siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

எரிமலை வெடிக்கலாம் என்பதால் மக்கள் வெளியேற்றம்!

 ஐஸ்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய எரிமலையான பர்டர்புங்கா எரிமலை அமைந்துள்ள தென்மேற்கு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து புவியியலாளர்கள் 300க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களைக் கணக்கிட்டுள்ளனர். இந்த நிலை அதிர்வு நடவடிக்கை ஒரு எரிமலை வெடிப்பிற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். கடந்த 2010ஆம் ஆண்டில் அங்குள்ள எய்ஜப்ஜள்ளஜோகுல் எரிமலை வெடித்தபோது அதிலிருந்து சிதறப்பட்ட சாம்பல் துகள்களால் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு பெரும்பாலான ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்து மூடப்பட்டது. இப்போதும் எச்சரிக்கைக் குறியீட்டின் நான்காவது தர நிலையான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளதால் இதுபோன்றதொரு பாதிப்பு நிகழக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது.
   
தலைநகர் ரெய்க்ஜவிக்கிலிருந்து 300கி.மீ தொலைவில் உள்ள இந்தப் பகுதியில் மனிதக் குடியிருப்புகள் அதிகம் இல்லாதபோதும் அங்குள்ள தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகமாகக் காணப்படும். எனவே பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்தப் பூங்காவிற்கு வருபவர்களைத் தடை செய்து பூங்காவையும் மூடியுள்ளதாக அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று வரை இந்த எரிமலை அமைதியாகக் காணப்பட்டபோதிலும், இது வெடிக்கத் தொடங்குமேயானால் அட்லாண்டிக் வான் போக்குவரத்து இதனால் பாதிக்கப்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் .

 

பேச்சுவார்த்தையிலிருந்து இம்ரான் விலகல்

 பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கான், அப்போராட்டத்தைக் கைவிடுவது குறித்து அரசுடன் நிகழ்த்தி வந்த பேச்சுவார்த்தையிலிருந்து வியாழக்கிழமை விலகினார்.
அந்நாட்டின் மத குரு தாஹிருல் காத்ரியின் அவாமி தெஹ்ரிக் கட்சியும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதுகுறித்து விவாதிக்க அரசு விடுத்திருந்த அழைப்பை ஏற்று, இம்ரான் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.
இந்நிலையில் தற்போது அதிலிருந்து விலகியதுடன், இறுதிவரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளதன்மூலம், அரசுக்கு எதிரான தனது நிலையை அவர் மேலும் கடுமையாக்கியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் உத்தரவு: முன்னதாக, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு தலைமை வழக்குரைஞர் சல்மான் பட் தாக்கல் செய்திருந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “இது நிர்வாகம் சார்ந்த பிரச்னை. அரசுதான் சட்டத்துக்கு உள்பட்டு இந்த விவகாரத்தைக் கையாள வேண்டும்’ என்று தெரிவித்தது.
இதன் காரணமாகவே, இம்ரான் கான் தனது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் தீர்மானம்: இதற்கிடையே, பிரதமரை பதவி விலக
வலியுறுத்தி இம்ரான் கான், தாஹிருல் காத்ரி கட்சிகள் மேற்கொண்டுள்ள போராட்டத்துக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.
எதிர்க்கட்சியினர் தரக்குறைவாகவும், அவதூறாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசி வருவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிபருடன் ஷெரீஃப் சந்திப்பு: இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்தும், நிலைமையை சமாளிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்க அதிபர் மம்நூன் ஹுசைனை நவாஸ் ஷெரீஃப் சந்தித்தார்.
முக்கிய அரசுக் கட்டடங்கள் அமைந்துள்ள சிறப்புப் பாதுகாப்பு மண்டலத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து அதிபரிடன் அவர் எடுத்துரைத்தார்.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்