siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 15 ஜூலை, 2014

புத்தகத்தில் இடம் பிடித்த உலகின் மிக உயரமான டீன் ஏஜ் பெண்!

துருக்கியை சேர்ந்தவர் ருமேசா கெல்கி (17). இவர் 11வது வகுப்பு படித்து வருகிறார். இவரது உயரம் 7 அடி 9 இஞ்ச் ஆகும். வீவர் சிண்ட்ரோம் என்ற அபூர்வ நோயால் ருமேசா பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தான் இவர் அதிக உயரம் வளர்ந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதுவே அவருக்கு பெருமை சேர்த்துள்ளது. அதாவது உலகிலேயே மிக உயரமான 'டீன்ஏஜ்' பெண்
அதற்காக சமீபத்தில் அவரது சொந்த ஊரான சப்ரான் போலுவில் பாராட்டு விழா நடந்தது. அப்போது அவருக்கு அதற்கான கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த விழாவில் ருமேசா கூறியதாவது..
"நான் வெளியில் செல்லும் போது அனைவரும் என்னை வினோதமாக பார்ப்பார்கள். அதற்காக நான் மனசங்கடப்படுவதில்லை. மாறாக பெருமை கொள்வேன். உயரமாக இருக்கும் நான் மற்றவர்களை குனிந்து பார்ப்பதில் எனக்கு அலாதியான மகிழ்ச்சி ஏற்படும். ஒரு சில சிறந்தவர்களால் மட்டுமே கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற முடியும். அந்த வகையில் நானும் அதில் இடம் பிடித்து இருக்கிறேன் என்பதில் எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது" என்றார்.
 
மற்றைய செய்திகள்

 

செய்மதி தொலைபேசிகள் எப்படிக் கிடைத்தன?

புகலிடம் தேடி வந்த அகதிகளிடம் செய்மதித் தொலைபேசிகள் இருந்தமை குறித்து அவுஸ்திரேலியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அண்மையில் அவுஸ்ரேலிய கடற்பரப்பை படகு மூலம் சென்றடைந்த 153 அகதிகளிடம் செய்மதித் தொலைபேசிகள் காணப்பட்டன. இது தொடர்பில் அவுஸ்ரேலிய அரசாங்கம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அகதிகள் சட்டத்தரணிகளுடன் செய்மதி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு சட்டத்தரணிகளின் தொலைபேசி இலக்கங்கள் கிடைக்கப் பெற்றன என்பது குறித்தும் விசாரணை செய்யப்பட உள்ளது.
   இந்த தொலைபேசி உரையாடல்களை அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவினர் பதிவு செய்துள்ளனர். அகதிகளின் இந்த பயணம் திட்டமிட்ட அடிப்படையிலான சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கை என அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மற்றைய செய்திகள்