Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 11 ஜூலை, 2016

மீண்டும் வடகொரியா அத்துமீறல்: தென்கொரியா குற்றச்சாட்ட?

அணு ஆயுத பசியால் அலையும் வடகொரியா இன்று கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து சக்திவாய்ந்த ஏவுகணையை பரிசோதித்ததாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் 
உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.
வடகிழக்கு ஆசிய நாடுகளான தென்கொரியாவும், வடகொரியாவும் தங்களது ஆயுத பலத்தை நிலைநாட்ட பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை வடகொரியா அவ்வப்போது பரிசோதித்து
 வருகிறது. 
அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு இதுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன.
இதன்காரணமாக அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.
அவ்வகையில், வடகொரியா இன்று கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து சக்திவாய்ந்த ஏவுகணையை பரிசோதித்ததாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது. அந்த ஏவுகணை எவ்வளவு தூரம் பறந்தது? எங்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை தாக்கியது? என்ற தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
வடகொரியாவின் தொடர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் கவன்களை (பொறி) நிலைநிறுத்த அமெரிக்காவும் தென்கொரியாவும் சமீபத்தில் தீர்மானித்தன. இந்நிலையில், வடகொரியா இன்று நடத்தியுள்ள இந்த ஏவுகணை சோதனை அமெரிக்காவுக்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கத் 
தோன்றுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பாராளுமன்ற தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி: மால்கோம் டர்ன்புல் மீண்டும் பிரதமராக பதவி !

ஆஸ்திரேலியா நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் போதிய மெஜாரிட்டி கிடைக்காத நிலையிலும் ஆளும்கட்சியான லிபரல் கட்சி மீண்டும் அங்கு ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் போதிய மெஜாரிட்டி கிடைக்காத நிலையிலும் ஆளும்கட்சியான லிபரல் கட்சி மீண்டும் அங்கு ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில் 1987–ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முதலாக பாராளுமன்றத்தின் இருசபைகளையும் கலைத்து 2–ந் தேதி தேர்தல் நடந்தது. பிரதிநிதிகள் சபை என்னும் கீழ்சபையின் 150 இடங்களுக்கும், செனட் சபை என்றழைக்கப்படுகிற மேல்–சபையின் 76 இடங்களுக்கும் கடந்த 2-ம் தேதிதேர்தல் நடந்தது.
ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான தேசிய கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையே ‘நீயா, நானா’ என்கிற அளவில் கடுமையான போட்டி நிலவியது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் மாலையிலேயே ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே முடிவுகள் இழுபறியாக ஊசலாட்டத்துடனே வெளியாகின. 
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஆஸ்திரேலியாவில் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் மால்கம்டர்ன்புல் அறிவித்து இருந்தார். அதற்கு பொது மக்களிடம் ஆதரவு இருந்தது. எனவே, இக்கட்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. 
அதற்கேற்ப, இன்று நடைபெற்ற இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 150 இடங்களை கொண்ட ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் 76 இடங்களை பிடிக்கும் கட்சிதான் அங்கு ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில் ஆளும் லிபரல் கட்சி தற்போது 74 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் இரு இடங்களில் இக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
அப்படி வெற்றி பெறாவிட்டாலும், ஆளும்கட்சிக்கு ஆதரவான மூன்று எம்.பி.க்கள் துணையுடன் ஆஸ்திரேலியாவில் மால்கோம் டர்ன்புல் தலைமையிலான மந்திரிசபை மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகி விட்டது.
எதிர்க்கட்சியான தொழிற்கட்சி 66 இடங்களை பிடித்துள்ள நிலையில் லிபரல் கட்சியின் வெற்றியை ஏற்றுக் கொண்டுள்ள தொழிற்கட்சி தலைவர் பில் ஷார்ட்டன் ஆஸ்திரேலியாவின் எதிர்கால பிரதமர் மால்கோம் டர்ன்புல்-லை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து 
தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>