siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 24 அக்டோபர், 2016

இலங்கையரும் நூறு பணக்காரர்களில் பிரித்தானியாவின் இணைவு?

இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
லண்டனில் பிரபல உணவகங்களை நடத்தி வரும் 53 வயதான டேஸ் குணவர்தன என்பவரே பணக்காரப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள 100 பணக்காரர்களில் இவரும் 
ஒருவராவார்.
லண்டனில் உயர் வகையான உணவகத்தின் 34 கிளைகள் 
மற்றும் நியூயோர்க், பாரிஸ், டோக்கியோ ஆகிய நாடுகளில் பல கிளைகளையும் இவர் நடத்தி வருவதாக பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.
டேஸ் குணவர்தன இலங்கையில் பிறந்த, இங்குள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஆரம்ப கல்வியை மேற்கொண்டு பின்னர் பிரித்தானியா சென்று அங்கு வசித்து வருகின்றார்.
பிரித்தானியாவில் மேலதிக கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்ட டேஸ் 1981ம் ஆண்டு கணக்காளராக தொழில் வாழ்க்கை ஆரம்பித்தார்.
அதன் பின்னர் 1991ம் ஆண்டு கொன்ரன் ஹோல்டிங்ஸ் என கூட்டு வர்த்தகத்திற்கு தொடர்புபட்டுள்ளார்.
லண்டனின் கோடீஸ்வர வர்த்தகரான ஸ்ரீமத் டேரன்ஸ் கொன்ரன் என்பவருக்கு சொந்தமான இந்த நிறுவனத்தில் 11 வருடங்கள் சேவை செய்ததன் பின்னர் உணவகம் ஒன்றின் பகுதியை கொள்வனவு செய்ததனை தொடர்ந்து அதில் இருந்து விலகியுள்ளார்.
டேஸ் குணவர்தன மேலும் ஒரு நண்பருடன் D&D என்ற பெயரில் ஹோட்டல் மற்றும் உணவக வர்த்தகம் ஒன்றை நடத்தி செல்கின்ற நிலையில் உலக புகழ் பெற்ற Pont De La Tour, Blue Pring, Lavceston Place, Sky Low Meea ஆகிய அனைத்து உணவகங்களுக்கும் உரிமையாளர் அவர் என
 தெரியவந்துள்ளது.
அவருக்கு கீழ் 2300 ஊழியர்கள் வேலை செய்யும் நிலையில் அவரது வருடாந்த வருமானம் கிட்டத்தட்ட 100 மில்லியன் பவுன்ட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டில் பிரித்தானியாவின் 100 பணக்காரர்களின் பட்டியலில் டேஸ் குணவர்தனவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக லண்டன் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 18 அக்டோபர், 2016

எலும்புக்கூடுகளுடன் ஒரு விமானத்தின் பாகம் கண்டறியப்பட்டுள்ளது.

தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தெற்கு உபியான் டாவி-டாவி அருகே கடற்கரையோரமாக அமைந்துள்ள காட்டுப்பகுதியில் மலேசிய நாட்டு கொடி வரையப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகளுடன் ஒரு விமானத்தின் பாகம் கண்டறியப்பட்டுள்ளது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற பயணிகள் விமானம் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் 8-ம் தேதி கடலில் விழுந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேர் என்ன ஆனார்கள்? என்பது பற்றிய தகவல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. ஆனால், விமானத்தின் பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதற்கிடையில் பிரான்ஸின் லா ரீயூனியன் தீவில் கிடைத்த விமானத்தின் வால் பகுதி மாயமான விமானத்தினுடையதுதான் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள மின்டானோ தீவில் தெற்கு உபியான் டாவி-டாவி என்ற இடத்தின் அருகே கடற்கரையோரமாக அமைந்துள்ள காட்டுப்பகுதியில் 70 அங்குல நீளமும், 35 அங்குல அகலமும் கொண்ட மலேசிய நாட்டுக் கொடியுடன் கூடிய ஒரு விமானத்தின் பாகம் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த விமான பாகத்தில் பல எலும்புக்கூடுகள் இருப்பதாகவும், சீட் பெல்ட்டுடன் விமானி எலும்புக்கூடாக இருக்கையில் அமர்ந்திருப்பதாகவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
பறவைகளை வேட்டையாட அந்த பகுதிக்கு சென்ற இருவர் இந்த விமானத்தின் பாகம் கிடைத்த தகவலை உள்ளூர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கு விரைந்துசென்ற போலீசார் விமானத்தின் பாகம் விழுந்துகிடக்கும் பகுதியைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி 
வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பாக, மலேசியா நாட்டில் உள்ள சபா மாகாண போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் தகவல் பரிமாறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கவனித்து விசாரணை நடத்துமாறு அவர்களுக்கு மலேசிய நாட்டின் போக்குவரத்துத்துறை மந்திரி லியோவ் ஐயாங் லாய் 
உத்தரவிட்டுள்ளர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 17 அக்டோபர், 2016

ஆளில்லா சிறியரக விமானங்கள் மூலம் மருந்து பொருட்கள் விநியோகம்?

ஆளில்லா சிறியரக விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் மருந்து பொருட்களைக் கொண்டுசேர்க்கும் புதிய திட்டமொன்று ருவாண்டாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மோசமான வீதிகளால் நாட்டின் பலபகுதிகளுக்கு ரத்தம், பிளாஸ்மா உள்ளிட்ட அவசர மருத்துவத் தேவைகள் மற்றும் மருந்து பொருட்களைக் கொண்டு சேர்ப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்ததையடுத்து ருவாண்டா அரசு இந்த முடிவை 
எடுத்துள்ளது.
ஆனால், தற்போது குறித்த ஆளில்லா சிறியரக விமானங்கள் மூலம், வீதி மார்க்கமாக 4 மணி நேரத்தில் கொண்டுசேர்க்கப்படும் மருந்துப் பொருட்கள் 15 நிமிடத்தில் கொண்டுசேர்க்கப்படுவதாகவும் 
கூறப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த ஜிப் லைன் எனும் சிறியரக ஆளில்லா விமான சேவைகள் வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் இந்த சேவை செயல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு 
தெரிவித்துள்ளது.
உலக அளவில் வர்த்தகரீதியாக மருந்துபொருட்களை வழங்க ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறையென்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 13 அக்டோபர், 2016

சட்டவிரோதமான பிரான்ஸ் செல்ல முயன்ற தமிழரொருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் பிரான்சுக்கு செல்ல முயன்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சுமார் ஒருவாரத்துக்கு முன்னதாக தனது சொந்த கடவுச்சீட்டில் துருக்கி சென்றடைந்திருந்தார்.
அதன் பின்னர் அங்குள்ள இலங்கை தரகர் ஒருவர் மூலமாக போலி கடவுச்சீட்டில் பிரான்ஸ் செல்ல முயன்ற போது துருக்கிய அதிகாரிகள் அவரைக் கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.
பின்னர் குறித்த நபர் இன்று துருக்கியிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் அவர் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>