Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

பாக்., இந்தியா. இடையேஉள்ள பதற்றத்தை தணிக்க சீனா முயற்சி?

பீஜிங்:இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க தொடர்ச்சியாக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சீனா தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இரு நாடுகளுடனும் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் சீன வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் கெங் சாங் பீஜிங் நகரில் நிருபர்களிடம் 
தெரிவித்தார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயான தகவல் தொடர்புகளை மேம்படுத்தி கருத்து வேறுபாடுகளை களைந்து தெற்கு ஆசிய பிராந்தியத்தின் அமைதியையும், பாதுகாப்பையும் 
உறுதி செய்ய பாடுபடும்
 என்று சீனா நம்புவதாகவும் , இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு சீனா நட்பு ரீதியான அண்டை நாடு. அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் மற்றும் இந்தியா உடன் சீனா தொடர்ச்சியாக பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” என்றார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

ஜெர்மனில் அரசியல்வாதி குடியிருப்பிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது !

ஜேர்மன் அரசியல்வாதி ஒருவர் அவரது பர்லின் குடியிருப்பிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை அங்கிருந்து மற்றொருவரது சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரை கொலை செய்து மற்றையவர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் 
வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த பைரேட் கட்சியை சேர்ந்த 44 வயதுடைய ஜேர்வோட் க்ளோஸ் புரூன்னர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக பிரதே பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புரூன்னர் குணப்படுத்த முடியாத ஒரு நோயினால் பீடிக்கப்பட்டு இருந்ததாக கட்சி தகவல்கள் தெரிவித்துள்ள போதிலும் இது தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியிடவில்லை. எனினும் உயிரிழந்த மற்றைய நபர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பர்லின் மாநிலத் தேர்தல் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் பர்லின் நாடாளுமன்றத்திற்கான 15 ஆசனங்களையும் பைரேட் கட்சி இழந்திருந்தது.
இந்நிலையில் குறித்த அறிவிப்பிற்கு முன்னரா அல்லது தோல்விக்கு பின்னரா இந்த உயிரிழப்புகள் சம்பவித்துள்ளன என்பது தொடர்பில் தெளிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 12 செப்டம்பர், 2016

பிரான்ஸ்- பிரித்தானியா இடையே அகதிகளை தடுக்க பெருஞ்சுவர்!

அகதிகளை தடுக்கும் முகமாக பிரான்ஸின் வடக்கு பகுதியான கலேவில் பெருஞ்சுவர் கட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
கலே காட்டுப்பகுதிக்குள் தங்கியிருக்கும் அகதிகள், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுக்கவே இந்த பெருஞ்சுவர் கட்டப்படுவதாக பிரித்தானியா 
குறிப்பிட்டுள்ளது.
4 மீற்றர் உயரமும் 1 கி.மீ நீளமும் கொண்ட மாபெரும் சுவர் எழுப்புவதற்கு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டிருந்தது. அதை தொடர்ந்தே இப்பணிகளை பிரித்தானிய அரசு ஆரம்பித்துள்ளது என பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்காக, பிரித்தானிய அரசு சுமார் 2.7 மில்லியன் யூரோக்கள் வரை ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டப்பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவு பெறுமென 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாட்டிற்கு விரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்
இந்த வருடம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாடு செப்டம்பர் மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் பாரிஸ் நகரில்
 நடைபெற உள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, சி. சிறிதரன், சீ.யோகேஸ்வரன், ஈ.சரவணபவன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிப்பதற்காக பிரான்ஸ் நோக்கி பயணமாக உள்ளனர்.
இன்றைய சூழலில் தமிழ் மொழியும் கலாச்சாரமும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்கும் முகமாக இந்த மாநாடு 
நடாத்தப்படவுள்ளது.
தொடர்ச்சியாக தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கானல் நீராக மாற்றப்பட்டு கொண்டு வருகின்ற இக் காலகட்டத்தில் தமிழ் இளைஞர் இடையே கலாச்சார சீரழிவை உருவாக்கி கொண்டு வரும் இக் காலப்பகுதியில் இம் மகாநாடு மிகவும்
 பிரதானமானதாகும்.
இம்முறை பாரிஸ் 17 La Fourche க்கு அண்மையில் உள்ள சர்ச் மண்டபத்தில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு வெகு சிறப்பாக இடம் பெற உள்ளதாக ஏற்பாட்டாளர்கள்
 தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா, மொறிசியஸ், றியூனியன், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தரும் தமிழ்ப் பேராளர்கள் பலர் குறித்த மாநாட்டில் கருத்துரை வழங்கவுள்ளனர்.
மேலும் தமிழரின் வரலாற்றுத் தொன்மைகள் பற்றிய ஆய்வரங்கம், பிரபல கவிஞர்கள் பங்கு கொள்ளும் கவியரங்கம், அரங்கமும் அதிர்வும் எனும் பல்சுவை நிகழ்வுகள் போன்றவற்றுடன் நடனம், இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், நாட்டுக்கூத்துகள் என தமிழர் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணக் கண்காட்சியுடன் விழாவின் சிறப்புமலர் வெளியீடும் இடம்பெறவுள்ளது.
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் துரை. கணேசலிங்கம், தலைவர் வி. சு. துரைராஜா, மாநாட்டு செயலாளர் ம. இரவீந்திரநாதன், மாநாட்டின் தலைவர் இ. க அரியரத்தினம் போன்றோர் உட்பட உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து இந்த மாநாட்டிற்கு அனைவரையும் அழைக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 6 செப்டம்பர், 2016

இருபத்தொரு கய்திகள் எத்தோப்பிய சிறைச்சாலையில் தீவிபத்து பலி!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோபியாவின் தலைநகர் அருகில் குயிலிண்டோ சிறைச்சாலையில் ஆயிரக்கணக்கான கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே சிறையில் இருக்கும் கைதிகள் அரசுக்கு எதிராக போராட்டம் மற்றும் சிறைக்குள் பல்வேறு கலவரங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று சிறைச்சாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இத்தீவிபத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பி விட்டனர். இவ்விபத்தில் சிக்கி 21 கைதிகள் உடல் கருகி பலியாகியுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இறந்தவர்களின் உடல்களை இதுவரை வெளிப்படையாக அதிகாரிகள் காட்டவில்லை என தகவல்கள்
 வெளியாகியுள்ளது.
மேலும், சிறையில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக கைதிகளை அதிகாரிகளே துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டதாகவும் உறுதிப்படுத்தாத செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், சிறையில் தீவிபத்து ஏற்பட்டது போல் அங்கிருந்து கரும்புகை வெளியாவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் பரவி வருகிறது என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>