siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 3 டிசம்பர், 2018

தீவிரமடைந்த போராட்டம் பிரான்ஸ் பாரிஸில்

பிரான்ஸ் பாரிஸில் போராட்டம் தீவிரமடைந்தமையைத் தொடர்ந்து G20 உச்சி மாநாட்டிலிருந்து அவசரமாக புறப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை
 நடத்தியுள்ளார்.
எரிபொருள் விலையுயர்வை எதிர்த்து பாரீஸில் போராட்டம் நடத்துவோர் வன்முறையில் இறங்கியுள்ளனர்.
பாரீஸிலுள்ள அதிபர் மாளிகையில் ஜனாதிபதி மேக்ரான் கூட்டிய அவசரக் கூட்டத்தில் பிரான்ஸ் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறையின் உயர் அதிகாரிகள் 
கலந்து கொண்டனர்.
அவசர நிலை பிரகடனம் செய்யப்படவிருப்பதாக செய்திகள் உலவிய நிலையில், அப்படி ஒரு எண்ணம் தற்போதைக்கு அரசுக்கு இல்லை என்று தெரியவந்துள்ளது.
முன்னதாக மேக்ரான் பிரான்சின் புராதன நினவிடமாகிய Arc de Triomphe இல் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வு செய்தார்.
போராட்டக்காரர்கள் கார்கள் ஆகிய பொருட்களை சேதப்படுத்தியிருந்தனர்.
சேதமடைந்த பொருட்கள் முதலானவற்றை பார்வையிட்ட மேக்ரான், பொலிசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.
இருப்பினும் அவரை அவமதிக்கும் வகையில் சிலர் குரல் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தில் ஈடுபட்ட 412 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த பொலிசார், அவர்களில் 378 பேர் இன்னும் காவலில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதிலும் 263 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களில் 133 பேர் தலைநகரில் காயமடைந்தவர்கள் என்றும் பாதுகாப்புப் படையினரில் 23 பேரும் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள்
 வெளியாகியுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஐ.நா எச்சரிக்கை மனிதகுலம் முற்றாக அழியும் அபாயம்?.

மனிதகுலம் முற்றாக அழிந்துவிடும் என ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மிகப்பெரிய காலநிலை மாற்ற மாநாடு போலந்தில் ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் உடனடி நவடிக்கைய வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸில் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 200 நாடுகள் கலந்துகொண்டுள்ள இம்மாநாடு 2C (3.6F) க்கு கீழே காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு பரிஸ் காலநிலை உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் கிட்டத்தட்ட 200 நாடுகளின் பிரதிநிதிகள் பசுமை இல்ல வாயு வெட்டுகளை கண்காணிப்பதற்கான ஒரு விதிமுறை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைத் தலைவர் மரியா எஸ்பினோசா,
தற்போதைய விகிதத்தில் காலநிலை மாற்றம் முன்னேறினால் மனிதகுலம் முற்றாக அழிந்துவிடும் ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கை 
விடுத்துள்ளார்.
நாங்கள் அவசரமாகவும் தைரியத்துடனும் செயல்பட வே
ண்டும் எனவும் எதிர்கால தலைமுறையினருக்கு பொறுப்பாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
பரிஸில் ஒப்புக் கொள்ளப்பட்டதைவிட கார்பன் உமிழ்வுகள் மேலும் அதிகமாக குறைக்கப்படவேண்டுமென இந்த ஆண்டு பல விஞ்ஞான அறிக்கைகள் எச்சரித்துள்ள நிலையில் இம்மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
பரிஸ் உடன்பாட்டிற்கு தங்கள் அர்ப்பணிப்பை G20 நாடுகள் கடந்தவார இறுதியில் உறுதிப்படுத்தியதையடுத்து இந்தவாரம் இடம்பெறும் காலநிலை மாற்ற உச்சிமாநாடு மேலதிக ஊக்கத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


உலக மாற்றுத்திறனாளிகள் நாள் டிசம்பர் 03:

ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என டிசம்பர் 3-ஐ அனுசரிக்கின்றது.
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால்
ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (அனைத்துலக ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3-ஐ அனுசரிக்கின்றது.
1981 ஆம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது.
1982 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.
பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன.
பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு 
உறுதுணை புரிகின்றன.
அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொ
ள்ளப்படுகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>