Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 3 நவம்பர், 2017

தமிழ் மொழி. கனடா பள்ளிகளில் இரண்டாம் மொழியாக படிக்கலாம்!

தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும்.
Prime Minister Trudeau attends TamilFest in Scarborough. August 26, 2017. //// Le premier ministre Trudeau participe au TamilFest, à Scarborough. 26 août 2017.
தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.
தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.
அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின.இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள் .
தென்னாபிரிக்கா, குயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட் டொபாகோ போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.
புலம் பெயர்ந்த தமிழர்களின் பெரு முயற்சியினால் தற்போது ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழ்மொழி இரண்டாம் மொழியாக பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>



புதன், 1 நவம்பர், 2017

சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

¨மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து தொழில்புரிகின்ற இந்திய, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்த நாட்டின் அரசாங்கம்$
 தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்காக மாதாந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, அந்த நாட்டின் குடிவரவுத் திணைக்களப் பணிப்பாளர் டடுக் செரி முஸ்தஃபார் அலி
 தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக தங்கி இருந்து தொழில் புரிகின்றவர்களை பதிவு செய்துக் கொள்வதற்காக அங்கு கால அவகாசம்
 வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பணியாளர்களுக்கு இலத்திரனியல் அட்டை(e-card) வழங்கப்பட்டு, அவர்களை பதிவு செய்யும் நடவடிக்கையும் கடந்த ஜுலை மாதம் வரையில் 
முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் எதிர்காலத்தில் சட்டவிரோத பணியாளர்களைக் கட்டுப்படுத்துவதற்காக, தீவிர சோதனைகள் நடத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>