Link

ணக்கம் வருக வருக....

Pages

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

பஸ் விபத்தில் 9 பேர் பலி, 17 பேர் காயம்

 
அசாம் மாநிலம் நாகோனில் அரசு பஸ் விபத்துக்குள் சிக்கியதில் 9 பேர் பலியாகினர். 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அசாம் போக்குவரத்து துறைக்கு சொந்தமான பஸ் ஒன்று லாகிம்பூரில் இருந்து தலைநகர் கவுகாத்திக்கு சென்றுக் கொண்டிருந்தது. நாகோன் அருகே பஸ் வேகமாக சென்றபோது
பாலத்தில் மோதி விபத்துக்குள் சிக்கியது. இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர். 17 பேர் காயம் அடைந்துள்ளனர். என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்தான முழுதகவல்கள் வெளியாகவில்லை.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 25 அக்டோபர், 2014

நாடுகளில் இருந்து பலவண்ண பறவைகள் ஒரிசாவுக்கு வருகை

சைபீரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து 10,000க்கும் மேற்பட்ட பலவண்ண பறவைகள் இடம்பெயர்ந்து தங்கள் குளிர்காலத்தை அனுபவிக்க ஒரிசாவின் சிலிக்கா ஏரிக்கு வந்துள்ளன. முதலில் குறைவான பறவைகள் வந்தன. பின்னர் பறவையின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. சிலிக்கா ஏரி 1,100 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய உவர் நீர் ஏரி ஆகும்.
அது பறவை மற்றும் சுற்றுலா பயணிகள் கவரும் இடமாக கருதப்படுகிறது. சுமார் 10 லட்சம் புலம்பெயர் பறவைகள் அக்டோபர் மாதம் ஏரிக்கு வருகை தரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குளிர்காலம் முடிந்து மார்ச் மாதத்தில் பறவைகள் மீண்டும் தங்கள் நாடுகளுக்கு திரும்பி சென்று விடும் என்று பறவை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

காணொளியைப் பார்த்த கோடீஸ்வரர் ஜேம்ஸ் பெக்கர் கண்ணீர் விட்டார்!!

அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜேம்ஸ் பெக்கர், ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமையை வெளிப்படுத்தும் த நோ பயர்சோன் காணொளியை பார்த்து கண்ணீர்விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
க்ரவுன் இன்டர்நெசனல்ஸ் என்று மிகப்பெரிய சூதாட்ட மையத்தின் சொந்தகாரரான ஜேம்ஸ் பெக்கர், சிறிலங்காவில் 500 மில்லியன் டொலர்கள் பெறுமதியான கெசினோ ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்க திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில் அவரை நோ பயர் சோன் காணொளியை பார்வையிட்டு, சிறிலங்காவையும், ஈழத தமிழர்களையும் இலாபத்துக்கு அப்பால் சென்று நோக்குமாறு அவுஸ்திரேலிய அகதிகள் பேரவை கோரிக்கை விடுத்திருந்தது.
இதன்படி கடந்த வாரம் அவர் இந்த காணொளியை பார்வையிட்டதன் பின்னர், அகதிகள் பேரவையின் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த காணொளியை பார்த்து தமது இரத்தம் உரைந்து போனதாக அவர் இதன் போது கூறி இருக்கிறார்.
அத்துடன் சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 14 அக்டோபர், 2014

இலங்கைக்கு ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து கப்பல் அன்பளிப்பு..

ஜப்பானிய அரசாங்கம் தொள்ளாயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான கப்பல் ஒன்றை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.
ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (ஜெய்க்கா) மூலம் இந்தக் கப்பல் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் 50 மீட்டர் நீளம் கொண்டது. 624 தொன் எடை கொண்ட பொருட்களை ஏற்றிச் செல்லக் கூடியது. பல்தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தக் கப்பலுக்கு சயுர என்று பெயரிடப்பட்டுள்ளதுடன், மீன்பிடித்துறை அமைச்சிற்கு இக்கப்பல் கையளிக்கப்படவுள்ளது.
சயுர கப்பல் மூலம் இலங்கையின் மீன்பிடித்துறைமுகங்களை ஆழமாக்கும் பணிகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
சயுர கப்பலை உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு கையளிக்கும் நிகழ்வு வரும் சனிக்கிழமை மாலை 03 மணிக்கு திக்ஓவிட்ட மீன்பிடித்துறைமுகத்தில் நடைபெறவுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 7 அக்டோபர், 2014

எபோலா நோய் சிகிச்சை அளித்த நர்சுக்கு தாக்கியது

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா, நைஜீரியாவில் ‘எபோலா’ என்ற உயிர்க் கொல்லி நோய் பரவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 3,400 பேர் பலியாகி உள்ளனர். பல லட்சம் போர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஸ்பெயினை சேர்ந்த மத குருக்கள் மானுவேல் கார்சியா வியஜோ மற்றும் மினகல் பஜாரஸ் ஆகியோர் எபோலா நோய் தாக்கி சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இவர்களில் மானுவேல் கார்சியா வியஜோவுக்கு சியாரா லோனிலும், மினகல் பஜாரஸ்க்கு லைபீரியாவிலும் எபோலா நோய் தாக்கியது. இவர்களுக்கு ஸ்பெயினில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது, அவர்களுக்கு நர்சு ஒருவர் சிகிச்சை அளித்தார். அவருக்கு கடந்த வாரம் அவரும் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார்.
எனவே பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு ‘எபோலா’ நோய் பாதித்து இருப்பது தெரியவந்தது. எனவே, அவர் மாட்ரிட் அருகேயுள்ள அல்கார்கன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவரது நிலை சீராக இருப்பதாக ஸ்பெயின் சுகாதார மந்திரி அனா மாரூடா தெரிவித்துள்ளார். தாமஸ் டன்கான் என்பவரும், லைபீரியாவில் எபோலா நோய் பாதித்து அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனவே, அமெரிக்கா வரும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கடுமையாக பரிசோதிக்கப்படுவார்கள் என அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>