siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 3 நவம்பர், 2017

தமிழ் மொழி. கனடா பள்ளிகளில் இரண்டாம் மொழியாக படிக்கலாம்!

தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும்.
Prime Minister Trudeau attends TamilFest in Scarborough. August 26, 2017. //// Le premier ministre Trudeau participe au TamilFest, à Scarborough. 26 août 2017.
தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.
தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.
அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின.இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள் .
தென்னாபிரிக்கா, குயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட் டொபாகோ போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.
புலம் பெயர்ந்த தமிழர்களின் பெரு முயற்சியினால் தற்போது ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழ்மொழி இரண்டாம் மொழியாக பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>



புதன், 1 நவம்பர், 2017

சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

¨மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து தொழில்புரிகின்ற இந்திய, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்த நாட்டின் அரசாங்கம்$
 தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்காக மாதாந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, அந்த நாட்டின் குடிவரவுத் திணைக்களப் பணிப்பாளர் டடுக் செரி முஸ்தஃபார் அலி
 தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக தங்கி இருந்து தொழில் புரிகின்றவர்களை பதிவு செய்துக் கொள்வதற்காக அங்கு கால அவகாசம்
 வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பணியாளர்களுக்கு இலத்திரனியல் அட்டை(e-card) வழங்கப்பட்டு, அவர்களை பதிவு செய்யும் நடவடிக்கையும் கடந்த ஜுலை மாதம் வரையில் 
முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் எதிர்காலத்தில் சட்டவிரோத பணியாளர்களைக் கட்டுப்படுத்துவதற்காக, தீவிர சோதனைகள் நடத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 23 அக்டோபர், 2017

பிரான்சில் இருந்து இலங்கை வந்த 10 வயதான சிறுவன் பிரான்ஸ் - லியோனில் பகுதியில் உயிரிழந்துள்ளார்.

 
விடுமுறை காலப்பகுதியில் பிரான்சில் இருந்து இலங்கை வந்த 10 வயதான சிறுவன் பிரான்ஸ் - லியோனில் பகுதியில் வைத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் இலங்கைக்கு வந்திருந்த காலப்பகுதியில் திக்வெல கடற்கரையில் வைத்து வெறி நாய் கடித்துள்ளது. இதனை சிறுவனின் பெற்றோர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில், நாடு திரும்பிய குறித்த சிறுவன் நோய்வாய்ப்பட்டதை அடுத்து கடந்த 4ஆம் திகதி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து, சிறுவனின் இரத்த மாதிரியை சோதனை செய்த பஸ்தர் நிறுவனம், குறித்த சிறுவனுக்கு வெறிநாய் கடித்து ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியது.
மேலும், குறித்த சிறுவன் மூலம் பிரான்ஸ் நாட்டிற்குள் ரேபிஸ் நோய் (விசர்நாய் நோய்) பிரான்சிற்குள் வந்திருப்பதை தேசியக் குறிப்பு மையமான CNR (entre national de référence) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குறித்த சிறுவன் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்துள்ளார். மேலும், சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள நோய் தொற்று தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் மேலும் 
தெரிவித்துள்ளன.



வெள்ளி, 13 அக்டோபர், 2017

செஞ்சிலுவை சங்கத்தின் செயல்பாடுகளை ஆப்கானிஸ்தானில் குறைக்கிறது



இந்த ஆண்டில் மட்டும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை (ஐ.சி.ஆர்.சி) சேர்ந்த 7 பேர் ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள தனது தன்னார்வலர்களின் எண்ணிக்கையை பெரிய அளவில் குறைக்கிறது
 செஞ்சிலுவை சங்கம்.
 இரண்டு செஞ்சிலுவை அலுவலகங்கள் மூடப்பட உள்ளதோடு, மூன்றாவது அலுவலகத்தின் பணிகள் குறைக்கப்படவுள்ளது.
அந்நாட்டு செஞ்சிலுவை சங்க தலைவர், இந்த `வலிதரக்கூடிய முடிவினால்` என்பது வடக்கில் உள்ள மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் இனி கிடைக்காது என்றார்.




வியாழன், 10 ஆகஸ்ட், 2017

இரண்டு வாரத்தில் இந்தியா-சீனா போர்: தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா ?

இந்தியா-பூடான்-சீனா எல்லைப் பகுதியான டோக்லம் பீடபூமி பகுதியில் இந்தியாவும் சீனாவும் ராணுவ வீரர்களை குவித்துள்ளதால் போர் பதற்றம் அங்கு வெகு நாளாக நீடித்து வருவது அனைவரும் 
அறிந்த ஒன்றே.
இந்த நிலையில், இலங்கையில் அம்பான் தோட்டா பகுதியில் சீனா துறைமுகம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இதனை அமைத்துள்ளது சீனா..
சீனாவின் இந்த துறைமுகமானது உலகின் பரபரப்பான கப்பல் வழித்தடங்களை ஒட்டி அமைந்துள்ளதால் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக உடன்பாடு இல்லாத நிலையை தெரிவித்துள்ளன.
இந்த துறைமுகத்தை ஒட்டிய பகுதிகளில் சீனா போர்ப்பயிற்சி மேற்கொள்ள இருப்பதாகவும்இவையாவும் இந்தியாவிற்கு பயத்தை ஏற்படுத்த செய்யப்படும் வேலையாக இந்தியா கருதுகிறது.
மேலும் இந்த போர்ப்பயிற்சி சீன துறைமுக, ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்னும் இரண்டு வாரங்களில் இந்தியா சீனா போர் மூண்டு விடும் என்று குளோபல் டைம்ஸ் பத்திரிக்கையில் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனை சீனாவில் இருந்து வரும் தகவல்களும் உறுதி படுத்தின. இந்த நிலையில் தற்போது மருத்துவ கப்பல் என்ற பெயரில் இலங்கை துறைமுகத்திற்கு ஒரு கப்பல் நேற்று முன்தினம்
 வந்துள்ளது.
மருத்துவ உதவி வழங்குவதற்குத் தேவையான சகல வசதிகளும் நவீன ஏற்பாட்டுடன் இக்கப்பலில் காணப்படுகின்றன.
அத்துடன், அவசர தேவைகளின் போது தரையுடன் தொடர்புகொள்ள ஹெலிகொப்டர் இறங்கு தரையொன்றும் இக்கப்பலில் காணப்படுகின்றது.
வெகு விரைவில் இந்தக்கப்பல் சென்று விடும் என்று கூறப்பட்டாலும், இது ஒரு வேவு பார்க்கும் வேலையாக இருக்கும் என்று சந்தேகிக்க படுகிறது.
இலங்கை துறைமுகத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் தமிழகத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று 
கூறப்படுகிறது.
எல்லையில் படைகள் குவிகப்பட்டாலும், தமிழக கடல் எல்லையை பாதுகாப்பு வளையம் குறைந்த பகுதியாக 
சீனா கருதுகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






ஞாயிறு, 30 ஜூலை, 2017

ரூ.25,000 கோடியை ஓரே நாளில் சம்பாதித்த மார்க் ஜூக்கர்பெர்க்.

சமுக வலைத்தளத்தில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக் நிறுனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க்-கின் சொத்து மதிப்பு நாள்தோறும் உயர்ந்து கொண்டே 
இருக்கிறது.
ஆனால் இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 25,000 கோடி ரூபாய் அதாவது அமெரிக்கா டாலர் மதிப்பில் சுமார் 3.8 பில்லியன் டாலர் 
சம்பாதித்துள்ளார்.எப்படி.?
பேஸ்புக் நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி குறைவாக இருந்தாலும் இந்நிறுவனத்தின் வருவாய் ஈட்டும் திட்டங்கள் மிகப்பெரிய அளவில் 
வெற்றி அடைந்துள்ளது.
இதன் ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் பேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் 43 சதவீதம் உயரும் எனக் கணிப்புகள் வெளியானது.
அடித்து நொறுக்கியது..
பேஸ்புக் நிறுவனம் கணிப்புகளை அடித்து நொறுக்கி சுமார் 45 சதவீதம் அளவிலான வருவாய் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது 2015ஆம் ஆண்டை விடவும் குறைவாக இருந்தாலும் 2வது பெரிய வளர்ச்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இக்காலகட்டத்தில் மட்டும் பேஸ்புக் சுமார் 9.16 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது.பங்கு மதிப்பு
பேஸ்புக்-இன் காலாண்டு முடிவு அமெரிக்கப் பங்குச்சந்தையில் மிகப்பெரிய அதிர்வலைகளைப் பெற்றது இதன் காரணமாக, வியாழக்கிழமை வர்த்தகத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 5 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்குக் 
கொண்டு சென்றது.
இதன் மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு வரலாறு காணாத விதமாகச் சுமார் 175.49 ரூபாய் என்ற புதிய உச்சத்தைப் பெற்றது
3.8 பில்லியன் டாலர்
இதன் வாயிலாகப் பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க்-இன் மதிப்பு வியாழக்கிழமை மட்டும் சுமார் 3.8 பில்லியன் டாலர் வரை உயர்ந்தது.
இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 25,000,000,000 ரூபாய்.
50 சதவீத வளர்ச்சி
2017 ஜனவரி மாதத்தில் இருந்து பேஸ்புக் நிறுவனப் பங்குகள் சுமார் 50 சதவீதம் அளவிற்கு உயர்ந்து தற்போது இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 170 பில்லியன் டாலராக உள்ளது.
அதேபோல் ஜூக்கர்பெர்க்-இன் சொத்து மதிப்பும் ஜனவரி மாதத்தில் இருந்து 24 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது..5வது இடம்
இந்தத் திடீர் உயர்வின் மூலம் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் ஸ்லிம் ஹீலு 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஜூக்கர்பெர்க் 72.7 பில்லியன் டாலர் மதிப்புடன் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>



வியாழன், 27 ஜூலை, 2017

நாளை வடகொரியா மற்றுமொரு ஏவுகணையை ஏவ முயற்சி!

வடகொரியா நாளை மீண்டும் மற்றுமொரு கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை பரிசோதனை நடத்த போவதாக தென்கொரியா குற்றம் சுமத்தியுள்ளது.
தென்கொரியாவுடன் போர் நிறுத்தம் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதை வடகொரியா நாளை இராணுவ தினமாக கொண்டாடுகிறது.
இதனை முன்னிட்டு வடகொரியாவின் பியோங்கன் மாகாணத்தில் இருந்து மற்றுமொரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தென்கொரியா
 தெரிவித்துள்ளது.
இதற்கிடையே வடகொரியாவின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தென் கொரிய பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 6 ஜூலை, 2017

பேருந்து தீப்பிடித்து ஜேர்மனியில் 18 பேர் கருகிப் பலி!

தெற்கு ஜெர்மனியின் ஏ 9 நெடுஞ்சாலையில், ஒரு சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த 18 பேர் இறந்ததாக காவல்துறை கூறுகிறது. வடக்கு பவேரியாவில் உள்ள ஸ்டாம்பாக்கிற்கு அருகில் ஒரு லாரியுடன் இந்த
 பஸ் மோதியது. 30 பேர் தீயில் இருந்து தப்பித்தனர், சிலர் மோசமாக காயமடைந்தனர். சாக்சனியில் இருந்து
 ஓய்வூதியம் பெறும் ஜெர்மானியர்களை ஏற்றிக்கொண்டு இந்த
 பேருந்து சென்றது.
அவசரக் கால மீட்பு பணியாளர்களுக்கு உதவியாக மீட்பு ஹெலிகாப்டர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது பேருந்து கடுமையாக எரிந்துகொண்டிருந்தது. பேருந்து ஏன் விபத்துக்குள்ளானது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 
அந்த நேரத்தில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்ததாகக் கூறப்படுகிறது. அப்பேருந்தில் 46 பயணிகளும், இரண்டு ஓட்டுநர்களும் இருந்துள்ளனர். விபத்தில் இறந்தவர்களில் ஒரு ஓட்டுநரும்
 அடக்கம்.
அவசரகால மீட்புதவியாளர்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது, எரிந்து எலும்புக்கூடான பேருந்தைத்தான் பார்க்க முடிந்தது. விபத்து குறித்து வருத்தப்படுவதாகக் கூறிய சான்சலர் ஏங்கெலா மெர்க்கல்,காயமடைந்தவர்கள் மற்றும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தனது அனுதாபத்தையும் தெரிவித்தார். மோசமான சூழ்நிலையின் போது, மக்களைக் காப்பாற்றிய 
மீட்பு பணியாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். பவேரியா உள்துறை அமைச்சர் ஜோச்சிம் ஹெர்மேன் விபத்துக்குள்ளான இடத்திற்கு
 வந்துள்ளார்.
ஐந்து மீட்புதவி ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்திருந்தன விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருக்கும் பெய்ராய்த் நகரத்தில், போதுமான மருத்துவ வசதிகள் இருப்பதாக ஜெர்மன் செய்தி தொலைக்காட்சியான என். டி.வியிடம் ஒரு காவல்துறை செய்தி தொடர்பாளர்
 கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 5 ஜூலை, 2017

திடீர்ரென விமானத்தின் இன்ஜினில் எரிந்த தீ: அவசரமாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர் !

அமெரிக்காவில் விமானத்தில் இடது இன்ஜின் திடீரென்று தீ பற்றி எரிந்ததால், விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் United Express 5869 என்ற விமானம் கடந்த ஞாயிற்றுக் கிழமை Aspen பகுதியிலிருந்து Denver-க்கு 59-பயணிகள் மற்றும் 4-விமான ஊழியர்களுடன் சென்றுள்ளது.
அப்போது விமானம் Denver விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, திடீரென்று இடது பக்கம் இன்ஜின் தீப்பிடித்து 
எரிந்துள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 24 ஜூன், 2017

நிலச்சரிவில் சீனாவில் .உயிரோடு புதைந்த 100 பேர் !

சீனாவில் நிகழ்ந்த ஒரு பயங்கர நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டனர்.
சீனாவின் தென் மேற்கு மாகாணமான சிச்சுவான், மோக்சியான் பகுதியிலுள்ள ஜின்மோ கிராமத்தில் இந்த சம்பவம்
 நடந்துள்ளது.
அங்கு 40 வீடுகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. மலையின் ஒருபக்கம் இடிந்து விழுந்தததால் இந்த அசம்பாவிதம் 
நடந்துள்ளது.
கற்கள் அப்பகுதியில் பாயும் நதியின் குறுக்கே சுமார் 2 கி.மீ தூரத்திற்கு படர்ந்து நதியின் போக்கை தடுத்து நிறுத்திவிட்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவம் பெரும் மழை காரணமாக நடந்துள்ளது. புல்டோசர்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று 
வருகிறது
நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 5 மே, 2017

ஜனாதிபதியை கொல்ல சதித்திட்டம் அம்பலமான தகவல்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னை அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ அமில வீச்சில் கொல்ல சதி திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அந்த நாட்டு அதிகாரிகள்
 குற்றம்சாட்டியுள்ளனர்.
அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ மற்றும் தென் கொரியா இனைந்து குறித்த சதி திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் கிம் ஜாங் மீது உயிர்வேதியியல் பொருட்களை வீசி படுகொலை செய்ய சி.ஐ.ஏ திட்டம் தீட்டி வருகிறது 
என தெரிவித்துள்ளது.
உயிர்வேதியியல் பொருட்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படலாம் அல்லது நானோ நச்சுப்பொருட்களையும் பயன்படுத்த வாய்ப்பு உண்டு எனவும் வடகொரியா அதிகாரிகள்
 தெரிவித்துள்ளனர்.
நானோ திட்டத்தை பயன்படுத்துவதால் நேரிடையாக வட கொரியா ஜனாதிபதியை தாக்கும் தேவை இருக்காது எனவும், தாக்குதல் நடத்தப்பட்டதன் 6 அல்லது 12 மாதங்களுக்கு பின்னர் அதன் தாக்கம் தெரிய வரும் என்பது நானோ தாக்குதலின் சிறப்பு
 என கூறப்படுகிறது.
சமீபத்தில் வெள்ளை மாளிகை அதிகாரிகள் வட கொரியா ஜனாதிபதிக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நிலையில் இந்த பகீர் தகவலை வட கொரியா வெளியிட்டுள்ளது.
மட்டுமின்றி இந்த சதி திட்டம் குறித்து வட கொரியாவிடம் சிக்கிய அமெரிக்க உளவாளி ஒருவர் ஒப்புக்கொண்டதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வட கொரியாவின் இந்த குற்றச்சாட்டில் எந்த அளவுக்கு நிஜத்தன்மை உண்டு எனவும், சிக்கிய உளவாளி யார் எனவும், சதி திட்டம் முறியடிக்கப்பட்டதா எனவும் எந்த உறுதியான தகவலும் 
வெளியாகவில்லை.
இருப்பினும் போர் சூழலை எதிர்கொள்ளும் வகையில் வட கொரியா தமது நாட்டு மக்களை குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றிய வண்ணம் உள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 29 மார்ச், 2017

நூறு கிலோ எடையுள்ள தங்க நாணயம் ஜெர்மனி அருங்காட்சியகத்தில் கொள்ளை!!


ஜெர்மனி தலைநகர் பெர்லினில் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்த தங்க நாணயம் நேற்று முன்தினம் இரவு கொள்ளை போனது, அதன் மதிப்பு 4 மில்லியன் டாலர் (ரூ.3 கோடி) என 
மதிப்பிடப்பட்டுள்ளது.
கொள்ளை போன நாணயம் கனடா அரசால் கடந்த 2007-ம் ஆண்டு வழங்கப்பட்டது. ‘பெரிய பனை ஓலை’ 
என பெயரிடப்பட்டிருந்தது.
அதில் ராணி 2-வது எலிசபெத்தின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. சுத்த தங்கத்தால் இது உருவாக்கப்பட்டிருந்தது. எனவே இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
53 சென்டி மீட்டர் நீளமும், 3 சென்டி மீட்டர் பருமனும் கொண்டது. இது ‘புல்லட் புரூப்’ கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பாக 
வைக்கப்பட்டிருந்தது.
அருங்காட்சியகத்தின் ஜன்னலை உடைத்து ஏணி மூலம் கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த தங்க நாணயத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த அருங்காட்சியகத்தில் உலக நாடுகளின் நாணயங்கள் சேகரித்து பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு 5 லட்சத்து 40 ஆயிரம் வகை நாணயங்கள் உள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 28 மார்ச், 2017

மனிதக் கழிவு கொக்கா-கோலாவில் விஷத்தன்மை?

அயர்லாந்தில் வினியோகிக்கப்பட்ட கொக்கா-கோலா டின்களில் மனிதக் கழிவுகள் இருந்ததாக எழுந்த சர்ச்சை குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
லிஸ்பர்ன் நகரில் உள்ள கொக்கா-கோலா ஆலையில் கடந்த வாரம் ஒரு நாள் இரவுப் பணியின்போது, டின்களை நிரப்பும் இயந்திரங்கள் அடைத்துக்கொண்டதாகவும், அதைப் பரிசோதித்ததில் மனிதக் கழிவுகளை ஒத்த ஒரு திரவம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆலையின் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இதற்கிடையில், குழாய்களில் அசுத்தம் காணப்பட்டது உண்மைதான் என்றபோதும், அதனைக் கொண்டு நிரப்பப்பட்ட டின் தொகுதிகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன என்றம் கொக்கா-கோலா நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இருந்தபோதிலும், அன்றைய தினம் வினியோகிக்கப்பட்ட டின்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்க அனுப்பப்பட்டுள்ளன.
இது மிக மிக அரிதாக நடக்கும் ஒரு தற்செயல் நிகழ்வு என்றும், அசுத்தமான கொக்கா-கோலா டின்கள் வினியோகத்துக்கு விடப்படவில்லை என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கொக்கா-கோலா நிறுவனத்தின் பானங்களில் குறித்த வகை நஞ்சூட்டப்பட்டிருப்பதை நைஜீரிய நீதிமன்றம் ஒன்று 
உறுதி செய்துள்ளது.
நைஜீரியாவில், கொக்கா-கோலா மற்றும் அதன் சகோதர உற்பத்திகளான ஃபென்ட்டா, ஸ்ப்ரைட் என்பனவற்றை அருந்துபவர்களின் பற்கள் விரைவாகப் பழுதாகிவருவதாகப் புகாரளிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளில், ஒன்றுக்கொன்று ஒவ்வாத அமிலங்கள் சில இந்தத் தயாரிப்புக்களில் சேர்க்கப்படுவதாகவும், அப்படிச் சேர்க்கப்படுவதால் அவை நச்சுத்தன்மை கொண்டவையாக மாறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, நைஜீரிய உணவுப் பாதுகாப்பு அமைப்புக்கு சுமார் ஆறாயிரத்து ஐநூறு அமெரிக்க டொலர்களை அபராதமாகச் செலுத்தும்படி கொக்கா-கோலா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவ்வமைப்பின் பரிசோதனைகளின் பின் அவை தரமானவையாக அறிவிக்கப்படும் வரை உற்பத்தியை இடைநிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


போதை பொருளுடன் கடலிற்குள் கனடிய கப்பல்கள்!

கனடிய கப்பல்கள் சர்வதேச நீர்ப்பரப்பில் ஒரு பாரிய கொக்கெயின் கடத்தலில் 26 நாட்கள் காலப்பகுதியில் ஈடுபட்டிருந்ததாக யு.எஸ்.கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
14.51 மெட்ரிக் தொன்கள் எடையுள்ள இந்த சம்பவம் குறித்து விவாதிக்க நிறுவனம் ஒரு செய்தி மகாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
இப்போதை பொருட்களின் மொத்த விற்பனை மதிப்பு 420மில்லியன் யு.எஸ்.டொலர்களாகும்.
கனடிய கப்பல்கள் கடலோர காவற்படை சட்ட அமுலாக்க பற்றற்ற அணியினருடன் பயணித்து கொண்டிருக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தனித்தனியாக 17 சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் கடத்தல் அதிகார பூர்வமாக
 தடுக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 27 பிப்ரவரி, 2017

இலங்கை பெண் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தபட உள்ளார்!

பிரித்தானியாவில் 8 வருடங்களாக வாழ்ந்த ஈழப் பெண் சிரோமினி சற்குணராஜா நாடு கடத்தப்படவுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிரோமினி கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாளை மறுதினம் அவர் நாடு கடத்தப்படவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த ஈழப் பெண் இந்த வருடம் தன் மின் பொறியியல் பட்டப் படிப்பினை நிறைவு செய்யவுள்ளார்.
2009 ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்ற சிரோமினி அவரது தந்தையின் மாணவர் விசாவை வைத்தே தங்கியுள்ளார். இருப்பினும் குறித்த யுவதியின் தந்தை 2011 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.
பின்னர் சிரோமினியின் இரண்டாம் நிலை கல்வி நிறைவடைந்து பல்கலைக்கழக பட்டப் படிப்பு தொடங்கிய வேளையில் அவரது தாயாரையும் அவரும் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 21ம் திகதி அந்த பெண்ணின் புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது
எனவே, விண்ணப்பம் குறித்து மறுபரிசீலனை செய்வதற்கு உள்துறை செயலாளர் ஒருவருக்கு மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் 28 ஆம் திகதி நாடு கடத்துவதற்கு எதிராக தனக்கு ஆதரவு அளிக்குமாறு குறித்த பெண் வேண்டுகோள் 
விடுத்துள்ளார்.
அவரது நாடு கடத்தலை நிறுத்துமாறு அங்குள்ள 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தனது மகளின் பட்டப்படிப்பு இடையிலேயே நின்று விடுமோ என சிரோமினியின் தாய் கவலை 
வெளியிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>


திங்கள், 20 பிப்ரவரி, 2017

இல்லாத அளவிற்கு சர்வதேச ஆயுத விற்பனை எப்போதும் அதிகரித்துள்ளது!

சர்வதேச ஆயுத விற்பனை எப்போதும் இல்லாத அளவு இப்போது அதிகரித்து காணப்படுவதாக புதியதொரு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
2012 முதல் 2016 வரையான காலப்பகுதியிலான 
முக்கிய ஆயுதங்களின் உலக அளவிலான மொத்த இறக்குமதியானது இந்த காலத்திற்கு முந்தைய 5 ஆண்டு காலத்தோடு ஒப்பிடுகையில் 8 சதவீதம் 
அதிகரித்திருப்பதாக ஸ்டாக்ஹோம் என்ற சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஒட்டு மொத்த ஆயுத கொள்முதலில் மூன்றில் ஒரு பகுதியை மத்திய கிழக்கு நாடுகளும், வளைகுடா நாடுகளும் செய்துள்ளதாகவும் உலகிலேயே இந்தியாவுக்கு அடுத்ததாக ஆயுதங்கள் அதிகமாக இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடாக சௌதி அரேபியா மாறியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுத விற்பனையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஐந்து நாடுகளும் 75 சதவீத ஆயுத ஏற்றுமதியை வழங்கியிருப்பதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 2 பிப்ரவரி, 2017

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின்உத்தரவால்இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய குடிவரவு கட்டுப்பாட்டினால், இலங்கையை சேர்ந்தவர்களும் பாதிப்படைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் நியுயோர்க் நகரிலுள்ள, ஜோன் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த 71 பேர், தடுத்து வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் 
பகிர்ந்துள்ளன.
மேலும் அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களுள், அதிகமானவர்கள் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்ட நாடுகளில்  இலங்கை, துருக்கி, பாகிஸ்தான், பிரான்ஸ்,சுவிஸர்லாந்து உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்தவர்களும் அடங்குவதாக குறித்த தகவல்
 தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும், குறிப்பிட்ட 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதற்கு தடை ஏற்படுத்தும் வகையிலான உத்தரவை டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். குறித்த உத்தரவிற்கு உலகளவில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் இலங்கையர்களும், அமெரிக்க குடிவரவு திணைக்களத்தினரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 27 ஜனவரி, 2017

அடுத்த மாதம் உலகில் மிகப் பெரிய பேரழிவுகள் ஏற்படும்:வானியலாளர் எச்சரிக்கை!

ரஷ்யாவைச் சேர்ந்த வானியலாளர் ஒருவர் நாம் அனைவரும் ஒரு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அடுத்த மாதம் பூமியை ஒரு மர்ம பொருள் தாக்கவுள்ளதால் சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு நாசா ஒரு விசித்திரமான பொருளை சுற்று வட்டப்பாதையில் கண்டுள்ளது. அதன் பெயர் WF9 என்று 
கூறியிருந்தது.
இது ஒரு விண்கல் அல்லது சிறுகோளாக இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாசா அண்மையில் பூமியை நோக்கி ஒரு மர்மமான பொருள் வருவதாகவும், அதனால் பூமிக்கும் எந்த ஒரு பிரச்சனை இல்லை என்றும் பூமிக்கு 51 மில்லியன் கிலோ மீற்றர் தொலைவிலே அது கடந்து சென்றுவிடும் என
 தெரிவித்திருந்தது.
இந்த நிகழ்வு வரும் பிப்ரவரி மாதம் 25 ஆம் திகதி நிகழும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த வானியலாளர் டாக்டர்.Dyomin Damir Zakharovich ஒரு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், WF9 என்ற அந்த மர்ம பொருள் தன்னுடைய கூற்றுப்படி அதே மாதம் 16 ஆம் திகதியே பூமியை வந்து தாக்கும்.
இதனால் பூமியின் பல பகுதிகளில் சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படக்கூடும். நாம் அனைவரும் ஒரு ஆபத்தான நிலையில் இருக்கிறோம் என்று அதிர்ச்சிகர தகவல் ஒன்றை 
தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 22 ஜனவரி, 2017

சென்று வாருங்கள் ஒபாமா!

அமெரிக்காவுக்குத் தேவையான ஒரு மாற்றத்துக்குத் தொடக்கமாகத்தான் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலில் அங்கே அதிபராகத் தேர்வானார். அதை உலகம் பாராட்டியது. அதே நேரத்தில், அமெரிக்கா பின்னுக்குப்போன ஒரு தலைகீழ் மாற்றமாகவும் உலகத்தை வருத்தப்பட வைப்பதாகவும் அது இருந்தது.
எழுத்தாளர் நடைன் கார்டிமர் கொல்கத்தா வில் 2008 நவம்பரில் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்றார். „பாதி கறுப்பர்தான் ஒபாமா“ என்றார் அவர். நோபல் பரிசு பெற்ற அந்த எழுத்தாளர் மேலும் ஒரு வரி சொன்னார். „அவர் பாதி வெள்ளையரும்கூட“. ஒபாமா ஒரு கறுப்பர் என்று கொண்டாடப்படுகிறார். அவரது கணிப்பு எளிமையானது. ஆழமானது. சின்னதாக நாம் நினைக்கும் உலகின் பாதி அவர். ஒருவர் பெரிதாகச் சிந்திக்கும் உலகின் பாதியும் அவர்தான். ஒபாமா முன்னேறினார். ஒரு அர்த்தத்தில் அவரே முன்னேற்றமாக இருந்தார். அவர் முன்னேறியபோது அவரோடு முன்னேறிய அமெரிக்க மக்களுக்கு மட்டுமல்ல. அரசியல்ரீதியாகப் பரிணமிக்கும் உலகத்துக்கே அவர் முன்னேற்றமாக இருந்தார்.
சங்கடப்படுத்தாத மாற்றம்
ஒபாமா தனது பணிகளைத் தொடங்கிய உடனே எல்லாம் ஆரம்பமாகிவிட்டன. அவரைப் பலவீனப்படுத்த, அத்துமீறித் துளைத்தெடுக்கும் கேள்விகள் கேட்கப்பட்டன. அற்பத்தனமான, வலிதரும் விமர்சனங்கள் செய்யப்பட்டன. அவர் பற்றிய எல்லாம் ஆர்வத்தோடு கண்காணிக்கப்பட்டன. என்ன உடுத்துவார், என்ன சாப்பிடுவார், என்ன குடிப்பார், என்ன விளையாடுவார், அவரைப் பற்றி அவரது நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அவரது வாழ்வைத் தோண்டிப் பார்க்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. அவரைச் சேதப்படுத்த வேண்டும் என்று நினைத்தவர்கள் அவரது குடும்பத்துக்குள்ளும் கைவரிசை காட்டினார்கள்.
அவர் வெள்ளை அமெரிக்காவை மறுத்து விடாமல், தனது ஆழமான, கறுப்பு வேர்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியவர் ஆனார். அவர் எதையும் ரொம்ப சங்கடப்படுத்தி விடாமல் மாற்ற நினைத்தார். மிகவும் பிடித்த மான விவகாரங்களை அவர் மாற்ற நினைத்தார். ஆனால், அதேபோல மிகவும் பிடித்தமான விவகாரங்களைச் சங்கடப்படுத்திவிடாமல் மாற்ற நினைத்தார். புதிய வடிவங்களை உருவாக்காமல் அவரால் ஒரு புதிய பார்வை யைச் செதுக்க முடியுமா? அவர் முயற்சி செய்ய விரும்பினார். உண்மையாகவே முயன்றார்
ட்ரம்ப் வெற்றிக்கான வேர்
வெள்ளை அமெரிக்கர்கள் சகிப்புத்தன்மை யோடு அனைவரையும் வரவேற்க வேண்டும் என்ற வெளிப்படையான பேரார்வத்தை அவர் வெளிப்படுத்தினார். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அவர் படிக்கும்போது அதன் சட்டப் பள்ளியில் வெளியாகும் ‚ஹார்வர்டு லா ரெவ்யூ‘ இதழின் முதல் கறுப்பின ஆசிரியராக அவர் மாறியபோதே அத்தகைய நடத்தை அவரிடம் வெளிப்பட்டது. அமெரிக்க நலன்களைப்
 பாதுகாக்கும் அதிபர் என்ற முறையில், அவர் வெளியுறவுக் கொள்கையில் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார். அதனால், பேரழிவுகள் நடந்தன. குறிப்பாக, சிரியாவில் அவர் தன் கொள்கையைச் சமரசம் செய்துவிட்டார். அதன் விளைவை இன்னும் சிரியா அனுபவித்துக் கொண்டிருக்கிறது. லிபியா விவகாரத்தில் அவரும் சேர்ந்துகொண்டதைச் சொல்லலாம்.
கழுவ முடியாத கறை
இரண்டு எதிர்மறையான விஷயங்கள் ஒபாமா விடம் இருக்கின்றன. ஒன்று, அவர் நோபல் பரிசை ஏற்றுக்கொண்டது. அது முதல் பிறந்த நாளுக்கான பரிசை எட்டே மாதக் குழந்தைக்கு வழங்கியதைப் போல இருந்தது. ஒபாமா அதை மறுத்திருந்தால் அவர் உலகம் முழுவதற்கும் புத்துணர்வு ஊட்டியிருப்பார்.
இரண்டாவதாக, அவர் பொதுமக்களை அதிகமாகக் கொல்லக்கூடிய ஆள் இல்லாத விமானங்கள் போன்ற ட்ரோன் போர்க் கருவி களைப் பயன்படுத்த அனுமதித்தார். அவரால் அந்தக் கறையை எதைக் கொண்டும் கழுவ முடியாது. ஒசாமா பின்லேடனின் கதையை முடித்தது வேறுபட்ட அனுபவம். அது பயங்கர வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நிவாரணத்தை அளித்த தருணம்தான்.
முயற்சியால் கிடைத்த உயர்இடம்
ஒபாமாவிடம் உள்ள நல்லவை, அவரது சமரசங்களால் ஏற்பட்ட ஏமாற்றங்கள், தவறான முடிவுகளால் ஏற்பட்ட அதிர்ச்சிகள், எல்லாவற்றையும் மொத்தமாகக் கணித்தால், பெரும் முயற்சியால் உயர்ந்த இடத்துக்குப் போனவராக உலகம் அவரைப் பார்க்கும். பல விஷயங்களை முதல்தடவையாகச் செய்தவர் என்ற இடத்தை விதி அவருக்குத் தந்துள்ளது.
2015 ஜூன் மாதத்தில் இம்மானுவேல் மெத டிஸ்ட் எபிஸ்கோபல் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் அவர் பேசியதுதான் அவர் பேசியவற்றிலேயே மனத்தைத் தொட்ட உரை. அந்தத் தாக்குதலை நடத்திய 21 வயது இளைஞர் டைலான் கைது செய்யப்பட்டிருந்தார்
. தனது பேச்சை „தேவ மாதா“ என்று தொடங் கினார் ஒபாமா. „உண்மையில், இது தேவாலயத் துக்கும் மேலான இடம்
. சுதந்திரத்தைத் தேடிய ஆப்பிரிக்க – அமெரிக்கர்கள் நிறுவிய வழிபாட்டுத்தலம் இது. அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக உழைத்தவர்களால் கட்டப்பட்ட தால் இது எரித்துத் தரைமட்டமாக்கப் பட்டது. கறுப்பின மக்கள் தேவாலயங்கள் கட்டி வழிபடுவதைச் சட்டங்கள்
 தடைசெய்த காலம் அது. அவர்கள் தேவாலய வழிபாடுகளை ரகசியமாகச் செய்தனர். வன்முறை இல்லாத இயக்கம்தான் உயர்ந்த லட்சியங்களை நோக்கி நாட்டைக் கொண்டுசென்றது. நமது உயர்வான தலைவர்கள் இந்தத் தேவாலயத்திலிருந்துதான் நீண்ட நடைப் பயணங்களைத் தொடங்கி னார்கள்“ என்றார் அவர்.
திருப்பியடித்தலும் மரபும்
„கறுப்பின மக்களின் தேவாலயங்கள் தாக்கப்படுவது இது முதல்முறையல்ல. இனங்கள், நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டதாக உள்ள வெறுப்பு நமது ஜனநாயகத்துக்கும் லட்சியங்களுக்கும் ஆபத்தாக இருக்கிறது. ஆனாலும், அனைத்து இனங்களிலிருந்தும், அனைத்து நம்பிக்கைகளிலிருந்தும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலிருந்தும் ஒற்றுமையும் அன்பும் பீறிட்டுக் கிளம்பும் என்று நான் நம்புகிறேன். கசப்பையும் வெறுப்பையும் அது முறியடிக்கும்“ என்றார் அவர்.
ஒபாமா ஒரு தவறு செய்தார். பிளவுகளை இணைப்பதற்கு முயல்கிறபோது, அவருக்குப் புலப்படாமல் இருந்த வெள்ளையர் இனத் தொழிலாளர்களுக்கு அது பிடித்தமானதாக இல்லை என்பதை அறிந்துகொள்ளத் தவறிவிட்டார். அமெரிக்க மக்களின் முன்னேற்றம், உலகமயம்
, தொழில்நுட்பப் புரட்சியில் அந்தத் தொழிலாளர்கள் ஓரங்கட்டப்பட்டதை அவர் பார்க்கத் தவறினார். அதன் பயனைத்தான் அவர் அனுபவித்தார். அமெரிக்கா குடியரசுக் கட்சியைத் தேர்வு செய்தது. அது அதிபர் மாற்றம் மட்டுமல்ல. கருத்துகளின் மாற்றமும்தான். அவரது அதிபர் காலகட்டத்துக்கு எதிரான பின்விளைவு இனரீதியாக இருந்தது. ட்ரம்ப் தேர்வானார் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் ஒரு முரண்நகை உண்டு. எழுத்தாளர் நடைன் கார்டிமர் கோட்பாடு என்று இதை அழைக்கலாம். அமெரிக்காவுக்குத் தேவையான ஒரு மாற்றத்துக்கான தொடக்க மாகத்தான் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலில் அங்கே அதிபராகத் தேர்வானார். 
அதை உலகம் பாராட்டியது. அதே நேரத்தில், அமெரிக்கா பின்னுக்குப்போன ஒரு தலைகீழ் மாற்றமாகவும் உலகத்தை வருத்தப்பட வைப்பதாகவும் அது இருந்தது. தலைகீழாகப் போகிற இந்த மாற்றம் அதிலிருந்து மீளுமா? தனது பாதையில் முன்னேறுமா?
ஏங்குகிறேன்
 ஒபாமா தொடங்கியுள்ள அவரது மரபு, ஒரு மெழுகுவத்தியின் ஒளிபோல இருளோடு போராடும். தனித்தன்மையோடு அது ஒளிரவே செய்யும். மனித இனத்தில் ஒரு அரசியல் ஆன்மிகவாதி அதிகாரத்தில் இருந்தார் என்று வருத்தத்தின் வலியோடு உலகம் 
நினைவுகூரும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 13 ஜனவரி, 2017

சவப்பெட்டி மூலம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய பெண்

குப்பை பைகள், சூட்கேஸ், சவப்பெட்டி மூலம் சுமார் 2500 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய பெண்
போலந்து நாட்டில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரின் பொழுது யூதர்களுக்கும், நாசிகளுக்கும் பெரும் பகை ஏற்பட்டிருந்தது.
அபோது, பல யூதர்களையும், யூதக் குடும்பங்களையும் நாசியினர் கெட்டோ எனும் சிறிய பகுதியில் சிறை பிடித்து வைத்துள்ளனர்.
அந்த சிரை பகுதியானது, சிறியது என்பதால் அதிகளவு மக்கள் அடைத்து வைக்க அங்கு, நோய் தொற்று அதிகரிக்க ஆரம்பித்தது.
இந்நிலையில், போலாந்தில் பிப்ரவரி 15, 1910-ல் பிறந்தவர் இரினா சென்ட்லர் என்பவர் சமூக சேவையில் மிகுந்த ஆர்வமுடையவர்.
இவர் மருத்துவத் துறையில் நர்ஸாக பணியாற்ரி வந்தார்.
மேலும், சமூக நல்வாழ்வு அமைப்பு மூலம் உணவு, உடைகள் அளித்து உதவி வந்தார்...
அப்போது, யூதர்களுக்கு உதவி செய்ய நினைத்த இரினா ங்கு தான் உயிரை பணயம் வைத்து தான் உதவி செய்ய வேண்டியுள்ளது என்பதை உணர்ந்து தனது உடன் உதவி செய்ய வந்தவர்களுடன் சேர்ந்து கெட்டோவில் இருந்து யூத குழந்தைகளை வெளியேற்ற ரகசியமாக உதவி செய்து வந்துள்ளார்.
குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயை நெருங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை கெட்டோவில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டியிருந்தது.
இருப்பினும், நாசியின் கண்காணிப்பு கெட்டோ பகுதியில் கடுமையாகவும், விரிவாகவும் இருந்த காரணத்தினால் வேறு ஏதாவது வழியில் உதவி செய்யலாம் என நினைத்த இரினாவிற்கு ஒரு யுக்தி தோன்றியது.
அதாவது, குப்பை பைகள், சூட்கேஸ், சவப்பெட்டி போன்றவற்றில் அடைத்து மீட்க முயன்றார்.
இவ்வாறு, குப்பை பைகள், சூட்கேஸ், சவப்பெட்டி மூலம் சுமார் 2500 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் இரினா.
இந்நிலையில், இரினா குழந்தைகளை காப்பாற்றிய விசயம் நாசி படையினர்ருக்கு தெரிய வரவே அவரை கைது செய்து சித்திரைவதை செய்து, கைகளை உடைத்து கொடுமைகள் செய்தனர்.
ஆனாலும், அந்த குழந்தைகள் பற்றி ஒரு தகவலும் கொடுக்காமல் அவர்களை காப்பாற்றினார் இரினா.
இதைத் தொடர்ந்து, நாசி படையில் ஒரு வீரருக்கு லஞ்சம் கொடுத்து இரினாவை சிறையில் இருந்த தப்பிய இரினா அன்றிலிருந்து கடைசி வரை இரினா போலியான அடையாளத்தில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், போரும் முடிவுக்கு வந்தது. குழந்தகளின் தகவல்களையும் அரசுக்கு கொடுத்து விட்ட பின் திருமணம் செய்துக் கொண்டு மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தார் இரினா.
இதையடுத்து, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இரினா தனது 98வது வயதில் மரணம் அடைந்தார்.
மேலும், 1997-ம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஆனால், அந்த வருடத்திற்கான நோபர் பரிசு வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டது. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 4 ஜனவரி, 2017

3.8 ரிக்டர் அளவில் இங்கிலாந்து யோக்ஷையர் கடற்பிராந்தியத்தில் நிலநடுக்கம்!

யோக்ஷையர் வடக்கு கடற்பிராந்தியத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்காபுரோ வடக்கு கடற்பிராந்தியத்தின் கிழக்கு பகுதியிலிருந்து 100மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக பிரித்தானிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அத்துடன் இந்த நிலநடுக்கத்தினால் கட்டமைப்பு சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கடற்பிராந்தியத்தில் வருடம்தோறும் 3 முதல் 3.9 ரிக்டருக்கு இடைப்பட்ட நான்று நிலநடுக்கங்கள் உணரப்படுவது வழக்கம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>