Link

ணக்கம் வருக வருக....

Pages

வியாழன், 17 ஜூலை, 2014

செர்பியா எல்லையில் தோன்றியது பாரிய பள்ளம்! !

 செர்பிய நாட்டின் யாமல் தீபகற்பகத்தில் திடீரென மெகா பள்ள தோன்றியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா - செர்பியா எல்லையான வடமேற்கு மாகாணத்தில் யாமல் தீபகற்ப பகுதி உள்ளது. இயற்கை எரிவாயு அதிகம் உள்ள நிலப்பரப்பு இப்பகுதி ஆகும். உலகத்தின் முடிவு எனவும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் மெகா சைஸ் பள்ளம் தோன்றியுள்ளது. 80 மீ அகலம் கொண்டதாகவும் இருந்தது.
   அதன் ஆழம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். திடீரென பள்ளம் தோன்றியது விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக உள்ளது.பூமிக்கடியில் உள்ள பாறைகள் இடம் பெயர்வதே இப்பள்ளத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
விஞ்ஞானிகள் அதிர்ச்சியில்!

மற்றைய செய்திகள்

இராக்கில் தவித்த புதுவை இளைஞர் மீட்பு

இராக்கில் வேலைக்காகச் சென்று, உள்நாட்டுப் போரால் சிக்கித் தவித்த புதுவையைச் சேர்ந்த இளைஞர் மத்திய அரசால் மீட்கப்பட்டு புதன்கிழமை வீடு திரும்பினார்.
புதுவை பெரியார் நகர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் ஷியாபுதீன் (35). கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி இராக் சென்ற அவர், குருதீஸ்தான் பகுதியில் உள்ள எக்ஸ்பெர்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில், பராமரிப்புப் பிரிவில் பணியாற்றி வந்தார்.
அங்கு உள்நாட்டுப் போர் மூண்டதால், அந்த நிறுவனம் மூடப்பட்டது. இதனால் வேலையின்றியும், அங்கிருந்து வெளியே செல்ல வழியின்றியும் அவர் தவித்து வந்தார்.
ஷியாபுதீனை மீட்கக் கோரி அவரது மனைவி மரியம்பி, தனது 2 பிள்ளைகளோடு வந்து, கடந்த ஜூன் 23-ஆம் தேதி புதுவை முதல்வர் ரங்கசாமியிடம் மனு அளித்தார்.
இந்நிலையில், மாநில அரசின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய வெளியுறவுத் துறையின் முயற்சியின் காரணமாக, புதுவையைச் சேர்ந்த ஷியாபுதீனும் தமிழகத்தைச் சேர்ந்த சிலரும், இராக்கிலிருந்து புதன்கிழமை தாயகம் திரும்பினர்.
காலையில் சென்னை விமான நிலையம் வந்த ஷியாபுதீன், அங்கிருந்து பேருந்தில் புதுவைக்கு வந்து சேர்ந்தார். அவரை மனைவி மரியம்பி மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
ஷியாபுதீனை மீட்க உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். இதனையடுத்து, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, ஷியாபுதீன் நன்றி தெரிவித்தார். மேலும், இராக்கில் தான் பணியாற்றிய நிறுவனத்தில் முடங்கியுள்ள பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

மற்றைய செய்திகள்

 

ஜனாதிபதி இரங்கல் மரணத்தை தழுவிய இராணுவ வீரர்...

பிரான்ஸ் நாட்டில் இராணுவ வீரர் ஒருவர் உளவு பணியிலிருந்த போது இறந்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரான்சின் வடக்கு மாலி நகரில் நேற்று உளவுப்பணியில் இராணுவ வீரர் ஒருவர் உளவுப்பணியில் ஈடுபட்டிருந்தபோது தற்கொலை செய்து கொண்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த இறப்பிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகை வருதத்தை தெரிவித்துள்ளது.மேலும் இறந்த வீரரின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்த ஜனாதிபதி ஹோலாண்டே அவருக்கு புகழாரமும் சூட்டியுள்ளார்.
இதேபோல் கடந்த ஜனவரி 2013ம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் 9 வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மற்றைய செய்திகள்