siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

தமிழ் இளைஞர்கள் இருவர் ஏரியில் மூழ்கி பலி

கனடா ஒன்ராரியோவிலுள்ள ஈகிள் பார்க் நீர்ச்சுணையில் படகுப் பயணம் சென்று கொண்டிருந்தவேளை ஏற்பட்ட விபத்தில், இரு தமிழ் இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வட்டுக்கொட்டை சிவன் கோவிலடியை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர்களே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 24 வயது 
நிரம்பிய கஜன் கலாபாகன் மற்றும் 21 வயது நிரம்பிய லிங்கவிஜிதன் கிருபநாயகம் ஆகிய இருவருமே 
இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். உறவினர்கள் எழுவர் குறித்த படகில் இருந்ததாகவும், அவர்களில் இவர்கள் இருவரும் உயிர்காப்பு கவசம் அணியாதிருந்தனர் என ஒன்ராரியோ பொலிஸார் 
தெரிவித்துள்ளனர். படகு 
கவிழ்ந்தமை தொடர்பாக உடனடியாக காவற்துறைக்கு அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கிடையில் பூங்கா மீட்புக் குழுவினர் இருவரை மீட்டதாகவும் இருவர் மட்டும் காணாமல்
 போயிருந்ததாகவும் 
தெரிவிக்கப்படுகிறது. மேலும், திங்கள் இரவு காணாமல் போனவர்கள் செவ்வாய்க்கிழமை மதியமளவில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் நேற்று முன்தினம் அவர்கள் இனம் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர். 
அத்தோடு 
இந்த ஏரியில் இது படகு செலுத்துவதற்கான காலம் இல்லை எனவும் கூறப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக ஒன்ராரியோ மாகாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 27 ஏப்ரல், 2016

4,500 கோடி இலங்கை ரூபாய்க்கு அதிபதியான புலம்பெயர்ந்தவர்!


வெளிநாட்டில் எப்படி உழைக்க வேண்டும்?  ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் குடியேறிய நபர் ஒருவர் அந்த நாட்டில் 4,500 கோடி அளவிற்கு சொத்துக்கள் சேர்த்து கடுமையான உழைப்பிற்கு முன்னுதாரணமாக திகழ்ந்து
 வருகிறார்.
ரஷ்யாவில் உள்ள சைப்பீரியாவை சேர்ந்த Leon Kamenev என்ற ஒரு ஏழைச் சிறுவன் அங்குள்ள பள்ளியில் பயின்று பின்னர் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.
வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என தீர்மானித்த அவர் கையில் உள்ள சிறிய சேமிப்புடன் கடந்த 1990ம் ஆண்டில் அவுஸ்ரேலியா நாட்டில் குடியேறியுள்ளார்.
ஆரம்பத்தில் ஒரு சுற்றுலா ஏஜெண்டாக தனது பணியை தொடங்கியுள்ளார். பணியில் அக்கறையுடன் ஈடுப்பட்டதால் ரஷ்ய நாட்டை சேர்ந்த பலரை கவர்ந்து அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுலா வர ஏற்பாடுகள் செய்து முன்னேறியுள்ளார்.
பின்னர், சில ஆண்டுகள் கழித்து சொந்தமாக ‘பீட்ஸா உணவுகளை ஒவ்வொரு ஹொட்டலுக்கும் கொண்டு சென்று டெலிவரி செய்யும்’ நிறுவனத்தை தொடங்கி அவரே பீட்ஸாக்களை டெலிவரி செய்துள்ளார்.
ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையான உழைப்பை செலுத்திய அந்த நபருக்கு தற்போதைய வயது 58 ஆகும்.
கடந்த ஆண்டு அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் பணக்காரர்களின் பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார். இவரது ஒட்டுமொத்த சொத்தின் தற்போதைய மதிப்பு 308 மில்லியன் டொலர் (4,500 கோடி 
இலங்கை ரூபாய்).
இதுமட்டுமில்லாமல், அவுஸ்ரேலிய பணக்காரர்கள் வாங்குவதற்காக போராடி வந்த 4 முக்கிய வீடுகளை இவர் சில தினங்களுக்கு முன்னர் 80 மில்லியன் டொலருக்கு (1,100 கோடி இலங்கை ரூபாய்) சொந்தமாக
 வாங்கியுள்ளார்.
சிட்னியில் உள்ள Coolong என்ற சாலையின் ஓரத்தில் இந்த வீடுகள் அமைந்துள்ளன. தற்போதுள்ள இந்த 4 வீடுகளையும் இடித்து விட்டு அங்கு ஒரு புதிய ஹொட்டலை கட்ட முடிவு 
செய்துள்ளார்.
வெளிநாடுகளில் குடியேறி வாழ்க்கையில் முன்னேற போராடிவரும் பலருக்கு Leon Kamenev ஒரு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

அதிர்ஷ்டவசமாக 90 பயணிகளுடன் தப்பிய விமானம்!!!

பூடான் நாட்டு அரசுக்கு சொந்தமான டிரக் ஏர் நிறுவன விமானம், 90 பயணிகளுடன் தாய்லாந்துக்கு செல்லும் வழியில் அசாம் மாநில தலைநகர் கவுகாத்திக்கு வந்தது. அங்கு தரை இறங்க முயன்றபோது, சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையில் 
சிக்கிக்கொண்டது. 
இதனால், விமானத்தின் மூக்குப்பகுதி சேதம் அடைந்திருப்பது படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. நல்லவேளையாக, விமானம் பத்திரமாக தரை இறங்கியதால், 90 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக 
உயிர் தப்பினர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 11 ஏப்ரல், 2016

பனிமழை ரொரன்டோவில் நீடிக்கும் அபாயம்?

கனடா ரொரன்டோவில் வழக்கமாக ஏப்ரல் மாத ஆரம்பத்திலிருந்தே வசந்த காலம் ஆரம்பமாகும் என்ற போதிலும், தற்போது அங்கு பனி மழை நீடிப்பதால் இந்த நிலை நீடிக்கும் என்ற முன்னறிவிப்புக்கள்
 தற்போது வெளியாகியுள்ளன.
ஏப்ரலைத் தொடர்ந்து மே மாதத்திலும் இந்நிலை நீடிக்குமா? என்ற அச்சம் ரொரன்டோ வாசிகளிடையே எழுந்துள்ள நிலையில், இந்த முன்னறிவிப்பு அனைவரினதும் மத்தியில் அதிர்ச்சியை
 ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (ஞாயிற்று கிழமை) 3 – 5 சென்டிமீட்டர் அளவிற்கு பனி இருந்ததையடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பால், மீண்டும் 1979க்கு திரும்ப ஆரம்பித்து விட்டதோ ரொரன்டோ காலநிலை என நிபுணர்களும் ஆராயத் 
தொடங்கியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>