Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 21 டிசம்பர், 2015

குர்திஷ் போராளிகள் குறைந்தது102 பேர் கொல்லப்பட்டுள்ளர்?

துருக்கியின் தெற்கிழக்குப் பகுதியில், துருக்கி இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளின் காரணமாக, குர்திஷ் போராளிகளில் குறைந்தது 102 பேர் கொல்லப்பட்டுள்ளதாதக அறிவிக்கப்படுகிறது. தவிர, 2 படையினரும் 5 பொதுமக்களும்
, இதன்போது
 கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. தாங்கிகளின் உதவியோடு, சுமார் 10,000 துருக்கித் துருப்புகள், இந்தப் படைநடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. நகரப் பகுதிகளிலிருந்து குர்திஷ் போராளிகளை 
விரட்டுவதே, 
இதன் நோக்கமென அறிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள், கடந்த புதன்கிழமை ஆரம்பித்துத் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக,
 தென்கிழக்கு 
நகரங்களில், ஊரடங்கைப் பிரகடனப்படுத்திய அரசாங்கம், அதற்கெதிராகப் போராடிய போராட்டக்காரர்களை, கண்ணீர்ப்புகை மற்றும் நீர்ப்பாய்ச்சி, விரட்டியிருந்தது 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 19 டிசம்பர், 2015

நேர்மையாக 32,000 டொலர் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஒருவர்


அமெரிக்காவில் உள்ள ஹொட்டல் ஒன்றில் சாப்பிட வந்த குடும்பத்தினர் 32,000 டொலர் பணத்தை மறந்து விட்டு சென்றதை தொடர்ந்து, அதனை உரியவரிடம் ஒப்படைத்த அந்த ஹொட்டல் சர்வரின் நேர்மைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மத்திய கலிபோர்னியா நகரில் Applebee என்ற உயர்தர ஹொட்டல் ஒன்று இயங்கி வருகிறது.
இந்த ஹொட்டலில் Brian Geery(33) என்ற நபர் கடந்த 10 ஆண்டுகளாக சர்வராக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று அந்த ஹொட்டலுக்கு ஒரு குடும்பத்தினர் உணவருந்த வந்துள்ளனர். அவர்களுக்கு Brian Geery தான் உணவுகளை பரிமாரியுள்ளார்.
உணவை முடித்துவிட்டு அந்த குடும்பத்தினர் ஹொட்டலை விட்டு வெளியே சென்றுள்ளனர்.
அப்போது, மேசையை சுத்தம் செய்ய வந்த Brian Geery, அங்கு ஒரு ஓரத்தில் சிறிய பை ஒன்று இருந்ததை கண்டு வியப்படைந்துள்ளார்.
அதனை உடனடியாக எடுத்துக்கொண்டு தனது மேலாளரிடம் காட்டியுள்ளார். ‘அதற்குள் ஏதாவது மருந்து மாத்திரைகள் இருக்கலாம்’ என மேலாளர் கூறியுள்ளார்.
ஆனால், சந்தேகம் அடைந்த Brian Geery, மேலாளரின் சம்மதம் பெற்று அந்த பையை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார். உள்ளே கட்டுக்கட்டாக டொலர் அடுக்கி 
வைக்கப்பட்டுள்ளது.
அதன் மொத்த தொகையானது 32,000 டொலர் ஆகும். அதாவது அந்த சர்வரின் ஆண்டு வருமானத்திற்கு சமமான டொலர்.
பணத்தை கண்ட சர்வர் உடனடியாக தனது முதலாளியிடம் தெரிவித்து விட்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
உடனே ஹொட்டலுக்கு வந்த பொலிசார், சர்வரிடம் இருந்த பணத்தை பெற்று சென்றனர். பின்னர், பணத்தை காணவில்லை என அந்த குடும்பத்தினர் பொலிசாருக்கு புகார் அளித்தபோது அதனை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து பேசிய ஹொட்டல் இயக்குனர் Carrie Hellyer, பணத்தை விட்டு சென்ற அறையில் கண்காணிப்பு கமெராக்கள் எதுவும் இல்லை. சர்வர் அந்த பணத்தை எடுத்திருந்தாலும், அதனை கண்டுபிடித்திருக்க
 முடியாது.
ஆனால், சர்வருக்கு கர்மா மீது அதிக நம்பிக்கை உள்ளது. தான் மற்றவருக்கு செய்யும் துன்பம் தனக்கும் ஒரு நாள் ஏற்படும் என்பதை
 ஆழமாக நம்புகிறார்.
பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சர்வருக்கு குடும்பத்தினர் சன்மானம் கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அதனை சர்வர் மறுத்துவிட்டது அவரது நல்ல குணத்திற்கு எடுத்துக்காட்டு’ 
என கூறியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அவர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்கவும் விரும்பாததால், நான் தான் இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாக Carrie Hellyer தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>>



புதன், 16 டிசம்பர், 2015

இடம்பெற்ற விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞன் சாவு!!


சவுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு எருவில் பாரதிபுரத்தினை பிறப்பிடமாகக் கொண்ட 30 வயதுடையஇ ராஜன் என்பவர் தொழில் நிமிர்த்தம் சவுதிக்குச் சென்றுள்ள நிலையில் இன்று விபத்துக்குள்ளாகி 
உயிரிழந்துள்ளார்.
சவுதியில் இருந்து கடந்த மாதம் இலங்கை வந்து தனது குடும்பத்துடன் தங்கியிருந்து, மீண்டும் தொழில் நிமிர்த்தம் 22 நாட்களுக்கு முன்பு சவுதிக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை, விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.   விபத்தில் உயிரிழந்த நபர் பெண் குழந்தையொன்றின் தந்தை என்பது 
குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 11 டிசம்பர், 2015

சிறுமியுடன் ஃபேஸ்புக் மூலம் பழக்கமான பாகிஸ்தான் தூதரக அதிகாரி மகன் கைது

அமெரிக்காவுக்கான, பாகிஸ்தான் நாட்டின் கம்யூனிட்டி வெல்பேர் கவுன்சிலர் என்ற பதவியில் இருப்பவர், முகமது முகீத் ரஹீமூன்.ஸ்கார்ஸ்டேல் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது உர் ரகுமான் ரஹிமூன்( வயது 20)
இந்நிலையில், 'விஸ்பர்' எனப்படும், சமூக வலைத்தளத்தின் மூலமாக, ப்ரோன்க்ஸ் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியுடன், ரகுமானுக்கு பழக்கம் ஏற்பட்டது. பிறகு அவ்வப்போது இருவரும் சந்தித்து பேச
 தொடங்கினர்.
டிசம்பர் 1ம்தேதி, இவ்விருவரும் மூன்றாவது முறையாக சந்தித்தனர். இந்த சந்திப்பு ஒட்டல் ஒன்றில் நடந்தது. அப்போது, இருவரும் உறவு கொண்டுள்ளனர். அதேநேரத்தில், சிறுமியை அழைத்துச் செல்ல பள்ளிக்கு வந்த அவரது தந்தை சிறுமியின் செல்போனுக்கு தொடர்புகொண்டு
 ஏங்கே இருக்கிறாய் 
என கேட்டுள்ளார். அப்போது போனை எடுத்து பேசிய ரகுமான், உங்கள் மகளுடன் உடற்பயிற்சி செய்துகொண்டுள்ளேன். உடற்பயிற்சி செய்ததும் கொண்டு வந்துவிட்டுவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில், சந்தேகமடைந்த சிறுமியின் தந்தை, சிறுமி வீட்டுக்கு வந்த பிறகு துருவி துருவி கேட்டுள்ளார். அப்போது நடந்ததை சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், போலீசார் ரகுமானை கைது செய்துள்ளனர்.தற்போது அவர ஜாமினில் விடுவிக்கபட்டு உள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் அதிகாரி கூறும் போது எனது மகன் நல்லவன் இது அனைத்தும் ஜோடிக்கபட்டது என கூறி உள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 8 டிசம்பர், 2015

மக்களின் மனங்களை பிரதிபலிக்கிறதா அகதிகளுக்கு எதிரான பிரச்சார பிரான்ஸ் தேர்தல்?

பிரான்ஸ் தேர்தலில் வலதுசாரி தேசிய முன்னணி கட்சி முன்னிலை பெற்றிருப்பது ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈரத்துள்ளது.
பிரான்சில் 13 மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கட்ட தேர்தல் கடந்த 6ம் திகதி நடந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் வலதுசாரி தேசிய முன்னணி கட்சி முன்னிலை பெற்றுள்ளது
கடந்த மாதம் 13ம் திகதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 132 பேர் உயிரிழந்தனர், இதற்கு பிறகு நடக்கும் தேர்தல் என்பதால் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதற்கிடையே தேசிய முன்னணி கட்சியின் தலைவரான மேரி லீ பென், அகதிகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு பிரான்சில் இடமில்லை என்றும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களை வெளியேற்றுவதாகவும் பிரச்சாரம்
 செய்தார்.
இந்நிலையில் தற்போது அந்த கட்சி முன்னிலை பெற்றிருப்பது ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதுமட்டுமின்றி அவரது கருத்துக்கு ஆதரவாகவே பிரான்ஸ் மக்களும் வாக்களித்திருப்பதாக 
கருதப்படுகிறது,
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



புதன், 2 டிசம்பர், 2015

தமிழ் இளையோர்களை காட்டி கொடுக்கும் முயற்சியில் ஆ.த.கா !

ஆஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ் அமைப்பும் , ஒரு சில தனிநபர்களை கொண்டு இயங்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆஸ்திரேலியா கிளையினரும் சேர்ந்தே சுமந்திரனுக்கான மக்கள் 
சந்திப்பை ஒழுங்குசெய்தனர் . இந்நிலையில் இச் சந்திப்புக்கு சென்ற தமிழின உணர்வாளர்கள் சுமந்திரனுக்கு எதிர்ப்பு காட்டி போராட்டத்தில் 
ஈடுபட்டனர் .
ஆஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ் அமைப்பின் தமிழ்த் தேசிய விரோத செயற்பாடு அம்பலத்துக்கு வந்த பின்னர் , அவ் அமைப்பு சுமந்திரனுக்கு எதிர்ப்பு காட்டிய தமிழ் இளையோர்களை காட்டி கொடுக்கும் 
முயற்சியில் 
ஈடுபட்டு வருகின்ற தகவல் கசிந்துள்ளது . அத்தோடு தமிழின உணர்வுள்ள இளையோர்களை , காட்டுமிராண்டிகள் ,காடையர்கள் , கடைசியாக கப்பலில் வந்தவர்கள் , என கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர் .
 ஆஸ்திரேலியா 
தமிழ் காங்கிரஸ் அமைப்பின் தமிழ்த் தேசிய விரோத போக்கை கண்டித்த அவ்வமைப்பின் ஒரு சில தேசியவாத உறுப்பினர்களும் அவ்வமைப்பின் நிர்வாகத்தில் இருந்து ஒதுக்கப்படுவதாக தகவல் 
கிடைத்துள்ளது .
தாயகத்தில் தமிழ்த் தேசிய தளத்தை சிதைக்க நினைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளையும் , புலத்தில் அதற்கு வலுச்சேர்க்க துடிக்கும் உலகத் தமிழர் பேரவையின் தலைமைகளையும் இனம் கண்டு உலகத் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதே காலத்தின் தேவையாக உள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 27 நவம்பர், 2015

ஆளில்லா விமான தாக்குதல் தளபதி பலி மேலும் 12 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஆப்கானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் பாகிஸ்தான் தலீபான் தளபதி சஜ்னா கொல்லப்பட்டார். அவருடன் மேலும் 12 தீவிரவாதிகள் பலியாகினர்.
தலீபான் தளபதி சஜ்னா
பாகிஸ்தான் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தளபதி கான் சயீத் சஜ்னா. இவர் கடந்த ஆண்டு பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் மத்திய தலைவர் முல்லா பஸ்லுல்லாவை நிராகரித்துவிட்டு தான் தனது குழுவுடன் தனியாக இயங்கப்போவதாக அறிவித்தார்.
முல்லா பஸ்லுல்லாவின் தலைமை தனக்குரிய ‘பாதையை’ இழந்து விட்டதாக கூறி சஜ்னா பிரிந்து வந்தார்.
ஆளில்லா விமான தாக்குதல்
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானில் கோஸ்ட் மாகாணத்தில், தம்மா பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பல்வேறு குழுக்களாக இயங்கி வந்த தலீபான் அமைப்புகள் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைவது தொடர்பாக சமரச பேச்சு வார்த்தை நடந்ததாக
 கூறப்படுகிறது.
அப்போது அங்கு அமெரிக்காவின் ஆளில்லா விமானம் குண்டு வீச்சு நடத்தியது.
கொல்லப்பட்டார் சஜ்னா
இந்த குண்டு வீச்சில் சஜ்னாவும், மேலும் 12 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 20 தீவிரவாதிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும்
 கூறுகின்றன.
இதுதொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
பாக். உளவு அதிகாரி உறுதி செய்தார்
ஆளில்லா விமான தாக்குதலில் சஜ்னா கொல்லப்பட்டு விட்டதை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க அதிகாரிகள் இது குறித்து எதுவும் தகவல் வெளியிடவில்லை.
அதே நேரத்தில் சஜ்னா தலைமை தாங்கி வந்த தலீபான் தீவிரவாதிகள் குழு இந்த தகவலை மறுக்கவில்லை.
மிகப்பெரிய அடி
சஜ்னா தொடர்பாக பெஷாவர் ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் தளபதியாக திகழ்ந்து வந்த சஜ்னாவை நீண்ட காலமாக பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு படைகள் பின்தொடர்ந்து வந்தன’’ என குறிப்பிட்டார்.
‘‘சஜ்னா, அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டது உண்மை என்றால், அது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாத இயக்கத்துக்கு விழுந்துள்ள மிகப்பெரிய அடியாக அமையும்’’ என பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் மற்றொரு
 தளபதி கூறி உள்ளார்.
2 தினங்களுக்கு முன் ஆப்கானில், குனார் மாகாணத்தில், காஜி மாவட்டத்தில் அமெரிக்கா நடத்திய மற்றொரு ஆளில்லா விமான தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தளபதி பிலால் அல் தாயிப் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பயங்கரவாதத்திற்காக தண்டனை பெற்றவர்கள் விரைவில் 50 பேர் தூக்கிலிடபடுவர்

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட 50 பேருக்கு தண்டனையை நிறைவேற்ற சவுதி அரேபியா திட்டமிட்டு உள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த  2 பத்திரிகைகள் இத்தகவலை தெரிவித்து உள்ளன. இந்த செயல் ஜிகாதிகளுக்கும் அதே நேரம் நாட்டில் தாக்குதல் நடத்த  திட்டமிடும் தீவிரவாதிகளுக்கும்  ஒரு எச்சரிக்கையாக
 இருக்கும்.
பயங்கரவாத குற்றங்களுக்கான  மரண தண்டனை குற்றத்திற்காக தூக்கிலிட 50 பேர் காத்திருக்கிறார்கள்.  இந்த பயங்கரவாதத்தில் 100 பொது மக்கள் 71 பாதுகாப்புபடை வீரர்கள் பலியாகி உள்ளதாக ஒகஸ் பத்திரிகை தெரிவித்து உள்ளது.இதில் அல் கொய்த இயக்கத்தை சேர்ந்த சிலரும், அவாமியா இயக்கங்களை சேர்ந்தவர்கள் சிலரும் உள்ளதாக அந்த பத்திரிகை தெரிவித்து உள்ளது.இதில் பெரும்பாலானவர்கள்  கிழக்கு மாகாணத்தில் எண்ணெய் உற்பத்தி நகரமான ஷியா நகரில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் ஆவார்கள் எனவும் தெரிவித்து உள்ளது.
ஆனால் ரியாத் தூதரக அதிகாரிகள் கூறும் போது  தங்கள் அரசு   ஷியா நகரில் போராட்டத்தில் ஈடுபட்டு தண்டிக்கபட்டவர்களுக்கு  மரண தண்டனை  இல்லை என உறுததி அளித்துள்ளனர். 
அல் ரியாத் பத்திரிகை வெளியிட்டு உள்ள தகவலில் விரைவில் 52 பேர் மரணதண்டனை விதிக்கப்படுவர் கூறி உள்ளது.பின்னர் எந்த வித விளக்கம் கூறாமல் தன் இணையதளத்தில் இருந்து அந்த தகவலை 
நீக்கி விட்டது.
20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சவுதி அரேபியாவில் இந்த வருடம்  150 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றபட்டு உள்ளது. இதில் அதிகமானவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தலைவெட்டபட்டு உள்ளனர். எனசர்வதேச மன்னிப்புச் சபை இந்த மாதம்
 தெரிவித்து உள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், 26 நவம்பர், 2015

அதிக வெப்பமான ஆண்டு 2015: காலநிலை அமைப்பு தகவல்

உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக 2015 இருக்கும் என ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக 2015 இருக்கும் என ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை அமைப்பு 
தெரிவித்துள்ளது.
1961-1990 ஆண்டுகளின் சராசரி வெப்பமாக 14 டிகிரி செல்சியஸ் பதிவானது. தற்போது 2015ம் ஆண்டு வெப்ப நிலையானது அதை விட 0.73 டிகிரி செல்சியஸ் அதிகமாகியுள்ளது.
இவ்வாறு அதிக வெப்பம் நிலவியதற்கு, எல் நினோவின் பாதிப்பு தான் காரணம் எனக் கூறப்படுகிறது.
மேலும், இந்த வெப்பநிலை வரவிருக்கும் 2016 ஆம் ஆண்டிலும் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக நிலப்பரப்பு மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலையானது இந்த அக்டோபர் மாதம் மட்டும் சராசரியாக 0.98 டிகிரி செல்சியஸ்
 நிலவியுள்ளது.
உலகத்தலைவர்கள் சந்திக்கும் பருவநிலை உச்சி மாநாடு வரும் நவம்பர் 30 ஆம் திகதி பாரீஸில் தொடங்கவிருக்கிறது, சுமார் 12 நாட்கள் நடக்கும், இந்த மாநாட்டில் உலகில் வெப்பத்தைக் குறைக்க என்ன செய்யலாம் என்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
மேலும், உலக அளவில் 2 டிகிரி அளவுக்கு வெப்பத்தைக் குறைக்கவும் ஆலோசிக்கப்படவுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


ஞாயிறு, 22 நவம்பர், 2015

மக்களுக்கு பிரதமர் எச்சரிக்கை குடிக்கும் தண்ணீரில் இரசாயனங்களை கலக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்?

பிரான்சில் மக்கள் குடிக்கும் தண்ணீரில்  இரசாயனங்களை கலந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பிருப்பதால் அந்நாட்டில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்சில் உள்ள Necker Paediatric மருத்துவமனையில், தொற்றுநோய் பாதுகாப்பு உறைகள், பாலித்தீன் பூட்ஸ், கையுறைகள் மற்றும் நுண்ணுயிரிகளிலிலுந்து காக்கும் முகமூடிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் 
திருடப்பட்டுள்ளன.
இந்த பாதுகாப்பு உபகரணங்கள் திருடப்பட்டுவிட்டதால், ஐ.எஸ் தீவிரவாதிகள் இதனை பயன்படுத்தி நகருக்கு குடிநீர் வினியோகிக்கும் நீர்நிலைகளில் மக்களை கொல்லும் இரசாயனங்களை கலக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் Manuel Vall கூறுகையில், தற்போதைய நிலையில், எதையும் நம்மால் நிராகரித்து சிந்திக்க இயலாது, எனவே தீவிரவாதிகள் மக்கள் குடிக்கும் தண்ணீரில் இராசயனங்களை கலப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதால் எச்சரிக்கையோடு இருக்க 
வேண்டும்.
இதன் காரணமாக, பாரீஸ் நகருக்கு தேவையான குடிநீரை வினியோகிக்கும் ஆறு நீரேற்று நிலையங்களைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முக்கிய உயரதிகாரிகள் தவிர இதர பணியாளர்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்பப்படுகின்றனர் என்று 
கூறியுள்ளார்.
இங்கு அழுத்தவும் 3முக்கிய வழின் நிழல்படங்கள் இணைப்பு >>>


சனி, 21 நவம்பர், 2015

ஹெலிகாப்டர் பனி பாறை பகுதியில் விபத்து: 7 பேர் பலி!!!

நியூசிலாந்து நாட்டில் பனி பாறை அமைந்த சுற்றுலா பகுதி ஒன்றில் ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து விபத்திற்குள்ளான சம்பவத்தில் அதில் பயணம் செய்த 7 பேரும் பலியாகி உள்ளனர் என போலீசார் கூறியுள்ளனர்.  இது பற்றி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நியூசிலாந்தின் தெற்கு தீவின் மேற்கு கடலோர பகுதியில் பனி பாறைகள் 
அதிகம் உள்ளன.
இதில், சுற்றுலா பகுதியாக அறியப்பட்டுள்ள பாக்ஸ் எனப்படும் பனி பாறை பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்றின் சிதைந்த பாகங்கள் மீட்பு படையினரால் கண்டறியப்பட்டுள்ளன.  ஆனால், கடுமையான சூழ்நிலையால் அப்பகுதிக்கு செல்ல முடியவில்லை என 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரின் விமானி மற்றும் 6 பயணிகளின் அடையாளம் காணப்பட்ட விவரம் வெளியிடப்படவில்லை.  மீட்பு பணி மற்றும் விசாரணை நடைபெற சில நாட்கள் ஆகும் என அவர்கள் கூறியுள்ளனர்.  ஆல்பைன் அட்வென்சர்ஸ் என்ற டிராவல் ஏஜென்சி ஒன்று இந்த ஹெலிகாப்டரை 
இயக்கியுள்ளனர்.
அவர்கள் விமானங்களை வழங்குவதுடன், பனி பாறை பகுதிகளில் தரை இறங்கி சுற்றுலா பகுதிகளை பார்வையிட தேவையான பணிகளை செய்திடுவர்.  கடந்த 2010ம் ஆண்டில் பாக்ஸ் கிளேசியர் பகுதிக்கு 
அருகிலுள்ள 
நகரிலிருந்து கிளம்பி சென்ற விமானம் ஒன்று பனி பாறை பகுதியில் வெடித்து சிதறிய சம்பவத்தில் அதில் இருந்த 9 பேரும்
 பலியாகி உள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 19 நவம்பர், 2015

லண்டனில் சனிக்கிழமை ஸ்னோ -1 வரை குளிர் என அறியப்படுகிறது !

ஆர்டிக் துருவத்தில் கிளர்ச்சி காரணமக ,  கடும் உறைபனிக் காற்று அங்கிருந்து நகர்ந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. இது பிரித்தானியாவை சனிக்கிழமை இரவு கடக்க இருக்கிறது. இதனால் பிரித்தானியாவில் கடும் குளிர் ஏற்பட உள்ளதோடு 
ஸ்னோ (பனிப் பொழிவு) ஏற்பட உள்ளது. ஸ்காட்லாந்தில் சுமார் 8 அங்குல உயரத்திற்கு இந்த பனி மொழிவு காணப்படும் என்று 
கூறப்படுகிறது.
லண்டனில் சிலவேளை குறைவாக காணப்படலாம். எனவே ஞாயிற்றுக் கிழமை ,வீதிகளில் பனி காணப்படலாம். வாகனத்தை ஓட்டுபவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 18 நவம்பர், 2015

தீவிரவாதிகள் லண்டனிலும் ஊடுறுவியதாக அதிர்ச்சித் தகவல்!

பிரான்ஸ் நாட்டை உலுக்கியுள்ள தீவிரவாத தாக்குதல் ஒரு புறம் இருக்க. அங்கே சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி ஒருவரின் பாஸ்போட்டை எடுத்து ஆராய்ந்துள்ள பிரெஞ்சுப் பொலிசார் அதிர்ந்து போய் 
உள்ளார்கள்.
குறித்த தீவிரவாதியின் பின் புலத்தையும் நண்பர்கள் , மற்றும் உறவினர்கள் என்று பலரை பிரெஞ்சுப் பொலிசார் ஆராய்ந்துள்ளார்கள். இதனூடாக திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளது. குறித்த நபரின் உறவினர்கள் சிலர், மற்றும் நண்பர்கள் சிலர் ஏற்கனவே ஐரோப்பாவுக்குள் வந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதனை பிரெஞ்சு அரசு பிரித்தானிய அரசுக்கும் அறிவித்துள்ளது. இதனை அடுத்து சற்று முன்னர் பிரித்தானியாவில் டேவிட் கமரூன் அவர்கள் அதி உச்ச பாதுகாப்பு அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகளை அழைத்து “கோபிரா” கூட்டத்தை கூட்டியுள்ளார். லண்டனில் தாக்குதல் நடத்த என ஏற்கனவே சிலர் புகுந்துவிட்டதாக கருதப்படுகிறது.
அது எங்கே அல்லது எபொழுது என்று தான் தெரியவில்லை என்கிறார்கள். நிச்சயம் லண்டனில் ஒரு கூட்டத்தில் இதுபோன்ற தாக்குதல் நடைபெறும் என்று அடித்துக் கூறப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 16 நவம்பர், 2015

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விமானம்:விபத்தில் பரிதாப பலி (காணொளி இணைப்பு)

பிரித்தானிய நாட்டில் சிறிய ரக விமானத்தில் பயணம் செய்தபோது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தில் உள்ள சர்ரே பகுதியில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினர், நேற்று சிறிய ரக விமானம் ஒன்றில் பயணம் 
செய்துள்ளனர்.
குடும்பத்தினர் வசித்த பகுதியில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ள Dunkeswell Aerodrome என்ற கிராமத்திற்கு விமானம் பறந்து சென்றுள்ளது.
ஆனால், 4 மைல்கள் தொலைவிற்கு விமானம் பயணமானபோது அதில் திடீர் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விமானியின் கட்டுப்பாட்டை இழந்த அந்த சிறிய ரக விமானம் அதிவேகமாக தரையை நோக்கி பாய்ந்து விழுந்து நொறுங்கியுள்ளது.
இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விமான விபத்து தொடர்பாக ரிச்சார்ட் கோரிகன் என்ற பொலிசார் இன்று தகவல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், விபத்தில் 56 மற்றும் 20 வயதுடைய 2 ஆண்களும், 55 மற்றும் 23 வயதுடைய 2 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் நால்வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில்
 தெரியவந்துள்ளது.
எனினும், விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்பது தொடர்பாக வான்வெளி போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதால், அதன் முடிவுகள் வெளியான பின்னர் அனைத்து தகவல்கள் முழுமையாக தெரியவரும் என பொலிசார் 
தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வெள்ளி, 13 நவம்பர், 2015

இஸ்லாமிய பெண்னை ரயில் மீது பிடித்து தள்ளிய முதியவர்!!!

இங்கிலாந்தில் 81 வயது முதியவர், வந்துகொண்டிருந்த ரயிலின் மீது இஸ்லாமிய பெண் ஒருவரை பிடித்து தள்ளிய செயல் அங்கிருந்த பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Bakerloo ரயில் சுரங்கப்பாதையில் ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தேபோது, அங்கு நின்றுகொண்டிருந்த Yoshiyuki Shinohara(81) முதியவர், பர்தா அணிந்து வந்த குற்றத்திற்காக அந்த இஸ்லாமிய பெண்ணை பிடித்துதள்ளியுள்ளார்.
இதில் அப்பெண்ணின் முகத்தில் சிறிய உராய்வு ஏற்பட்டுள்ளது, பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அம்முதியவரை கைது செய்த பொலிசார், அவர் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக Westminster Magistrates நீதிமன்றத்தில் ஆஜரான முதியவரை, நவம்பர் 25 ஆம் திகதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் 
உத்தரவிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதன், 11 நவம்பர், 2015

விமானத்தை 480 KM பறந்து சென்று பிடித்த கில்லாடிகள்! (காணொளி )

ரோட்ல அவசரமா போறவங்கள பிளைட்டையா புடிக்கப் போறன்னு கேக்குறோம் சரி…. நெஜமாவே பிளைட்டப் புடிக்கிறதுக்காக, அதுவும் மணிக்கு 300 மைல் வேகத்துல பறந்து போறவங்கள 
என்னன்னு சொல்றது.
துபாய்ல, ஹெலிகாப்டரின் உதவியோட 1,600 அடி உயரத்திலிருந்து 2 பேர் குதிக்கிறாங்க. அதுல ஒருத்தர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த யீவ்ஸ் ரோசி, பார்ட் டைம் பைலட். இன்னொருத்தர், வின்ஸ் ரெபர்ட், ரெண்டு பேரும் மணிக்கு 300 மைல்(482 கிலோ மீட்டர்) வேகத்துல அதி வேகமா பறந்து போறது எதுக்குன்னா ஒரு பிளைட்டப் புடிக்க,
அதுவும் சாதாரண பிளைட் இல்ல, உலகத்துல இதுவரைக்கும் தயாரிச்சதுலயே ரொம்ப ரொம்ப பெரிய பேசஞ்ஜர் பிளைட்டான A380.
அந்த திகில் அனுபவத்தை பாருங்கள்:
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 5 நவம்பர், 2015

எரிமலை சீற்றம்-700 விமானங்கள் அவசர நிறுத்தம்

இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய எரிமலை, ரிஞ்ஜனி எரிமலை. இது அந்த நாட்டின் லாம்பாக் தீவில் உள்ளது. இந்த எரிமலையில் கடந்த வாரம் சீற்றம் ஏற்பட்டது. இதன்காரணமாக எரிமலை உச்சியில்
 இருந்து பெருமளவு
 சாம்பல் வெளியேறி வருகிறது. இந்த சாம்பல், விமானங்களின் என்ஜின்களில் புகுந்தால் அவை செயல் இழந்து விடும் ஆபத்து இருக்கிறது.
இதன் காரணமாக பாலியில் உள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. இன்று வரை அது மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
உலகின் மிகவும்
 பரபரப்பான விமான நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், 700 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எரிமலை வெடிப்பு நிலவரத்தை ஆய்வு செய்துதான் விமான நிலையத்தை மீண்டும் திறப்பது பற்றியும், விமானங்களை இயக்குவது பற்றியும் முடிவு எடுப்போம் என விமான நிலைய 
அதிகாரிகள் கூறினர்.
இதன் காரணமாக, பாலியில் கைது செய்யப்பட்டுள்ள நிழலுலக தாதா சோட்டாராஜன், இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வருகிற தகவல்கள் 
கூறுகின்றன.
இதேபோன்று அங்கு பயணம்மேற்கொண்டிருந்த துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, நேற்று மதியம் இந்திய நேரப்படி 12.15 மணிக்கு புரூனே செல்லவிருந்தார். பாலி விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் அவரது பயணமும் தாமதம் ஆகி உள்ளது.
இன்னொரு பக்கம் இந்தோனேசியாவில் நேற்று நில நடுக்கமும் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் கிழக்கு நுசாடெங்காரா மாகாணத்தில், ஆலோர் தீவு தொடரை மையமாக கொண்டு தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. 
இருப்பினும் மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளுக்கு வந்தனர். சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் ஏதும் இல்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 4 நவம்பர், 2015

விமானம் தெற்கு சூடானில் விபத்துக்கு உள்ளாகியது!!!

ரஷ்ய தயாரிப்பான சரக்கு விமானம் ஒன்று 20 பணியாளர்களுடன் தென் சூடானின் தலைநகர் ஜூபாவில் இருந்து புறப்பட்டது.   நைல் நதியின்  மேல் பறந்து கொண்டு இருந்த போது விமானம் விபத்து உள்ளானது. இந்த விபத்தில் 41 பேர் பலியானதாக  ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் மற்றும் சாட்சிகள் மூலம் தெரியவந்து உள்ளது.
தற்போதைய விபத்தில்  ஒரு குழந்தை மற்றும் ஒரு விமான பணியாளர் உயிர் பிழைத்து உள்ளதாக  ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் அட்னி வீக் அட்னி கூறி உள்ளார்.
கடந்த சனிக்கிழமை  எகிப்து நாட்டின் சுற்றுலா நகரமான ஷரம் எல் ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 224 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம் 23 நிமிடங்களில் எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் நெகேல் என்னுமிடத்தில் நடுவானில் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 224 பேரும் பலியானர்கள் என்பது
 குறிப்பிடதக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 3 நவம்பர், 2015

ரொக்கெட் தொழற்சாலைகளின் புகைப்படங்கள் வெளியாது?.

கிழக்கு ஜைநீரியாவில் ரொக்கெட் செய்யும் தொழிற்சாலைகள் குறித்த வெளிப்படையான ஒளிப்படங்களை இஸ்லாமியப் கிளர்ச்சிக் குழுவான பொகோ ஹராம் வெளியிட்டுள்ளது.இந்த புகைப்படங்களை அவர்கள் வாட்ஸ் அப் மூலம் கெமரூன் பகுதியின் தொலைப்பேசி இலக்கம் 
ஒன்றின் மூலம் பிபிசி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அத்துடன், இவ் ஒளிப்படங்கள் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புபட்ட வலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளது.
பொகோ ஹராம் கிளர்ச்சியாளர்கள் கடந்த காலங்களில் ரொக்கெட் மூலம் இயக்கப்படும் வெடிகுண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தி வந்தனர்.இவர்களுக்கு இந்த ஆயுதங்கள் எவ்வாறு கிடைக்கின்றன என நைஜீரியர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையிலேயே இந்த ஒளிப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை கிளர்ச்சிக் குழுவில் உள்ள அங்கத்தவர்கள், ஆயுதங்களை தயாரிக்கும் அளவிற்கு தொழில்நுட்ப அறிவை கொண்டுள்ளார்கள் 
என்பதை வெளிப்படுத்தும்
 வகையில் அமைந்துள்ளது.இந்த ஒளிப்படங்கள் போர்னா மாநிலத்தில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றிலேயே எடுக்கப்பட்டுள்ளதாக
 நம்பப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 31 அக்டோபர், 2015

திடீர் தீ விபத்து! கொண்டாட்டத்தின் போது 27 பேர் பலியான பரிதாபம்!!!

ருமேனியாவில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ருமேனியாவின் புக்கரெஸ்டில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நேற்று நள்ளிரவு வானவேடிக்கையுன் இசை நிகழ்ச்சி
 நடைபெற்றது.
இதில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் கூரை தீப்பிடித்து எரிந்ததுடன் மளமளவென பரவ தொடங்கியது.
இதனையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறும் போது, பலர் தீயில் சிக்கி 
பரிதவித்தனர்.
இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர், 155 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் காயமடைந்த நபர்களுக்கு ரத்தம் தேவைப்படுவதால் பொதுமக்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தவும் துணை பிரதமர் காப்ரியேல் ஒப்ரியா தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





வியாழன், 22 அக்டோபர், 2015

65 லட்சம் கார்களை டொயோட்டோ நிறுவனம் திரும்ப பெறுகிறது

உலகம் முழுவதிலிருந்தும் உள்ள 65 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக டொயோட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
பவர் விண்டோ சுவிட்ச்கள் தேவைக்கும் அதிகமான சூடாகி அதன் காரணமாக உருகவும் தீ பற்றும் வாய்ப்பும் உள்ளதால் அவற்றை திரும்ப பெற்று, குறைப்பாட்டை சரி செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 17 அக்டோபர், 2015

அயர்லாந்து வெற்றிஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் சுற்றில்

ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் சுற்றில் அர்லாந்து வெற்றி பெற்றது.
ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் போட்டியின் டீ அணிப் பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜேர்மனி அணிகள் மோதின.
போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் எதனையும் போடமுடியவில்லை, எனினும் 70 ஆவது நிமிடத்தில் அயர்லாந்து கோல் ஒன்றைப் போட்டு வெற்றியை 
தனதாக்கியது.
ஐரோப்பிய கால்பந்தாட்ட தகுதிகாண் போட்டிகள் 9 பிரிவுகளாக நடைபெறுகின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 14 அக்டோபர், 2015

ஓபன் ஸ்குவாஷ்: கால் இறுதியில் தீபிகா பலிக்கல்?

அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ் போட்டி அங்குள்ள பிலடெல்பியா நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால் 
இறுதிக்கு
 முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல், இங்கிலாந்து வீராங்கனை ஆலிசன் வாட்டர்சை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தீபிகா பலிக்கல் 9–11, 11–5, 3–11, 11–1, 11–6 என்ற செட் கணக்கில் ஆலிசன் வாட்டர்சை சாய்த்து கால்
 இறுதிக்குள் 
நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 10–12, 6–11, 5–11 என்ற நேர்செட்டில் எகிப்து வீராங்கனை ஒம்னெயா அப்டெல் கவ்யிடம் தோல்வி கண்டு 
வெளியேறினார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>