siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 29 ஜூன், 2014

பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியில்

பிரான்ஸ் நாட்டில் ஹொட்டல்களுக்கு விதிக்கப்படும் வரிகள் 500 சதவிகிதமாக உயர்த்தப்போவது சுற்றுலாப் பயணிகள் மற்றும் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகரம் மற்றும் பிரபல சுற்றுலா தளமான பாரிஸ் நகரத்தில் தற்போது வரி 1 முதல் 1.50 யூரோக்களாக உள்ளது. ஆனால் திட்டமிட்டபடி சட்டம் நிறைவேறினால் வரி 8 யூரோக்கள் வரை உயரலாம் என எதிர்பார்க்கபடுகிறது. இது 3 நட்சத்திர விடுதிகளுக்கு 5 யூரோக்கள் வரையும், 4 மற்றும் 5 நட்சத்திர விடுதிகளுக்கு 8 யூரோக்கள் வரை உயரப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வருடத்திற்கு 140 மில்லியன் யூரோக்கள் அதிகம் வரும் வருமானத்தை மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்துகாக உபயோகப்படுத்த உள்ளது. மேலும், இந்த சட்டம் விதிக்கப்பட்டால் அரசு மற்றும் வணிகத்துறையினருக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும் என்றும், இது முற்றிலும் பொறுப்பற்ற செயல் எனவும் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மற்றைய செய்திகள்
 

வெள்ளி, 27 ஜூன், 2014

விமான நிறுவனங்கள் பெஷாவருக்கான சேவைகளை இடைநிறுத்தும்

 
பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கான சேவைகளை இடைநிறுத்தும் விமானச் சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எமிரேட்ஸ், எத்திஹாட் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து கட்டார் எயார்வேய்ஸ் நிறுவனமும் பெஷாவருக்கான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.
பாகிஸ்தான் இன்டர்நெஷனல் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மீதான தாக்குதலை அடுத்து, விமானச் சேவைகள் நிறுத்தப்படுகின்றன.
நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் பயணியொருவர் பலியாகியிருந்தார். இதன் எதிரொலியாக பாகிஸ்தானிய பொலிசார் பலரைக் கைது செய்திருந்தார்கள். எனினும், துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாக கருதப்படும் இடத்தை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என அவர்கள் தெரிவித்தார்கள்.
 

ஞாயிறு, 22 ஜூன், 2014

அதிகரிக்கும் மக்கள் தொகை இறப்பு விகிதம் குறைந்ததால்

tokai


ஜேர்மனியில் உள்ள பவேரியா மாநிலத்தில் மக்கள் தொகை கூடிக்கொண்டே போவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் பவேரியா மாநிலத்தில் வரும் 2032ம் ஆண்டில் 350,000 மக்கள் கூடுதலாக சேரக் கூடும் என பவேரியா மாநில புள்ளி விவர அலுவலகம் தெரிவித்துள்ளது. தென் ஜேர்மனியில் உள்ள பவேரியா மாநிலத்தில் 2012ம் ஆண்டில் இருந்த 12.5 மில்லியன் மக்கள் தொகை, வரும் 2023ம் ஆண்டில் 12.9 மில்லியனாக உயரும் என தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான காரணம் பிறப்பு விகிதம் இல்லை என்றும், இறப்பு விகிதம் குறைந்ததே காரணம் என தெரியவந்துள்ளது. கடந்த 2000 முதல் 2009ம் ஆண்டில் சராசரியாக ஆண்டிற்கு 9600, குடிபெயர்ந்திருந்தாகவும், ஆனால் கடந்த 2012ம் ஆண்டில் மட்டும் 76,000 வெளிநாட்டு மக்கள் குடிபெயர்ந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் பவேரியா மாநிலத்தில் 65 வயதிற்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை 15 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆனால் அதே சமயம் வடக்கு மாநிலமான பிரான்கோனியாவில் மக்கள் தொகை 18 சதவிகிதம் குறைந்துள்ளது.


!மற்றைய செய்திகள் "

வியாழன், 19 ஜூன், 2014

பிரிட்டனில் அமலுக்கு வந்தது புதிய சட்டம்!

கட்டாய திருமணத்திற்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்' என, பிரிட்டன் அரசு சட்டம் இயற்றி உள்ளது. பிரிட்டனில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் வாரிசுகளின் திருமணத்தை, வாரிசுகளின் ஒப்புதல் இன்றி, தாங்களாகவே முடிவு செய்து, திருமணம் செய்து வைக்கின்றனர். இதற்காக, தங்கள் சொந்த நாடுகளுக்கு சென்று, கட்டாய திருமணம் செய்து வைக்கின்றனர்.
   அத்தகையோர், பின், பிரிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்வது வாடிக்கையாக உள்ளது. இதையடுத்து, 'கட்டாய திருமணம் செய்து கொண்டால், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்; திருமணத்திற்கு நிர்பந்திக்கும் பெற்றோர், உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவர்' என, பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன் தலைமையிலான அரசு, புதிய சட்டம் பிறப்பித்து உள்ளது.

புதன், 11 ஜூன், 2014

ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்த உரிமை வழங்கியது

ஆய்வுகளை மேற்கொள்ள ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்த உரிமை வழங்கியது அமெரிக்க அரசு
உலகெங்கும் செயல்பட்டுவரும் தீவிரவாதக் குழுக்களை அழிக்க அமெரிக்க அரசு ஆளில்லா விமானங்களை இதுநாள் வரை செயல்படுத்திவந்துள்ளது. இப்போது முதன்முறையாக இந்த வகை விமானங்களின் வர்த்தகப் பயன்பாட்டிற்கும் அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. பன்னாட்டு ஆற்றல் சக்தி நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கும், அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏரோவிரோன்மென்ட்டுக்கும் அலாஸ்கா மாகாணத்தில் வான்வழி ஆய்வுகளை மேற்கொள்ள ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஏரோவிரோன்மென்ட் நிறுவனம் கடந்த 8ஆம் தேதியன்று பிபி நிறுவனத்திற்கான ஆய்வுகளை முதன்முதலாக மேற்கொண்டது. அலாஸ்காவில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் வயலான புரூதோ பேயில் உள்ள உபகரணங்கள், சாலை வழிகள் மற்றும் எண்ணெய்க்குழாய்களை இந்த விமானங்கள் ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளதாக விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வுகள் ஆளில்லா விமானங்களின் வர்த்தகப் பயன்பாட்டிற்கான முக்கிய மைல்கல்லாகும். மாறிவரும் தொழில்நுட்பத்தினால் இத்தகைய விமானங்களின் பயன்பாடுகளும் அதிகரிக்கும் என்று போக்குவரத்து செயலர் அந்தோணி பாக்ஸ் குறிப்பிட்டார். இந்த விமானப் பயன்பாடுகளின் மூலம் தங்களுடைய உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை எளிதாக நிர்வகிக்கக்கூடும் என்று பெட்ரோலிய நிறுவனம் கருதுகின்றது. இதன்மூலம் நேர விரயம் தவிர்க்கப்பட்டு, பாதுகாப்பு ஆதரவு அதிகரிப்பதுடன் நுணுக்கமான வடக்குப்புற சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்று அவர் கூறினார்.

வெள்ளி, 6 ஜூன், 2014

பழமை வாய்ந்த தேவாலயத்தை சூழ்ந்த தீ

ஜேர்மனியில் 650 வருட பழமை வாய்ந்த தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜேர்மனியின் நூரெம்பெர்க் நகரில் அமைந்துள்ள 650 வருட பழமையான செயிண்ட் மர்தாஸ் தேவாலயம் தீ விபத்தில் சேதம் அடைந்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் மிக வேகமாக செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர், தேவாலயத்தின் கூரை தீப்பிடித்து எரிந்து, மேலும் கட்டிடத்தின் உள்பகுதியில் சேதம் அடைந்தது.
இந்த தேவாலயத்தில், கட்டிட வேலைகள் நடந்துகொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடதக்கது.

திங்கள், 2 ஜூன், 2014

அமெரிக்க, இஸ்ரேலிய தூதரகங்களை தகர்க்க சதி

அமெரிக்க, இஸ்ரேலிய தூதரகங்களை தகர்க்க சதித் திட்டம் தீட்டிய பாகிஸ்தான் உளவாளியை இந்தியாவுக்கு நாடு கடத்த மலேசிய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 29ம் திகதி பாகிஸ்தான் உளவாளி என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் கியூ பிரிவு பொலிஸாரால் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் ஆகியவற்றை குண்டு வைத்து தகர்க்க சதித்திட்டம் தீட்டியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
ஜாகீர் உசேனின் ரகசிய டைரியை கியூ பிரிவு போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதில் முகமது உசேன் என்பவரது பெயரும் இடம் பெற்றிருப்பதும், அவரும், ஜாகீர் உசேனும் நெருங்கிய கூட்டாளிகள் என்பதும் தெரிய வந்தது. முகமது உசேனும் இலங்கையைச் சேர்ந்தவர்தான்.
இவரும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளோடு தொடர்பு வைத்திருந்தார் என்பதும், அவர்களின் உத்தரவின்பேரில் முகமது உசேனும் பாகிஸ்தானுக்காக உளவு பார்க்கும் சதிவேலையில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.
ஜாகீர் உசேனுடன், முகமது உசேன் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இருப்பதும், அப்போது இருவரும் சென்னையில் அமெரிக்கத் தூதரகம் மற்றும் பெங்களூரில் இஸ்ரேலிய தூதரகம் ஆகியவற்றை குண்டு வைத்து தகர்ப்பது குறித்து பேசி உள்ளதும் தெரியவந்தது.
மலேசிய பொலிஸார் முகமது உசேனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும், பெங்களூரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தையும் தகர்க்க தனக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பிடம் இருந்து உத்தரவு வந்ததாகவும், அதற்காக 2 பேருக்கு உதவி செய்யுமாறும் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.
இவரது கைது மற்றும் அவரிடம் நடத்திய விசாரணை பற்றிய விவரங்களை மலேசிய அரசு இலங்கையிடம் பரிமாறிக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், பிரான்சை தலைமையிடமாக கொண்ட சர்வதேச பொலிஸாரிடம் முகமது உசேன் கைது குறித்த தகவலை இந்திய தூதரகம் தெரிவித்து தொடர் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தது.
மேலும் மலேசிய அரசு முகமது உசேனிடம் நடத்திய விசாரணை குறித்த தகவல்களை தங்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறும், அது இந்த வழக்கில் தொடர் விசாரணைக்கு உதவும் என்றும் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது உசேனை இந்தியாவுக்கு கொண்டு சென்று சென்னை பொலிஸார் விசாரணை மேற்கொள்வதற்கு வசதியாக அவரை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மலேசிய அரசு மேற்கொண்டு வருகிறது