siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 29 மார்ச், 2017

நூறு கிலோ எடையுள்ள தங்க நாணயம் ஜெர்மனி அருங்காட்சியகத்தில் கொள்ளை!!


ஜெர்மனி தலைநகர் பெர்லினில் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்த தங்க நாணயம் நேற்று முன்தினம் இரவு கொள்ளை போனது, அதன் மதிப்பு 4 மில்லியன் டாலர் (ரூ.3 கோடி) என 
மதிப்பிடப்பட்டுள்ளது.
கொள்ளை போன நாணயம் கனடா அரசால் கடந்த 2007-ம் ஆண்டு வழங்கப்பட்டது. ‘பெரிய பனை ஓலை’ 
என பெயரிடப்பட்டிருந்தது.
அதில் ராணி 2-வது எலிசபெத்தின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. சுத்த தங்கத்தால் இது உருவாக்கப்பட்டிருந்தது. எனவே இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
53 சென்டி மீட்டர் நீளமும், 3 சென்டி மீட்டர் பருமனும் கொண்டது. இது ‘புல்லட் புரூப்’ கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பாக 
வைக்கப்பட்டிருந்தது.
அருங்காட்சியகத்தின் ஜன்னலை உடைத்து ஏணி மூலம் கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த தங்க நாணயத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த அருங்காட்சியகத்தில் உலக நாடுகளின் நாணயங்கள் சேகரித்து பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு 5 லட்சத்து 40 ஆயிரம் வகை நாணயங்கள் உள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 28 மார்ச், 2017

மனிதக் கழிவு கொக்கா-கோலாவில் விஷத்தன்மை?

அயர்லாந்தில் வினியோகிக்கப்பட்ட கொக்கா-கோலா டின்களில் மனிதக் கழிவுகள் இருந்ததாக எழுந்த சர்ச்சை குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
லிஸ்பர்ன் நகரில் உள்ள கொக்கா-கோலா ஆலையில் கடந்த வாரம் ஒரு நாள் இரவுப் பணியின்போது, டின்களை நிரப்பும் இயந்திரங்கள் அடைத்துக்கொண்டதாகவும், அதைப் பரிசோதித்ததில் மனிதக் கழிவுகளை ஒத்த ஒரு திரவம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆலையின் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இதற்கிடையில், குழாய்களில் அசுத்தம் காணப்பட்டது உண்மைதான் என்றபோதும், அதனைக் கொண்டு நிரப்பப்பட்ட டின் தொகுதிகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன என்றம் கொக்கா-கோலா நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இருந்தபோதிலும், அன்றைய தினம் வினியோகிக்கப்பட்ட டின்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்க அனுப்பப்பட்டுள்ளன.
இது மிக மிக அரிதாக நடக்கும் ஒரு தற்செயல் நிகழ்வு என்றும், அசுத்தமான கொக்கா-கோலா டின்கள் வினியோகத்துக்கு விடப்படவில்லை என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கொக்கா-கோலா நிறுவனத்தின் பானங்களில் குறித்த வகை நஞ்சூட்டப்பட்டிருப்பதை நைஜீரிய நீதிமன்றம் ஒன்று 
உறுதி செய்துள்ளது.
நைஜீரியாவில், கொக்கா-கோலா மற்றும் அதன் சகோதர உற்பத்திகளான ஃபென்ட்டா, ஸ்ப்ரைட் என்பனவற்றை அருந்துபவர்களின் பற்கள் விரைவாகப் பழுதாகிவருவதாகப் புகாரளிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளில், ஒன்றுக்கொன்று ஒவ்வாத அமிலங்கள் சில இந்தத் தயாரிப்புக்களில் சேர்க்கப்படுவதாகவும், அப்படிச் சேர்க்கப்படுவதால் அவை நச்சுத்தன்மை கொண்டவையாக மாறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, நைஜீரிய உணவுப் பாதுகாப்பு அமைப்புக்கு சுமார் ஆறாயிரத்து ஐநூறு அமெரிக்க டொலர்களை அபராதமாகச் செலுத்தும்படி கொக்கா-கோலா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவ்வமைப்பின் பரிசோதனைகளின் பின் அவை தரமானவையாக அறிவிக்கப்படும் வரை உற்பத்தியை இடைநிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


போதை பொருளுடன் கடலிற்குள் கனடிய கப்பல்கள்!

கனடிய கப்பல்கள் சர்வதேச நீர்ப்பரப்பில் ஒரு பாரிய கொக்கெயின் கடத்தலில் 26 நாட்கள் காலப்பகுதியில் ஈடுபட்டிருந்ததாக யு.எஸ்.கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
14.51 மெட்ரிக் தொன்கள் எடையுள்ள இந்த சம்பவம் குறித்து விவாதிக்க நிறுவனம் ஒரு செய்தி மகாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
இப்போதை பொருட்களின் மொத்த விற்பனை மதிப்பு 420மில்லியன் யு.எஸ்.டொலர்களாகும்.
கனடிய கப்பல்கள் கடலோர காவற்படை சட்ட அமுலாக்க பற்றற்ற அணியினருடன் பயணித்து கொண்டிருக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தனித்தனியாக 17 சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் கடத்தல் அதிகார பூர்வமாக
 தடுக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>