siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 31 ஜூலை, 2015

அதிகரித்து வருகின்றது இந்து கோயில்கள்????

அமெரிக்காவில் இந்து கோயில்கள் அதிகரித்து வருகின்றது என்று நாம் பெறுமைப்பட வேண்டாம், உலகிலேயே 160 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய இந்து ஆலயம் அமெரிக்காவில் கட்டப்பட்டு வருவதாக அறிகின்றோம். எமது இந்து மதம் உலகின் அத்தனை மதங்களுக்கும் தாய் மதமாகும்.
அமெரிக்கர்களின் ஒரே குனம் உலகில் எது சிறந்ததோ அதை தாங்கள் உரிமை கொண்டாடுவதாகும்.
காலப்போக்கில் அதாவது பல ஆயிரம் வருடங்களுக்கு பிறகு இந்து மதம் வெள்ளையர்களின் மதமாக கூட மாறலாம்.
ஆகவே நாம் எங்கு சென்றாலும் எமது மதசம்பிர்தாயங்களை பின்பற்றுவோம் அதேநேரம் இவ்வளர்சியிலும் கவனமாக இருப்போம், இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 30 ஜூலை, 2015

ஆபாசபடங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!


கனடா ரொறன்ரோவில் குழந்தைகள் ஆபாசபடங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.எரிக் பெர்க்மானின் என்ற 54 வயதுடைய குறித்த நபர் குழந்தைகள் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் கைதின் போது அவரது வீட்டில் அவ்வாறான 

புகைப்படங்களை வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இணையத்தளம் ஊடான செயற்பாடுகளிலும் அவர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த சந்தேக நபரை இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சிதைவுகள், மாயமான மலேசிய விமானத்தின் சிதைவுகளா

ரீயூனியன் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள பொருட்கள் மாயமான மலேசிய விமானத்தின் சிதைவுகள் என்ற நம்பிக்கை வலுத்து உள்ளது, இதுதொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது.
அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர். அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது ஓராண்டு தாண்டிவிட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை.
மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும் மாயமான விமானத்தை தேடும்பணி இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. இதனால் அந்த விமானம் பற்றிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை.
அனேகமாக மாயமான விமானத்தை ஒரு வருடத்திற்கு மேலாக தேடுவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் ரீயூனியன் கடற்பகுதியில் 
கண்டுபிடிக்கப்பட்டு உள்ள பொருட்கள் மாயமான மலேசிய விமானத்தின் சிதைவுகள் என்ற நம்பிக்கை வலுத்து உள்ளது, இதுதொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்திய பெருங்கடல் பகுதியில்உள்ள பிரஞ்சு நாட்டின் தீவான ரீயூனியன் கடற்பகுதியில் விமானத்தின் உதிரிபாகங்கள் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ரீயூனியன் கடற்பகுதியில் கரை ஒதுங்கிஉள்ள சிதைவுப் பொருட்களானது மாயமான மலேசிய விமானத்தில் இருந்துவந்து இருக்கலாம் என்று அமெரிக்க விசாரணையாளர்கள் கருதுகின்றனர். இதுவரையில் வேறுஎந்தஒரு போயிங் 777 ரக விமானம் மாயமாகவில்லை.
எனவே கண்டுபிடிக்கப்பட்டு உள்ள சிதைவுகளானது மாயமான மலேசிய விமானத்தில் இருந்தே வந்து இருக்க வாய்ப்பு உள்ளது.
சிதைவுகளை ஆய்வு செய்ய பிரஞ்சு விமானப் போக்குவரத்து 
வல்லுநர்களுக்காக அமெரிக்க அதிகாரிகள் காத்திருக்கின்றனர், சிதைவில் கண்டு பிடிக்கப்பட்டுஉள்ள சிரியல் நம்பர் விமானத்து ஒத்து போனால் அது மாயமான விமானத்தின் சிதைவுகளே, என்று அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன.
ரீயூனியன் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள சிதைவு பொருட்கள் அனைத்தும், விமானத்தின் உதிரிபாகங்கள் போன்று உள்ளது.
விமானத்தின் பின்பகுதியில் இருக்கும் பொருட்களை ஒத்துப்போகின்றது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இது விமானத்தின் சிதைவு பாகங்கள் தான் என்பதை உறுதிசெய்யும் விதமாக உள்ளது.
இதற்கிடையே விமானத்தின் சிதைவு பாகங்கள்தானா என்பதை அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர். விமான போக்குவரத்து துறை வல்லூநர்களும் ஆய்வில் இருங்கி உள்ளனர். இதற்கிடையே ஆய்வு நடத்துவதற்கு ஒன்றும் இல்லை இதுவிமானத்தின் சிதைவு பாகம்தான் என்ற ஒரதரப்பு தகவலும் வெளியாகி உள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

கணவரால் கொலை மனைவி சடலம் தலையில்லாமல் ஆற்றில்கண்டுபிடிப்பு

சிங்கப்பூரில் ஆற்றில் தலையில்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியப்பெண், அவரது கணவரால் கொலை செய்யப்பட்டார் என்று விசாரணையில் தெரியவந்து உள்ளது.
சிங்கப்பூர் நாட்டின் வம்போவா ஆற்றில் கடந்த 2013-ம் ஆண்டு தலையில்லாத நிலையில் இந்தியாவை சேர்ந்த, 33 வயது பெண்ணின் சடலம் காணப்பட்டது. தற்போது பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டார் என்று கரோனர்ஸ் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
கணவன் – மனைவி இடையே நடைபெற்ற சண்டையின்போது, ஜாஸ்விந்தர் கவுரின் தலையில் கட்டிங் பிளேடை கொண்டு அவரது கணவர் ஹர்விந்தர் சிங் அடித்து உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஹர்விந்தர் சிங் தற்போது இண்டர்போல் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். 
2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி ஜாஸ்விந்தர் கவுரை அவரது கணவர் கொலை செய்து உள்ளார் என்று கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி காலையில் ஆற்றில் மிதந்தவண்ணம் ஜாஸ்விந்தர் கவுரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜாஸ்விந்தர் சிங், கணவரிடம் இருந்து தொடர்ந்து விலகியே இருந்து உள்ளார். இதனையடுத்தே இருவர் இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. அப்போது ஹர்விந்தர் சிங் அடித்ததில், ஜாஸ்விந்தர் கவுர் மயங்கிவிட்டார், பின்னர் ஹர்விந்தர் சிங் தனது நண்பருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடத்த சம்பவத்தை தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்தே சடலத்தை மறைக்க அவர் முயற்சி செய்து உள்ளார் என்று சிங்கப்பூர் செய்தி நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.
கவுரின் சடலத்தை வெளியே கொண்டு செல்ல உதவிசெய்த இந்தியர் குருஷரன் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் மாதம் 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தை அடுத்து ஹர்விந்தர் மலேசியா சென்று
 பின்னர் இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அவரை பிடிக்கமுடியாமல் தொடந்து தலைமறைவாக உள்ளது. இருப்பினும் கவுர் மரணத்திற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியாத நிலையே நீடிக்கிறது.
இதுவரையில் ஜாஸ்விந்தர் கவுரின் வெட்டப்பட்ட கைகள் மற்றும் தலை இதுவரையில் கண்டுபிடிக்கப்படாதது, தொடர்ந்து மர்ம நீடித்துக் கொண்டே இருக்கிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பாப் பாடகி விட்னி ஹூஸ்டனின் ஒரே மகள் மரணம்.

கடந்த 6 மாதமாக மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவிகளின் உதவியுடன் உயிருக்கு போராடிவந்த பிரபல பாப் பாடகி விட்னி ஹூஸ்டனின் ஒரே மகளான பாபி கிறிஸ்டினா பிரவுன் தனது 22 வயதில் நேற்று மரணம் அடைந்தார்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி ஜோர்ஜியாவில் உள்ள தனது வீட்டு குளியல் அறை உள்ள குளியல் தொட்டியில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் 
ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று துலுத் நகரில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அதிகப்படியான போதை பொருள் மற்றும் மதுவை எடுத்துக்கொண்டதன் மூலம் அவரது இதயம் பாதிக்கப்பட்டது தான் அவரது மரணத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 28 ஜூலை, 2015

திருமண வீட்டில் துப்பாக்கி சூடு; 21 பேர் பலி 10 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் திருமண வீட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதத்தலைவர் மகன் திருமணம்
ஆப்கானிஸ்தானில் பக்லான் மாகாணம் தலீபான் தீவிரவாதிகள் நடமாட்டம் மிகுந்த பகுதி ஆகும். இங்கு அடிக்கடி தீவிரவாத தாக்குதல் நடப்பதுபோல் முன்விரோதம் காரணமாக மோதல்கள் நடைபெறுவதும் உண்டு. வன்முறையில் ஈடுபடுவோர் தீவிரவாதிகள் என்ற பெயரைப் பயன்படுத்தி தங்களது விரோதிகள் மீது தாக்குதல் நடத்துவதும் வழக்கம்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பக்லான் மாகாணத்தில் உள்ள அந்தராப் மாவட்டத்தில் மதத்தலைவர் ஒருவரது மகன் திருமணம் அவருடைய வீட்டில் நடந்தது. இதற்காக 400-க்கும் அதிகமான உறவினர்கள் அங்கு வந்திருந்தனர்.
துப்பாக்கி சூடு
அப்போது, இரு தரப்பினருக்கு இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஒரு பிரிவினர் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்றனர். 
இதனால் ஆத்திரமடைந்த போலீஸ் அதிகாரியின் உறவினர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொண்டனர். இதனால் திருமண நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
21 பேர் பலி
எனினும், இரு தரப்பினரின் துப்பாக்கி சூட்டில் திருமணத்துக்கு வந்திருந்த 21 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். 
அவர்கள் அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தேடுதல் வேட்டை
இது குறித்து அந்தராப் மாவட்ட போலீஸ் அதிகாரி குலிஸ்தான் கியூசானி கூறும்போது, ‘‘துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் 14 முதல் 60 வயது கொண்டவர்கள் ஆவர். உயிரிழந்தவர்களின் உடல்களை சேகரித்தபோது, யாரிடம் துப்பாக்கி இருந்தது, யாரிடம் இல்லை
 என்பதை எங்களால் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால் உடல்கள் கிடந்த இடத்தில் எந்த ஆயுதங்களையும் காணவில்லை’’ என்று தெரிவித்தார்.
திருமண வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதனால் அவர்களை தேடும்பணியை போலீசார் தீவிரமாக முடுக்கி விட்டு உள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 27 ஜூலை, 2015

சிறையை உடைத்து, பயங்கர கைதிகள் தப்பி ஓட்டம்.

கரீபியன் கடல் நாடான டிரினிடாட்-டொபாகோவின் தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயின். அங்குள்ள சிறையில் பல்வேறு கிரிமினல் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், கடந்த 24-ந் தேதி அதிபயங்கர குற்றவாளிகள் 3 பேர் சிறையை உடைத்து, சிறைக்காவலர்களை துப்பாக்கியால் சுட்டு தப்பித்து ஓட்டம் பிடித்தனர். அதில் ஒரு சிறை காவலர் உயிரிழந்தார். சிறை காவலர்கள் 
திருப்பி சுட்டதில் தப்பி ஓடிய கைதிகளில் ஒருவர் குண்டு பாய்ந்து 
உயிரிழந்தார். 2 பேர் தப்பி விட்டனர்.அவர்கள் ஆபத்தானவர்கள் என்றும், பயங்கர ஆயுதங்களுடன் தப்பினர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த கைதிகள் வேறெங்கும் தப்பி
 விடாதபடிக்கு அந்த நாட்டில் உள்ள விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் உச்சக்கட்ட உஷார் நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் சிலர் பிடித்து விசாரிக்கப்படுவதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சம்பவம் தொடர்பாக பிரதமர் கம்லா பெர்சாத் விடுத்துள்ள அறிக்கையில், “உங்கள் அரசு முழு கட்டுப்பாட்டில் உள்ளது. தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன” என கூறி உள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 26 ஜூலை, 2015

55 பேர் பலிஏமனில் சவுதி கூட்டுப்படைகள் வான் தாக்குதல்!

ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், சவுதிக்கு அதிபர் மன்சூர் ஹாதி தப்பி ஓடி விட்டார். ஏமனில் மீண்டும் அவரது ஆட்சியை ஏற்படுத்துவதற்காக சவுதி கூட்டுப்படைகள் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான்,
 மொராக்கோ, எகிப்து, சூடான் அடங்கியவை), ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் வான்தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஏமனின் தைஜ் நகரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் குண்டு மழை பொழிந்துள்ளன. இந்த தாக்குதல்களில் 55 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று கூறுகிறது.
இது தொடர்பாக அந்த நிறுவனம், “தைஜ் நகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் என்ஜினீயர்கள், தொழிலாளர்கள், இடம் பெயர்ந்து வந்த குடும்பங்கள் வசித்து வந்த மோக்கா பகுதியை குறி வைத்து சவுதி 
கூட்டுப்படைகள் வான்தாக்குதல்கள் நடத்தின. இதில் 55 பேர் உயிரிழந்தனர்” என கூறியது. அங்கு இன்னும் மீட்பு பணிகள் முடிவு அடையாததால், பலி எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 25 ஜூலை, 2015

கள்ளத்தனமாக செல்லும் அகதிகளின் மரணம் அதிகரிப்பு

பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு கள்ளத்தனமாக செல்லும் அகதிகள் தொடர்ந்து மரணமடைந்து வருவதையடுத்து பிரான்ஸ் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளது. 
பிரான்ஸ் நாட்டில் இருந்து பிரித்தானியாவுக்கு கலைஸ் பகுதி வழியாக பல அகதிகள் கள்ளத்தனமாக செல்கின்றனர்.
இவ்வாறு செல்பவர்களில் பலர் இந்த முயற்சியின் போது மரணமடைகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் பெண் ஒருவர் சாலை விபத்தில் பலியானார். மேலும் ஆண் ஒருவர் ரயிலின் கூரையில் இறந்துகிடந்தார்.
இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகதிகள் கள்ளத்தனமாக செல்வதை தடுக்கும் வகையில் பாதுகாப்பை பலப்படுத்த பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. மேலும் யூரோ டனல் நிறுவனமும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 13 மில்லியன் யூரோவை ஒதிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், 23 ஜூலை, 2015

ஆண், பெண் திருமணம் செய்ய புதிய வயது வரம்பை நிர்ணயம் செய்தது அரசு

ஸ்பெயின் நாட்டில் ஆண், பெண் சட்டப்படி திருமணம் செய்யக்கூடிய வயதை அந்நாட்டு அரசாங்கம் அதிரடியாக உயர்த்திய புதிய சட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. 
ஐரோப்பிய நாடுகளிலேயே 14 வயதில் சட்டப்படி திருமணம் செய்யக்கூடிய வழக்கம் ஸ்பெயின் நாட்டில் மட்டுமே பல வருடங்களாக இருந்து வந்துள்ளது.
பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் ஆண், பெண் இருவரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்யும் வயது 16 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் திருமண வாழ்க்கை பற்றிய போதிய அனுபவம் மற்றும் அறிவு இல்லாததால், 14 வயதில் செய்யப்படும் பெரும்பாலான திருமணங்கள் வெற்றிகரமாக நீடிக்கவில்லை என்பது அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனினும், திருமண வயதை உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடந்த 2013ம் ஆண்டே அறிவித்திருந்தபோதும், இன்று தான் அதனை அரசு செயல்படுத்தியுள்ளது.
இன்று முதல் அமலுக்கு வரும் புதிய சட்டத்தின் படி, ஆண், பெண் இருவரும் திருமணம் செய்யக்கூடிய வயதை 14-லிருந்து 16 ஆக சட்டப்பூர்வமாக உயர்த்தியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை குழந்தைகள் நல அமைப்புகள் உள்ள பல அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் வரவேற்று வருகின்றன.
கடந்த 2000 முதல் 2014 ஆண்டுகள் வரை சுமார் 365 திருமணங்கள் 16 வயதிற்கு கீழ் நடந்துள்ளன.
தற்போது புதிய திருமண வயது வரம்பு சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால், பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றி உள்ளதாக ஸ்பெயின் அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 19 ஜூலை, 2015

தனயனை இழந்து தவிக்கும் தம்பியின் உருக்கமான வேண்டுகோள்!

அவுஸ்திரேலியா, சிட்னியில் உள்ள கிரேஸ்ரன் என்னும் நகரத்தில் வசித்து வந்த அஜந்தன் நவரட்ணம் என்ற இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை தொடர்பாக அவருடைய தம்பியார் அங்கு வசிக்கும் தமிழ் மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 
அவர் தெரிவித்துள்ளதாவது,
படுக்கை அறையை சூடாக்கி கொள்ளும் பொருட்டு இறைச்சி வாட்டும் [B,B,Q] என அழைக்கப்படும் இயந்திரத்தின் கரி வில்லைகள் [charcoal tablets] அறையினுள் வைத்து விட்டு உறங்கப் போன அவர் அடுத்த நாள் இறந்த நிலையில் காணப்பட்டார்.
கரியுடன் வெளியாகும் காபன் மொனொரைட் வாயு இவரது மரணத்துக்கு காரணமாக உள்ளதாக தெரியவருகின்றது.
மட்டக்களப்பு, கல்லாறு என்னும் இடத்தைச் சேர்ந்த அஜந்தன் இரண்டு சிறு பிள்ளைகளும் உள்ளனர். அவர்களை இவரின் இறுதி கிரியைகளுக்கு அழைத்து வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது அஜந்தனின் உடல் மேலதிக மற்றும் திடீர் மரண அதிகாரிகளின் விசாரணைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி, சிரட்டை கரி, மற்றும் எரிவாயு சூடாக்கிகள், படுக்கை அறையையோ மற்றும் மூடிய மண்டபங்களையோ சூடாக்குவதற்கு உகந்தவை அல்ல புதிதாக வந்தவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை அறிவிப்பாக கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
காபன் மொனொரைட் வாயு உயிரை கொல்வது என்பதுடன் மனமோ, நிறமோ, சுவையோ இல்லாத ஒரு வாயு என்பதால் தூக்கத்திலும் கூட மரணம் நிகழும் நிலைமை இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது அவுஸ்திரேலியாவில் கடுமையான குளிர் காலநிலை நிலவுவதனால் புதிதாக வந்தவர்கள் மிகவும் 
அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் தனது தனயனின் பயணம் இறுதிப் பயணமாக அமையவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த அகால மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்த அகதி செயற்பாட்டாளர் ஒருவர் இவ்வாறான துர்ப்பாக்கிய சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 18 ஜூலை, 2015

இயற்கையின் கோரத்தாண்டவம்.20 கார்கள் தீக்கிரையான!.

அமெரிக்காவில் ஏற்பட்ட வரலாறு காணாத காட்டுத் தீயினால் 
வனப்பகுதி வழியாக சென்ற 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் 
தீயில் எரிந்து சாம்பலாயின,
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 14 ஜூலை, 2015

சூழலுக்கு மாக இயங்கும் கார்களால் ஆபத்தா?


கூகுள் நிறுவனம் உட்பட மேலும் சில கார் வடிவமைப்பு நிறுவனங்கள் ஓட்டுநர் இன்றி இயங்கக்கூடிய கார்களை வடிவமைத்துள்ளன.
இக்கார்கள் தற்போது பரிசோதிப்பில் உள்ள நிலையில் இவற்றினால் சூழலுக்கான பாதிப்பு 90 சதவீதம் இல்லை என ஆய்வு ஒன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வினை அமெரிக்காவிலுள்ள Berkeley Lab நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இதில் 2030 ஆண்டளவில் பாவைனைக்கு வரும் முற்று முழுதாக இலத்திரனியில் தொழில்நுட்பத்தினைக் கொண்ட தானியங்கிக் கார்கள் மூலமே சூழலுக்கு தீங்கு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது சோதனையில் இருக்கும் தானியங்கிக் கார்கள் பகுதியாக எரிபொருளில் இயங்கக்கூடியன என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 12 ஜூலை, 2015

ஐஎஸ் தீவிரவாத தலைவர் விமானத் தாக்குதலில் பலி!

அமெரிக்க ஆளில்லா விமானம் இன்று நடத்திய தாக்குதலில் இஸ்லாமிக் ஸ்டேட் என்றழைக்கப்படும் ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவன் ஹபீஸ் சயீத் கொல்லப்பட்டான். ஆப்கானிஸ்தான், 
பாகிஸ்தான் மற்றும் அவற்றை 
ஒட்டியுள்ள பகுதிகளில் பேராதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவனான ஹபீஸ் சயீத் இன்று நன்கார்கர் மாகாணத்தில் உள்ள அச்சின் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய 
தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் உளவுத்துறை அறிவித்துள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 11 ஜூலை, 2015

இன்னும் சில வாரங்களில் வாட்ஸ் அப்பிற்கு தடை ???

உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பிற்கு விரைவில் இங்கிலாந்தில் தடை செய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மறைமுக குறியீடுகள் கொண்ட எந்த வகையிலான குறுஞ்செய்திகளை அனுப்பவும் தடைவிதிக்கும் புதிய சட்டத்தை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் விரைவில் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் அண்மையில் அதிகரித்து
 வரும் பயங்கரவாத அச்சுறுத்தலையடுத்து அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் பயங்கரவாதம் பரவாமல் இருப்பதற்காக கடுமையான சட்டங்களை இயற்ற உள்ளதாக கூறப்படுகிறது. ஆன்லைன் கம்யூனிகேஷன்
 வசதிகளே 
பயங்கரவாதிகள் எளிதாக தகவல் பறிமாறிக்கொள்ள ஏதுவாக இருப்பதாகவும், எனவே இங்கிலாந்து புலனாய்வுத் துறை ஆன்லைன் கம்யூனிகேஷன் வசதிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டம் அமலுக்கு வந்தால் ஸ்நாப் சாட், ஆப்பிள் நிறுவனத்தின் ஐமெசேஜ், வாட்ஸ்-ஆப் போன்றவைகளுக்கு இங்கிலாந்தில் நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மக்களின் தனிபட்ட உரிமையை பாதிப்பதாக இங்கிலாந்தில் இந்த புதிய சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>