

 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.2014


n2014
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.2014 அன்பர்கள் நண்பர்கள் உற்றார் உறவினர் அன்புள்ள வாசகர்களுக்கும் உறவு இணையங்களுக்கும் எமது நிலாவரை இணையம் நவற்கிரி இணையங்களின்சார்பாக மலர்ந்த.01-01.2014ஆண்டின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகலசெல்வங்களும் பெற்று . வாழ்க என்றும் நலமுடன் http://lovithan.blogspot.ch/2014/01/2014.html