siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 30 ஜூலை, 2015

ஆபாசபடங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!


கனடா ரொறன்ரோவில் குழந்தைகள் ஆபாசபடங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.எரிக் பெர்க்மானின் என்ற 54 வயதுடைய குறித்த நபர் குழந்தைகள் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் கைதின் போது அவரது வீட்டில் அவ்வாறான 

புகைப்படங்களை வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இணையத்தளம் ஊடான செயற்பாடுகளிலும் அவர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த சந்தேக நபரை இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சிதைவுகள், மாயமான மலேசிய விமானத்தின் சிதைவுகளா

ரீயூனியன் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள பொருட்கள் மாயமான மலேசிய விமானத்தின் சிதைவுகள் என்ற நம்பிக்கை வலுத்து உள்ளது, இதுதொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது.
அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர். அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது ஓராண்டு தாண்டிவிட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை.
மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும் மாயமான விமானத்தை தேடும்பணி இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. இதனால் அந்த விமானம் பற்றிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை.
அனேகமாக மாயமான விமானத்தை ஒரு வருடத்திற்கு மேலாக தேடுவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் ரீயூனியன் கடற்பகுதியில் 
கண்டுபிடிக்கப்பட்டு உள்ள பொருட்கள் மாயமான மலேசிய விமானத்தின் சிதைவுகள் என்ற நம்பிக்கை வலுத்து உள்ளது, இதுதொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்திய பெருங்கடல் பகுதியில்உள்ள பிரஞ்சு நாட்டின் தீவான ரீயூனியன் கடற்பகுதியில் விமானத்தின் உதிரிபாகங்கள் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ரீயூனியன் கடற்பகுதியில் கரை ஒதுங்கிஉள்ள சிதைவுப் பொருட்களானது மாயமான மலேசிய விமானத்தில் இருந்துவந்து இருக்கலாம் என்று அமெரிக்க விசாரணையாளர்கள் கருதுகின்றனர். இதுவரையில் வேறுஎந்தஒரு போயிங் 777 ரக விமானம் மாயமாகவில்லை.
எனவே கண்டுபிடிக்கப்பட்டு உள்ள சிதைவுகளானது மாயமான மலேசிய விமானத்தில் இருந்தே வந்து இருக்க வாய்ப்பு உள்ளது.
சிதைவுகளை ஆய்வு செய்ய பிரஞ்சு விமானப் போக்குவரத்து 
வல்லுநர்களுக்காக அமெரிக்க அதிகாரிகள் காத்திருக்கின்றனர், சிதைவில் கண்டு பிடிக்கப்பட்டுஉள்ள சிரியல் நம்பர் விமானத்து ஒத்து போனால் அது மாயமான விமானத்தின் சிதைவுகளே, என்று அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன.
ரீயூனியன் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள சிதைவு பொருட்கள் அனைத்தும், விமானத்தின் உதிரிபாகங்கள் போன்று உள்ளது.
விமானத்தின் பின்பகுதியில் இருக்கும் பொருட்களை ஒத்துப்போகின்றது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இது விமானத்தின் சிதைவு பாகங்கள் தான் என்பதை உறுதிசெய்யும் விதமாக உள்ளது.
இதற்கிடையே விமானத்தின் சிதைவு பாகங்கள்தானா என்பதை அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர். விமான போக்குவரத்து துறை வல்லூநர்களும் ஆய்வில் இருங்கி உள்ளனர். இதற்கிடையே ஆய்வு நடத்துவதற்கு ஒன்றும் இல்லை இதுவிமானத்தின் சிதைவு பாகம்தான் என்ற ஒரதரப்பு தகவலும் வெளியாகி உள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

கணவரால் கொலை மனைவி சடலம் தலையில்லாமல் ஆற்றில்கண்டுபிடிப்பு

சிங்கப்பூரில் ஆற்றில் தலையில்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியப்பெண், அவரது கணவரால் கொலை செய்யப்பட்டார் என்று விசாரணையில் தெரியவந்து உள்ளது.
சிங்கப்பூர் நாட்டின் வம்போவா ஆற்றில் கடந்த 2013-ம் ஆண்டு தலையில்லாத நிலையில் இந்தியாவை சேர்ந்த, 33 வயது பெண்ணின் சடலம் காணப்பட்டது. தற்போது பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டார் என்று கரோனர்ஸ் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
கணவன் – மனைவி இடையே நடைபெற்ற சண்டையின்போது, ஜாஸ்விந்தர் கவுரின் தலையில் கட்டிங் பிளேடை கொண்டு அவரது கணவர் ஹர்விந்தர் சிங் அடித்து உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஹர்விந்தர் சிங் தற்போது இண்டர்போல் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். 
2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி ஜாஸ்விந்தர் கவுரை அவரது கணவர் கொலை செய்து உள்ளார் என்று கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி காலையில் ஆற்றில் மிதந்தவண்ணம் ஜாஸ்விந்தர் கவுரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜாஸ்விந்தர் சிங், கணவரிடம் இருந்து தொடர்ந்து விலகியே இருந்து உள்ளார். இதனையடுத்தே இருவர் இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. அப்போது ஹர்விந்தர் சிங் அடித்ததில், ஜாஸ்விந்தர் கவுர் மயங்கிவிட்டார், பின்னர் ஹர்விந்தர் சிங் தனது நண்பருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடத்த சம்பவத்தை தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்தே சடலத்தை மறைக்க அவர் முயற்சி செய்து உள்ளார் என்று சிங்கப்பூர் செய்தி நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.
கவுரின் சடலத்தை வெளியே கொண்டு செல்ல உதவிசெய்த இந்தியர் குருஷரன் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் மாதம் 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தை அடுத்து ஹர்விந்தர் மலேசியா சென்று
 பின்னர் இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அவரை பிடிக்கமுடியாமல் தொடந்து தலைமறைவாக உள்ளது. இருப்பினும் கவுர் மரணத்திற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியாத நிலையே நீடிக்கிறது.
இதுவரையில் ஜாஸ்விந்தர் கவுரின் வெட்டப்பட்ட கைகள் மற்றும் தலை இதுவரையில் கண்டுபிடிக்கப்படாதது, தொடர்ந்து மர்ம நீடித்துக் கொண்டே இருக்கிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பாப் பாடகி விட்னி ஹூஸ்டனின் ஒரே மகள் மரணம்.

கடந்த 6 மாதமாக மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவிகளின் உதவியுடன் உயிருக்கு போராடிவந்த பிரபல பாப் பாடகி விட்னி ஹூஸ்டனின் ஒரே மகளான பாபி கிறிஸ்டினா பிரவுன் தனது 22 வயதில் நேற்று மரணம் அடைந்தார்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி ஜோர்ஜியாவில் உள்ள தனது வீட்டு குளியல் அறை உள்ள குளியல் தொட்டியில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் 
ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று துலுத் நகரில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அதிகப்படியான போதை பொருள் மற்றும் மதுவை எடுத்துக்கொண்டதன் மூலம் அவரது இதயம் பாதிக்கப்பட்டது தான் அவரது மரணத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>