Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 28 ஜூலை, 2014

பிரான்ஸில் போதைப் பொருளால் உயிரிழந்த குடும்பம்

பிரான்ஸில் ஓட்டுநர் ஒருவர் போதைப் பொருள் உட்கொண்டு லொறி ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸின் கிழக்கு பகுதியில் லொறி ஓட்டுநர் ஒருவர் தவறான பாதையில் லொறியை ஓட்டியுள்ளார்.
அப்போது எதிரே வந்த காருடன், லொறி ஓட்டுநர் நேருக்கு நேர் மோதியதால் காரில் இருந்த பெண்ணும் அவரது குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்
இந்நிலையில் படுகாயமடைந்த இந்த ஓட்டுநரை மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் அளவிற்கு அதிகமான போதைப் பொருளை உட்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

மற்றைய செய்திகள்

சுட்டுக்கொலை பொலிஸ்: மக்களுக்கு 5,000 யூரோ சன்மானம்

 ஜேர்மனியில் பொலிசார் ஒருவர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனியின் ப்ராங்பெட் நகரை சேர்ந்த பொலிசார் ஒருவர், தனது குடும்ப உறுப்பினர்களுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிக்கொண்டிருந்த போது மர்மநபர்கள் சிலர் அவரை சுட்டுள்ளனர்.
தற்போது இந்த கொலை தொடர்பாக, பொலிசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொலையாளியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 5,000 யூரோ சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கொலை தொடர்பாக 87 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் கொலைக்கான காரணம் அறியப்படவில்லை.
 மற்றைய செய்திகள்