siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

பறக்கும் ஆளில்லா விமானங்கள்: பின்னணி என்ன?

 
பாரீஸ் நகரின் முக்கிய இடங்களில் ஆளில்லா விமானங்கள் பறந்து வருவதால் பொலிசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
பாரீஸின் முக்கிய பகுதிகளான அமெரிக்க தூதரகம்(Us Embassy), ஈஃபில் டவர்(Eiffel Tower), பிளேஸ் டி லா கான்கோர்டோ(Place de la Concorde) உள்ளிட்ட பகுதிகளில், கடந்த திங்கள் மற்றும்
 செவ்வாய் கிழமைகளில் மட்டும் சுமார் 5 ஆளில்லா விமானங்கள் பறந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் கூறியதாவது,
 தொடர்ந்து வானில் பறக்கும் இதுபோன்ற ஆளில்லா விமானங்களை செலுத்துபவர்கள் யார் என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இது பாரீஸில் தாக்குதல் நடத்தும்
 திட்டங்களில் தொடர்பு உடையதாக இருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.
மேலும், சிறிய ரக ஆளில்லா விமானங்களை எளிதாக வாங்குவது எளிது, தற்போது முக்கிய இடங்களில் அதனை பறக்க விடுவதால் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களின் பிரச்சனையாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் எலிஸ்(Elysee) அரண்மனையிலும், பிரான்ஸ் அணு உலைகள் உள்ள பகுதிகளிலும் இதே மாதிரியான 
ஆளில்லா விமானங்கள் பறந்தது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்க தூதரகம் மேல் பறந்த ஆளில்லா விமானம் தொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டுருக்கும் நிலையில், அதை செலுத்தியவரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என பொலிசார் 
கூறியுள்ளனர்.
விமான போக்குவரத்து மற்றும் விமான பாதுகாப்பு துறை அதிகாரியான கிறிஸ்டோப் நாடின்(Christophe Naudin) கூறுகையில், இதுபோன்ற ஆளில்லா விமானங்களை செலுத்தி பாரீஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராயப்படுகிறதா என பொலிசார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

திடீரென உள்ளாடையில் வெடித்த துப்பாக்கி குண்டு:!!!

 இரத்த வெள்ளத்தில் இறந்த பெண் அமெரிக்காவில் பெண் அரசியல்வாதி ஒருவர் தன் உள்ளாடையில் துப்பாக்கி குண்டு வெடித்ததால் பலியாகியுள்ளார். 
அமெரிக்காவில் உள்ள மிச்சிகன்(Michigan)மாநிலத்தில் வசிக்கும் கிரிஸ்டினா பாண்ட்(Christina Bond Age-55)என்ற பெண் அரசியல்வாதி குடியரசு கட்சியை சேர்ந்தவர்.
இவர் தனது உள்ளாடையில் கைத்துப்பாக்கியை வைத்துக் கொண்டு வெளியே செல்லும் பழக்கம் உள்ளவர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் அவர் தனது உள்ளாடையில் துப்பாக்கி வைக்கும் இடத்தில் கைத்துப்பாக்கியை வைத்து அணிந்துள்ளார்.
ஆனால் துப்பாக்கி சரியான இடத்தில் இல்லாததால், அவர் தலையை குனிந்தபடி அதை சரி செய்துள்ளார்.
அப்போது எதிர்பாரதவிதமாக துப்பாக்கியில் இருந்து வெடித்த குண்டு அவரது கண்ணில் பாய்ந்துள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

பஸ்-ரெயில் மோதல் 16 பேர் பலி!!

அமெரிக்கா மெக்சிககோவில் உள்ள அனாஹீவாக் என்ற நகரில் ஆள் இல்லாத தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் பேருந்து மீது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் மோதி 16 பேர் பலியாகினர். 
விபத்து குறித்து தகவல் அறிந்த மெக்சிகோ போலீசார் விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை 
மீட்டு மருத்துவமனையில்  கொண்டு சேர்த்தனர். இந்த் விபத்தில்   30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 12 பிப்ரவரி, 2015

அமெரிக்க தூதரக வாகனங்களை தீவிரவாதிகள் கைப்பற்றினர்!

ஏமன் நாட்டில்  தூதரகம் மூடப்பட்ட பின்னர் தூதரக அமெரிக்க வானங்களை ஹவ்தி தீவிரவாதிகள் கைப்பற்றினர். 
அரேபிய தீபகற்ப பகுதியில் அல்-கொய்தா தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், அங்கு தொடர்ந்து பல்வேறு குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களை நடத்தி 
வருகின்றனர். சமீபத்தில் ஏமன் நாட்டின் தலைநகர் சானாவை ஹவ்தி தீவிரவாதிகள் கைப்பற்றினர். மேலும் அதிபரின் மாளிகையையும் அவர்கள் கைவசப்படுத்தினர். இதனையடுத்து அதிபர் அப்ட் ராப்பு மன்சூல் ஹாதி மற்றும் அவரது அமைச்சரவை ராஜினாமா செய்தது.
தொடர்ந்து ஏமனில் அரசியல் குழப்பநிலை நீடித்து வருவதாலும், வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதாலும் ஏமனில் உள்ள தூதரகத்தை அமெரிக்கா திடீரென மூடியது. தூதரக ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனை அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது
. இங்கிலாந்து தூதரகமும் இதேபோன்று மூடப்பட்டுள்ளது. இதை லண்டனில் உள்ள வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. சானாவில் பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டதையடுத்து 
பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரகங்கள் மூடப்பட்டன. அமெரிக்கா தூதரகம் மூடப்பட்ட பின்னர் 25 தூதரக வானங்களை ஹவ்தி தீவிரவாதிகள் கைப்பற்றினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 4 பிப்ரவரி, 2015

நடக்கிறது: பாக். முப்படை அணிவகுப்பில் சீன அதிபர் சிறப்பு விருந்தினர் ??

 பாகிஸ்தானில் அடுத்த மாதம் 23–ந் தேதி நடக்கவுள்ள முப்படை அணிவகுப்பில் சீன அதிபர் ஜின் பிங்கை சிறப்பு விருந்தினராக அழைக்க நவாஸ் ஷெரீப் அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.
ஒபாமா, சிறப்பு விருந்தினர்
இந்தியாவில் 66–வது குடியரசு தினம், கடந்த மாதம் 26–ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் நடந்த கொண்டாட்டங்களில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒருவர், இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது இதுவே முதல் முறை ஆகும்.
இது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை அளித்தது. அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தின் கவர்னர் சவுத்ரி முகமது சர்வார், ‘‘அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவுக்கு குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக வந்ததும், முக்கியத்துவம் வாய்ந்த சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும், பாகிஸ்தானுக்கு ராஜ்யரீதியிலான தோல்வியாக அமைந்து விட்டது’’ என விமர்சித்தார்.
அதிரடி முடிவு
இந்த நிலையில், பாகிஸ்தானில் அடுத்த மாதம், 23–ந் தேதி குடியரசு தின விழா, பாகிஸ்தான் தினம் என்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது. அங்கு குடியரசு தின விழாவின்போது, முப்படை அணிவகுப்பு நடத்துவது வழக்கம். ஆனால் சமீப காலமாக பாதுகாப்பு காரணங்களை கூறி, முப்படை அணிவகுப்பு நடத்துவதில்லை. கடைசியாக கடந்த 2008–ம் ஆண்டு முஷரப் ஆட்சிக்காலத்தில்தான் முப்படை அணிவகுப்பு நடைபெற்றது.
இப்போது, 6 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் இந்த ஆண்டு குடியரசு தின விழாவையொட்டி ராவல்பிண்டி நகரில் முப்படை அணிவகுப்பு நடத்தவும், அதற்கு சீன அதிபர் ஜின்பிங்கை தலைமை விருந்தினராக அழைக்கவும் நவாஸ் ஷெரீப் அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராணுவ வட்டார தகவல்
இது தொடர்பாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர், ‘‘மார்ச் 23–ந் தேதி முப்படை அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியதாக ‘டான் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
அதே நாளேடு, இந்த அணிவகுப்புக்கு சீன அதிபர் ஜின் பிங்கை சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராஜ்ய ரீதியிலான தகவலை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இந்த முப்படை அணிவகுப்பு, 
ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் நடக்கிறது. எந்த இடத்தில் அணிவகுப்பை நடத்துவது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்த முப்படை அணிவகுப்பு, பாகிஸ்தானின் முப்படை பலத்தை பறைசாற்றுவதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலாசார நிகழ்ச்சிகளும் இந்த அணிவகுப்பின்போது இடம் பெறும் என தகவல்கள் கூறுகின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>