siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 16 டிசம்பர், 2019

இலங்கையரல் டுபாயிலுள்ள வேலை செய்த வீட்டில் மில்லியன் ரூபா மற்றும் பொருட்திருட்டு

இலங்கையர் ஒருவருக்கு அனுதாபம் காட்டி டுபாயிலுள்ள தமது வீட்டிற்கு பணியாளராக அழைத்து சென்ற இந்திய கோடீஸ்வரத் தம்பதியின் வீட்டில் கைவரிசையைக் காட்டிய இலங்கையர் ஒருவரை டுபாய் பொலிசார் வலைவீசித் தேடி வருகிறார்கள்.இலங்கை 
மதிப்பில் 200 மில்லியன் ரூபா திருடியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த இந்திய தம்பதி சில மாதங்களின் முன்னர் இந்தியாவிற்கு சென்ற போது, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த இலங்கையர் ஒருவரை சந்தித்துள்ளது. அவரது 
நிலைமையை பார்த்து இரங்கி, தமது வீட்டில் பணியாளராக இருக்கிறாரா என வினவியுள்ளது. அந்த நபரும் சம்மதிக்க, அவரை டுபாயின் அல் கர்ஹூட்டில் உள்ள தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அண்மையில் அந்த தம்பதி ஐரோப்பிய, அமெரிக்க சுற்றுலாவிற்கு 
சென்ற சமயத்தில் திருட்டுச் இடம்பெற்றுள்ளது.தனது தாய்க்கு சுகவீனம் என குறிப்பிட்டு, இடைப்பட்ட நாளில் இலங்கைக்கு அவர் வந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது. இம்மாத ஆரம்பத்தில் தமது வீட்டுக்குத் திரும்பிய தம்பதி, லொக்கர் உடைக்கப்பட்டு திருடப்பட்டதை
 கண்டறிந்தனர்.
நகைகள், 6,500 டொலர் மதிப்பிலான எட்டு மின்னணுக் கைக்கடிகாரங்கள், 56,716 டொலர் மதிப்புள்ள கிரெடிட் கார்ட் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டதாக டுபாய்ப் பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.இலங்கைக்கு வந்த சந்தேகநபர் தற்போது டுபாய்க்கே திரும்பி சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரைக் கண்டறிய விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளதாக டுபாய்ப் பொலிசார் அறிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, 14 டிசம்பர், 2019

கூகுள் தேடலில் உலகளாவிய ரீதியில் முதலிடம் பிடித்த இலங்கை

உலகளாவிய ரீதியில் கூகிள் தேடுபொறியின் ஊடாக அதிகம் தேடப்பட்ட நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.2019ஆம் ஆண்டிற்கான கூகிள் தேடுதல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அமெரிக்கா மேற்கொண்ட ஆய்விற்கமைய இந்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இலங்கை அதிகமாக தேடப்பட்ட நாடாக மாறியுள்ளது.அதற்கமைய கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கை எங்கே என தீவிரமான தேடப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரியந்துள்ளது.
ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலே இதற்கு முக்கியமான காரணமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.கூகிள் தேடுதலில் இலங்கை குண்டு வெடிப்பு மற்றும் உலகில் இலங்கை எங்குள்ளது? போன்ற வார்த்தைகளே தொடர்ந்து தேடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இதேவேளை, 
அமெரிக்கர்கள் இடையில் பிரபலமான சுப்பர் பந்து மைதானம் அல்லது வேற்று கிரகவாசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பகுதி ஆகிய முக்கிய இடங்களை பின்தள்ளி
 இலங்கை முன்னணி இடம் பிடித்துள்ளது.அத்துடன் அமெரிக்கர்களில் நூற்றுக்கு 90 வீதமானோர் 
யகூகுள் கணக்குகளை பயன்படுத்துகின்ற நிலையில் அவர்களில் 87 வீதமானோர் இணையம் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.அதற்கமைய 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவிலும் அதிகமானோர் ‘றூநசந ளை’ என்ற வார்த்தையில் அதிகமாக இலங்கையையே தேடியுள்ளதாக கூகிள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 26 நவம்பர், 2019

குழந்தைகளை தொலைபேசி பாவனையிலிருந்து பாதுகாக்க இந்தோனேஷிய அரசின் திட்டம்

குழந்தைகள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாவதை தடுக்க புதுமையான வழிமுறையொன்றை இந்தோனேசிய அரசாங்கம் எடுத்துள்ளது.இன்றைய சமூகத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மிக அதிகமாக இருக்கின்றது. கிட்டத்தட்ட வயது வித்தியாசமில்லாமல்
 குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் என அனைவரும் எல்லோரும் அதற்கு அடிமையாகி இருக்கிறார்கள். இதனால், பெற்றோர்கள்
 தங்கள் குழந்தைகளை அதிலிருந்து பாதுகாக்க சிரமப்படுகிறார்கள்.இந்நிலையில், இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள பண்டங் நகரில் ஸ்மார்ட்போன் 
பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமையாவதை தடுக்க நூதன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி அரசு சார்பில் 10 பாலர் பாடசாலைகள் மற்றும் 2 உயர்நிலை பாடசாலைகயில் பயிலும் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகள் 
கொடுக்கப்பட்டு அதனை வளர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுவரை சுமார் 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசின் இந்த திட்டத்திற்கு பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.”என்னை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்” என்று 
எழுதப்பட்டு கோழிகுஞ்சுகளின் கூண்டுகளில் வைக்கப்பட்டுள்ளன.“இந்த கோழிக்குஞ்சு வளர்ப்புத் திட்டம் குழந்தைகளின் கவனத்தை ஸ்மார்ட்போன் திசை திருப்புவதை நோக்கமாகக் கொண்டது மட்டுமல்லாமல், விலங்குகளை
 நேசிப்பதற்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கும் அவர்களை வழிநடத்த நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.“அவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு முன்பும், 
பாடசாலையில் இருந்து வீட்டிற்கு வந்த பின்னரும் கோழிகளுக்கு உணவளிப்பார்கள். இதன்மூலம் 
அவர்கள் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்வார்கள்
. ”இணைய பாதுகாப்பு நிறுவனமான ESET இன் 2019 கணக்கெடுப்பில், இந்தோனேசியாவில் சராசரியாக மக்கள் தினமும் மூன்று மணிநேரம் இணையத்தில் நேரத்தை செலவிடுவதாகவும், அதில், 10 சதவீதமானோர் வலைத்தளத்தில் 10 மணித்தியாலங்களை செலவிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது

புதன், 13 நவம்பர், 2019

சீனாவில் இளைஞனின் காதிற்குள் படையெடுத்து குடியிருந்த கரப்பான் பூச்சிகள்

சீனா குவாண்டாங் மாநிலத்தில் உள்ள ஹுயாங் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனின் காதுக்குள் இருந்து கரப்பான் பூச்சிகளை வைத்தியர்கள் அகற்றியுள்ளார்கள்.காதுக்குள் ஏதோ அசைவு இருப்பதை உணர்ந்து, இளைஞன் தனது 
குடும்பத்தினரிடம் காதுக்குள் எதாவது இருக்கிறதா எனப் பார்க்கச் கூறியுள்ளார்.ஆனால், அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. வலி அதிகரித்ததன் காரணமாக உடனே அவர் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவரின் காதை பரிசோதித்துப் பார்த்த வைத்தியருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. காதுக்குள் ஒரு கரப்பான் பூச்சி பத்துக்கும் மேற்பட்ட குட்டிகளோடு இருந்துள்ளது. இதனால் உடனடியாக
 ஒவ்வொரு கரப்பான் பூச்சியாக கருவி மூலம் வெளியே எடுத்துள்ளனர்.குட்டிகளை வெளியே விரைவில் எடுத்துவிட்டாலும், தாய் கரப்பான் பூச்சியை
 அகற்றுவதில் வைத்தியர்களுக்கு பெரும் சிரமம் இருந்துள்ளது. இதனால், களிம்பு கொண்டு காதை சுத்தப்படுத்தி நீண்ட போராட்டத்துக்குப்பின் தாய் கரப்பான்பூச்சியை அகற்றியுள்ளனர். ‘லீவ் தினமும் சாப்பிட்டதுபோக 
மீதி உணவுகளை தனது படுக்கையறையிலே 
வைத்துள்ளார். அதனால் உணவை சாப்பிட வரும் கரப்பான் பூச்சிகள் காதுக்குள் சென்றிருக்கின்றது.எத்தனை நாட்களாக கரப்பான் பூச்சி காதில் இருந்தது எனத் தெரியவில்லை எனவும், 
வைத்தியர் தெரிவித்துள்ளார்.

வியாழன், 5 செப்டம்பர், 2019

திருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்


திருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்று சர்வதேச செய்திகள்
தெரிவித்துள்ளன.
இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 29 மே, 2019

அவசர அறிவிப்பு Whats-app பயனாளர்களுக்கு

hatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு, ஊடுருவல்காரர்கள் கண்காணிப்பு மென்பொருளைப் பொருத்தியதை WhatsApp 
உறுதிப்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனீட்டாளர்களே குறிவைக்கப்பட்டனர் என்றும், அந்த ஊடுருவல் நடவடிக்கை மிகவும் திறமையாகக் கையாளப்பட்டது என்றும் WhatsApp
 அறிவிததுள்ளது.
ஊடுருவல் சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை, WhatsApp செயலியின் ஒரு குறைபாடு சரிசெய்யப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செயலியை update அதாவது புதுப்பித்துக்கொள்ளுமாறு நேற்று WhatsApp அதன் ஒன்றரை பில்லியன் பயனீட்டாளர்களைக் கேட்டுக்கொண்டது.
உலகச்செய்திகள் 14.05.2019
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 15 மே, 2019

இலங்கையில் பிரித்தானிய மனைவிக்கு எமனாக மாறிய ஹொட்டல்

இலங்கைக்கு தேனிலவு சென்ற போது மனைவியை பறிகொடுத்த கணவன் அவரை மறக்க முடியாமல் இரவில் நட்சத்திரங்களைப் பார்த்து பேசிக் கொள்வதாக வேதனையுடன் கூறியுள்ளார்.லண்டன் நகரைச் சேர்ந்தவர் கிளன் சந்தாரியா. 33 வயதாகும் இவர் வடக்கு லண்டனில் உள்ள பின்ச்லே பகுதியில் வசித்து வருகிறார்.
இவருக்கும் இதே பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணான உஷிலா படேல் என்பவரும் மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் 19ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.திருமணத்தை கொண்டாடும் வகையில் இரண்டு நாள் தேனிலவு பயணமாக இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள் அங்கிருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். கடந்த 25ம் திகதி உணவருந்திய தம்பதியினர் இருவரும் அங்கேயே 
மயங்கி விழுந்தனர். இதில் உஷிலா படேல் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்தார்.இந்நிலையில் அன்று நடந்த சம்பவத்தைப் பற்றி சந்தாரியா கூறுகையில், முதல் நாள் இரவில் தான் உணவு சாப்பிட்டோம். மறுநாள் காலையில் அவள் வாந்தி எடுக்க ஆரம்பித்துவிட்டாள்.மூன்று பேர் எங்களை மருத்துவமனையில் சேர்த்தனர். 
வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருப்பாள். இங்கு இருக்கும் அதிகாரிகள் என்னை ஒரு குற்றவாளியாக நடத்துவதில்லை. என்றாலும் என்னைப் பாதிக்கப்பட்டவனைப்போலும் நடத்துவதில்லை.இந்த உலகம் முழுவதும் எனக்கு எதிராக இருப்பது போல் உணர்கிறேன். இருந்தாலும், அவளை விட்டு வரப்போவதில்லை என்று சோகமுடன் கூறியுள்ளார்.மேலும், இந்த விவகாரத்தில் சந்தாரியாவுக்கு ஆதரவாக இருக்கப்போவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்திருந்தது 
குறிப்பிடத்தக்கது.
உஷிலாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், உடல் வறட்சி மற்றும் வாந்தியின் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மனைவியின் மரணத்துக்கு ஹோட்டலில் கொடுத்த உணவே காரணம் என சந்தாரியா குற்றம் 
சாட்டிய நிலையில், ஹோட்டல் நிர்வாகமோ சாண்ட்விட்ச், சிப்ஸ் இவர்கள் சாப்பிட்டனர்.கூடவே வோட்கா மற்றும் 
கூல்ட்ரிங்ஸ் மட்டுமே குடித்தனர். அப்படி இருக்கையில் எங்கள் உணவு தரமானதாக இல்லை எனக் கூறுவதே ஏற்க 
முடியாது என ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 14 பிப்ரவரி, 2019

பத்து வழிகள் கனடாவிற்கு செல்ல விரும்புபவர்களுக்கு

காலத்துக்கு காலம் கனடிய அரசுகள் இறுக்கங்கள், தளர்வுகள் என மாறுபட்ட சூழ்நிலைகளை, கனடாவிற்கு வரும் பாதைகளின் ஒவ்வொரு வழியிலும் சாதகமாகவும், பாதகமாகவும், சட்டங்களிலும் செயற்பாடுகளிலும் உருவாக்குகின்றன...
கனடிய அரச குடிவரவுத்துறையின் இணையத்தள தகவல்கள், குடிவரவு சட்டத்துறை நிபுணர்களின் ஆய்வு கட்டுரைகள், கருத்தரங்குகளில் அறிந்துகொண்ட விடயங்கள் ஆகியவற்றை, உசாத்துணையாக கொண்டு பின்வரும் பத்து விடயங்களை சுருக்கமாக 
குறிப்பிடுகின்றேன்.
காலத்துக்கு காலம் கனடிய அரசுகள் இறுக்கங்கள், தளர்வுகள் என மாறுபட்ட சூழ்நிலைகளை, கனடாவிற்கு வரும் பாதைகளின் ஒவ்வொரு வழியிலும் சாதகமாகவும், பாதகமாகவும், சட்டங்களிலும் செயற்பாடுகளிலும் உருவாக்குகின்றன.
தகவல்களையும் விண்ணப்பங்கள் போன்ற விடயங்களையும் இணையத்தளத்தினூடாகவும், மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கனடிய அரசின் பிரதிநிதித்துவ காரியாலயமாகவுள்ள கனடிய தூதரகங்கள் மூலமாகவும் விபரமாக பெற்றுக்
 கொள்ளலாம்.
1) தற்காலிக விசாப்பெற்று உல்லாசப் பிரயாணியாக பிரவேசித்தல்(Visiting by tourist Visa )
சில குறிப்பிட்ட, கனடாவினால் அங்கீகரிக்கப்பட்ட நாட்டு மக்கள் தங்கள் நாட்டு கடவுச்சீட்டுடன் கனடாவிற்கு பிரயாணம் செய்வதற்கு எதுவிதமான விசாவும் முன்கூட்டியே பெறவேண்டிய அவசியம் இல்லை. கனடாவிற்கு வந்திறங்கிய இடத்தில் வைத்து ஆறு மாதத்திற்கு தற்காலிகமான விசா வழங்குவார்கள்.
உதாரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள், அவுஸ்திரேலியா, கொங்கொங் , ஜப்பான், நியூசிலாந்து, சிங்கப்பூர், தாய்வான், என 51 நாடுகளை குறிப்பிடலாம்.
இலங்கை இந்தியா உட்பட ஏனைய நாட்டு மக்கள் இந்த வழியில் கனடாவிற்கு வர வேண்டுமானால், முற்கூட்டியே தமது நாட்டில் உள்ள கனேடிய தூதராலயத்திற்கு விண்ணப்பித்து தற்காலிக விசா பெற்றுக் கொள்ளவேண்டும்.
விசா வழங்க முன்பு கனேடிய தூதராலயம் பின்வரும் விடயங்களை கூர்ந்து பரிசீலனை செய்து கொள்ளும்
தற்போது மின்னஞ்சல் மூலமாகவும் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். (ETA - Electronic Travel Authorization )
* தமது சொந்த நாட்டில் தொழில்,வடு,நிதியியல் ரீதியான சொத்துக்கள் குடும்ப உறவுகள் யாவற்றினையும் வைத்திருக்கும் ஒருவர் தற்காலிகமாக கனடாவிற்கு போய் குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்பி வருவதே நோக்கம் என்பது நம்பக்கூடிய அளவிற்கு தூதராலய விசா அதிகாரிகளினால் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.
* ஆரோக்கியமான உடல் நிலை, குற்றவியல் பதிவு எவையும் இல்லாதிருத்தல் நிரூபிக்கப்படல் வேண்டும்.
* கனடாவில் தங்கப் போகும் இடம் அதற்குரிய நிதி நிலைமைகள் காட்டப்பட வேண்டும்.
உறவினர்கள், நண்பர்களுடன் தங்குவதாக இருந்தால் அவர்களின் விபரங்கள், நிதி நிலைமைகள், அவர்களின் ஆதரவுப் பத்திரம், மற்றும் அழைப்புக்கு கடிதம் (Letter of Invitation ) என்பன தேவை.
இங்கு இருவகையான விசாக்கள் வழங்கப்படும்.
1) ஒருமுறை மட்டும் பிரவேசிக்கும் விசா (Single Entry Visa) இது குறிப்பிட்ட ஆறு மாதங்களுடன் நிறைவடைந்து விடும்.
2) பலமுறை பிரவேசிக்கும் விசா (Multiple entry visa ) சுமார் பத்து வருடங்களு பலமுறை போய் வரலாம்.
ஒருமுறை சென்றால் ஆறு மாதங்களுக்கு மட்டுமே 
கனடாவில் தங்கி நிற்கலாம்.
2)கல்வி, தொழில் துறைகளின் திறமைசாலிகளுக்கு வழங்கும் விசா (Federal Skill worker visa )
பல்கலைப் பட்டப்பிடிப்புகளுடன் சேர்ந்த தொழித்துறை சார்ந்த புலமையாளர்களை ஏனைய உலக நாடுகளில் இருந்து கனடாவிற்கு குடிவருவதற்கான வழங்கப்படும் நிரந்தர குடியுரிமை விசாவே இதுவாகும்.
இங்கு கனேடிய குடிவரவு அமைச்சு பின்வரும் ஆறு விடயங்களை கருத்தில் கொண்டு, ஒரு புள்ளி விபர மதிப்பீட்டின் அடிப்படையில் நிரந்தர குடியுரிமை விசா வழங்குவது பற்றி முடிவு செய்கின்றது.
*கல்வி Maximum 25%
*கனேடிய மொழிகளில் ஒன்றில் திறமை (Skill in English or french ) 16-18%
*தொழில் அனுபவம் 9-15%
*வயது (Age ) Maximum 12% 18-35 வயதிற்கு இடைப்பட்டோர். மேலதிக ஒவ்வொரு வயதிற்கு ஒவ்வொரு புள்ளி 47 வயது வரை குறைக்கப்படும்.
* கனடாவில் உடனடியாக உகந்த தொழில்வாய்ப்பு 0-10%
* கிடைக்கும் ஆதரவுகள் & வாய்ப்புக்கள் மற்றும் ஆரம்ப நிலையில் பண வசதி
தற்போது உள்ள குடிவரவு ஒழுங்கு விதிகளின் படி 67% புள்ளிகள் கிடைத்தால் சாதகமான முடிவு கிடைக்கும்.
இவற்றில் இறுக்கங்கள் பல்வேறு காலங்களிலும் ஏ
ற்படுவது வழமையாகும்.
3) துறை சார்ந்த சிறப்பு தொழில் திறமையுள்ளவர்களுக்கு வழங்கும் நிரந்தர குடியுரிமை விசா
கல்வி தொழில் துறைகளில் திறமைசாலிகளுக்கு வழங்கும் நிரந்தர குடியுரிமை விசாவில் இருந்து இக் குடியுரிமை விசா சற்று வேறுபட்டது. அதாவது கல்வித் தகமை என்பது இங்கு பெரிதாக 
கருத்தில் கொள்வது இல்லை.
இங்கு குடியுரிமை விசாவினைப் பெறுவதற்கு பின்வரும் தகுதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
*கைத்தொழில், மின்னியல்,இயந்திரவியல், கட்டிட துறைகள், சமையல்துறை, வேளாண்மைத்துறை, போன்ற துறைகளில் இரு வருடங்களிற்கு மேலாக முழுநேரமாக தொழில் செய்த 
அனுபவம் இருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தொழில் துறை என்பது அரச துறை சார்ந்த நிறுவனங்களின் சான்றிதழ் பெற்ற தொழில் சார்ந்த நிபுணராக இருத்தல் வேண்டும்.
கனேடிய மொழிகளான ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழிகளில் ஓரளவேனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
*கனடாவில் வந்து சேர்வதற்கும் கால்ஊன்றுவதற்கும் ஓரளவிற்கேனும் ஆரம்பகட்ட நிதி வசதி இருக்க வேண்டும்.
4)கனடாவில் கல்விகற்கும் மாணவர்களுக்கான விசா
ஒவ்வொரு வருடமும் சுமார் 200,000 மாணவர்கள் உலகின் பல பாகங்களிலும் இருந்தும் கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் கல்வி பயில்வதற்காக வருகின்றனர் என்பது புள்ளிவிபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கனடாவின் பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உட்பட பல்வேறு வகையான கல்வி நிறுவனங்கள் சர்வதேச மாணவர்களை 
அனுமதிக்கின்றன.
முதலில் இந்தக் கல்வி நிறுவனத்தில்? எந்த துறையில்? கல்வி பயில விரும்புகின்றீகளோ அந்த நிறுவனத்தில் அடர்க்குரிய கட்டணங்களை செலுத்தி அனுமதி பெறுதல் வேண்டும். அனுமதி அவரவர் நாடுகளின் கனேடிய தூதராலயங்களினூடாகவும் 
பெற்றுக்கொள்ளலாம்.
கனடாவில் வாள்பவரின் உதவி மூலமும் பெற்றுக்கொள்ளலாம். அனுமதியின் பின் அவர்களின் நாடுகளில் உள்ள கனேடிய தூதராலயத்தில் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கனேடிய தூதராலயம், விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர் குறிப்பிட்ட துறையில் கல்வி பயில தகுதி, ஆர்வம் உட்பட,
 கல்வி கற்பதற்கு தான் செல்கின்றாரா? அவருக்குள்ள நிதி வசதிகள் என்பவற்றினை பரிசீலனை செய்து அவர்களின் நேர்முகப் பரீட்சையில் கனடா பாதுகாப்புக்கு ஆபத்து இல்லாதவர் என்பதை உறுதிப்படுத்திய பின்னர் விசா வழங்குவார்கள். கற்கை நெறியினை கனடாவில் முடித்தவர் அதே துறையில் தொழில் செய்யும் அனுமதி பத்திரம் பெற்று தாற்காலிகமாக தொழில் கிடைத்தால் தொழிலும் செய்யலாம்.
இரு வருடங்கள் கனடாவில் தொழில் செய்த பின்னர் நிரந்தர பதிவுரிமைக்கும் விண்ணப்பிக்கலாம். மூன்று வருட நிரந்தர வதியுரிமைக்கு பின்பு கனேடிய குடியுரிமைக்கும் விண்ணப்பிக்கலாம்.
5) கனடாவின் மாகாண அரச வதிவிட நியமனங்களினூடாக பெரும் நிரந்தர வதியுரிமை
கனடாவுக்கு நிரந்தர வதியுரிமை பெற்று குடியேறும் வெளிநாட்டவர் எவரும் பொதுவாக தத்தமது வசதிகள் வாய்ப்புக்களுக்கு ஏற்றமாதிரி கனடாவின் எந்தவொரு மாகாணத்திலும் குடியேறலாம். மத்திய அரசு என்ற பேரரசின் கீழ் உள்ள சிற்றரசுகள் போல் பத்து மாகாணங்களும் மூன்று பிரதேசங்களும் தங்களுக்குரிய இறைமைகளுடன் ஆட்சி செய்கின்றன. இங்கு ஏனைய நாடு ஒன்றிலிருந்து குறிப்பிட்ட ஒரு மாகாணத்தில் தொழில் செய்து அந்த மாகாணத்திலேயே நிரந்தரமாக குடியேறுவேன் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கும் நிரந்தர வதியுரிமை 
விசாவே இதுவாகும்.
ஒவ்வொரு மாகாண அரசும் இந்தப் பிற நாட்டவர்கள் குடியுரிமை விடயங்களில் தங்களுக்குரிய கொள்கை, திட்டங்களை தங்களின் தேவைகளுக்கு ஏற்றமாதிரி தாங்களே
 வகுக்கின்றன.
மாகாணங்களின் பொருளாதார வளர்சிக்காக வெளிநாட்டிலிருந்து குடியேறுபவர்களை பரவலாக்கம் செய்வதற்காக இத்தகைய வதிவுரிமை விசாக்களை கனேடிய அரசு வழங்குகின்றது. இங்கு முதலில் குறிப்பிட்ட மாகாண அரசிற்கு நேரடியாக விண்ணப்பித்து தங்களின் கல்வித் தராதரம், தொழித் திறமைகள் அனுபவங்களிற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். குடியேறப் போகும் மாகாணத்தின் அங்கீகாரம் கிடைத்த பின்பு பின்வரும் விலாசத்திற்கு விண்ணப்பபங்களை அனுப்புதல் வேண்டும்.citizenship &immigration Canada
provincial Nominee Program
Centralized Intake Office
P.O .Box. 1450
Sydney, NS, B1P 6k5
Canada
அவருடைய நாட்டில் உள்ள கனேடிய தூதராலயத்தின் இறுதி பரிசீலனையில் பின்பு குடியுரிமை விசா வழங்கப்படும்.
கனடாவில் எந்த மாநிலத்தில் குடியேறலாம் என அங்கீகாரம் கிடைத்ததோ அந்த மாகாணத்தில் குடியேறி அவரின் வாழ்வினை ஆரம்பிக்கலாம்.
6) தனியார் வீடுகளில் தங்கி இருந்து தொழில் செய்யும் 
பணியாளர்களுக்குரிய விசா
கனடாவில் பல்வேறு வகையான வசதிகளோடு வாழ்பவர்கள் தங்கள் வீடுகளில் தங்கியிருந்து, விட்டு வேலைகளுடன், குழந்தைகளை பராமரிப்பது, முதியோரை பராமரிப்பது, உடல் இயங்க முடியாதவர்களுக்கு உதவுவது போன்ற தொழில்களுக்கு எவராவது தேவைப்பட்டால் 
வழங்கப் போகும் சம்பளங்கள், சலுகைகள் எவ்வளவு 
என்ற சட்டரீதியான ஒப்பந்தங்களுடன் ஏனைய நாடு ஒன்றிலிருந்து வருவித்து இரு வருடங்களிற்கு கனடாவில் நியமனம் வழங்கிக் கொள்ளலாம்.
இரு வருடங்கள் தொடர்ந்து ஒரு வீட்டில் பணிபுரிந்தவர் இரு வருடங்களின் பின்பு நிரந்தர வதிவுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து சில வருடங்களின் பின்பு நிரந்தர குடியுரிமையும்
 பெறலாம்.
குறிப்பிட்ட வேலைக்கு கனடாவில் இருந்து எவரையும் நியமனம் செய்ய முடியாதுள்ளது என்பதை மத்திய அரசிற்கு விண்ணப்பித்து உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அதற்குரிய உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டே ஏனைய நாட்டில் இருந்து பணியாளரை வருவிக்க முயற்சிக்கலாம்.
தொடர்ந்து ஏனைய நாடு ஒன்றிலிருந்து ஊதியம் வழங்கிப் பணியாளரை நியமனம் செய்யும் அளவிற்கு வலிமை உடையவர் என்பதும் அவருக்கு பணியாளர் ஒருவர் தேவை என்பதும் கனேடிய குடிவரவுத்துறை அமைச்சுக்கு விண்ணப்பித்து நிரூபிக்கும் போது தொழில் அனுமதி
 வழங்குவார்கள்.
தொடர்ந்து விண்ணப்பங்களை முன்னெடுக்கும் போது குறிப்பிட்ட தொழிலை கனடாவிற்கு சென்று பணியாற்றுவதற்கு பணியாளராக செல்பவர் தகுதியானவரா என்பதனை நேர்முகப் பரீட்சையின் போது அந்தந்த நாடுகளில் கனேடிய அரசின் பிரதிநிதியாக உள்ள தூதராலயங்கள் முடிவுபண்ணி விசாவினை வழங்கும்.
7) இன்னொரு நாட்டில் இருந்து பிள்ளைகளை சட்டரீதியாக தத்தெடுத்தல் .
சர்வதேச ரீதியாக தங்களின் பிள்ளைகளை போன்று இன்னொரு பிள்ளையை தத்தெடுத்து, அந்தப் பிள்ளையை கனடாவுக்கு எடுப்பது இன்னொரு வழியாகும். கனடாவில் வாழும் ஒருவர் இன்னொரு நாட்டில் இருந்து பிள்ளை ஒன்றினை சட்டரீதியாக தத்து எடுப்பது என்பது
 இன்னொரு கட்டம்.
கனேடிய மத்திய அரசு தத்து எடுப்பவர் குடியிருக்கும் மாகாண அரசு தத்து எடுக்கப் போகும் பிள்ளை பிறந்த நாட்டின் சட்ட திட்டங்கள், அவர்களின் நிபந்தனைகள், ஒழுங்குவிதிகள் எனப் பல படிமுறைகளில் அங்கீகாரங்களை பல்வேறு வகையான நிலைப்பாடுகளில் இருந்து இவ் விடயத்தில் பூரணமான வெற்றியினை அடையலாம்.
8) கனடாவில் அகதி அந்தஸ்து கோரல்
தமது சொந்த நாட்டில் போர் கால சூழல்களால் கொடுமைகள், துன்பங்கள், துயரங்களை எதிர்கொண்டு உயிர் வாழ அச்சமாக உள்ளவர் என்பது நிரூபிக்கப்பட்டு கனடாவில் அகதி நிலை கோரலாம்.
இவ்வாறு அகதி நிலை கூறுபவர்களை இரு 
வகையாக பிரிக்கலாம்.
1. கனடாவுக்கு வெளியே இன்னொரு நாட்டில் இருந்து கொண்டு கனடாவில் புகலிடம் கோருவது.
உதாரணமாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்
1. சிரியா போன்ற நாட்டில் உள்ள அகதிகளை கனேடிய அரசே பொறுப்பேற்று புகலிடம் வழங்கியது.
2. ஐந்துபேர் இணைந்து குழுவாக ஒரு அகதியின் புகலிடத்திற்கு 
ஸ்பொன்சர் செய்வது.
3. ஒரு நிறுவனம் அல்லது சமூகம் ஒரு அகதியின் புகலிடத்திற்காக ஸ்பொன்சர் செய்வது
2) கனடாவில் இருந்துகொண்டு அகதி நிலை கோருவது.
எதோஒரு வழியில் கனடாவிற்குள் வந்து சேர்ந்த தமிழர் பலர் கனடாவில் நிரந்தர வாழ்வினை அமைத்துக் கொண்டதனை இங்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
9) குடும்ப ஸ்பான்சர்
கனடாவில் நிரந்தரமாக குடியேறி தமக்கென ஒரு வாழ்வினை உருவாக்கிக் கொண்ட ஒருவர், ஏனைய நாடுகளில் இருக்கும் தங்கள் குடும்ப உறவுகளுக்கு பொன்சர் பண்ணி கனடாவிற்குள் அழைக்கு
ம் முறையே இதுவாகும்.
குடும்ப உறவுகளுக்கு பின்வருவோருக்கு 
ஸ்பொன்சர் செய்யலாம்
1. மனைவி அல்லது கணவன், பிள்ளைகளுக்கு செய்யும் ஸ்பொன்சர்
2.பெற்றோர் பேரன்மார்க்கு ஸ்பொன்சர் செய்தல்
3.தற்காலிகமாக பெற்றோர், பேரன்மார் சேர்ந்து வாழ வழங்கும் விரைவான சுப்பர் விசா
4. தகுதியான உறவினர்களுக்கு ஸ்பொன்சர். உதாரணமாக 1983 ஆம் ஆண்டு இலங்கையில் உருவான பாரிய இனக்கலவரம் உட்பட பல உள்நாட்டு கலவரங்கள், பாதிப்புக்குட்பட்டவர்களுக்கு இந்த வலியின் மூலம் மேற்கொண்ட ஸ்பொன்சர் பலருக்கு 
வெற்றியினை தந்தது.
10) வர்த்தகர்கள் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் விசா
கனடாவில் குடியேறும் உலகம் எங்கும் வாழும் மிகப் பெரும் செல்வந்தர்களுக்கே இம்முறை சாதகமாக
 அமையலாம்.
வர்த்தக முதலீடு செய்ப்பவர் குறைந்தது இரண்டு கனேடிய மில்லியன் டொலர் பணத்தினை கனடாவிற்குள் கொண்டுவர வேண்டும்.
குடியேற விரும்புபவரின் தெரிய வருமானம் பத்து மில்லியனாக இருக்க வேண்டும் என்பது இவை தொடர்பான சட்டப்பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அண்மையில் உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற சட்டமூலம் (Bill C -31) இந்த விசாவுக்கு
 தடை விதித்துளளது.


கஞ்சா செடி வளர்த்த தமிழர்கள் லண்டனில் : வீட்டினுள் புகுந்த பொலிசார்

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான ஹரோவில், நேற்று அதிகாலை பொலிசார் ஒரு வீட்டை முற்றுகையிட்டுள்ளார்கள் என  இணையம் அறிகிறது. குறித்த வீட்டுக்கு வெளியே சென்றாலே கஞ்சா மணம் வருவதாகவும். அந்த ஏரியா முழுவதும் கஞ்சா வாசனை வருவதாகவும் பொலிசாருக்கு தொடர்சியாக முறைப்பாடு செய்யப்பட்டு வந்துள்ளது. இன் நிலையில் அவர்கள் ஒரு வீட்டை குறி வைத்து அதனை நோட்டமிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
பொலிசார் வீட்டினுள் சென்று தேடிய வேளை அங்கே கஞ்சா இருக்கவில்லை. அதிர்சியடைந்த பொலிசார் வீட்டின் மேல் மாடியில் உள்ள லொஃப்ட்(பரன்) உள்ள இடத்தை பார்வையிட முற்பட்டுள்ளார்கள்.
 சிறிய கதவை மேலே தள்ளி உள்ளே சென்ற அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அழகாக லைட் எல்லாம் பூட்டி, மிக நேர்த்தியாக மின்சார விளக்குகள், வெப்பத்தை தரும் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா செடிகள் கொழு கொழுவென்று
 வளர்ந்து காட்சி தந்துள்ளது.
எதேட்சையாக இவர்கள் எதன் மேலோ காலை வைத்து, வயர் நசுங்கியதால் என்னமோ, சிறியதாக நெருப்பு பிடித்த காரணத்தால். ஏற்கனவே காய வைக்கப்பட்டிருந்த சில கஞ்சா தீ யில் கருகி புகை கிளம்பியுள்ளதாகவும். இதனை தற்செயலாக சுவாசித்த 2 பொலிசார்(ஒரு 
பெண் மணி உட்பட) சற்று தள்ளாடியவாறு வெளியேறியதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இது போக அங்கே சித்தப்பா மற்றும் சித்திக்கு தெரியாமல் தமிழ் இளைஞர் ஒருவர் கஞ்சா வளர்த்து வந்துள்ளார்.
 இவர்கள் இருவருக்கும் என்ன நடக்கிறது என்று புரியவே சில மணி நேரம் ஆகியுள்ளதாம். மருமகனா இப்படிச் செய்துள்ளான் என அறிந்து அவர்கள் திகைத்துப் போனார்கள் என்கிறார்கள் விடையம் அறிந்த வட்டாரத்தினர். உரும்பிராயில் இருந்து வந்து இப்படி செய்வான் என நான் நினைக்கவில்லை என்று அவர்கள் கடிந்துள்ளார்கள்.
இன்றைய கால கட்டத்தில், குறுக்கு வழியில் இலகுவாக பணம் சம்பாதிக்கவே சில தமிழ் இளைஞர்கள் முயற்ச்சி செய்து வருகிறார்கள். லண்டன் வந்து 20 ஆண்டுகள் ஆகியும் நேர்மையாக
 உழைத்து வாழ்க்கை நடத்தும் பல தமிழர்கள் உள்ளார்கள். ஆனால் நேற்று வந்த இளைஞர்கள் எல்லாம் அவுடி காரில் செல்ல ஆசைப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் காசை சம்பாதிக்க தேர்வு செய்யும் வழி தான் பிழையாக உள்ளது என்று தமிழ் ஆர்வலர் ஒருவர் கவலை
 வெளியிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நாடுகடத்தப்பட்ட 60 இலங்கையர்கள்! பிரான்சிலிருந்து

மீன்ப்பிடி படகொன்றில் சட்டவிரோதமாக பிரான்சிக்கு சொந்தமான ரியூனியன் தீவிற்கு அகதிகளாக சென்றவர்களில் 60 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் மீண்டும் குறித்த இலங்கையர்கள் திரும்பியுள்ளனர்.
பிரான்சிக்கு சொந்தமான விமாமொன்றில் இவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 52 ஆண்களும் 3 பெண்களும் மற்றும் 5 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர்களிடம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தற்போது வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் , அவர்கள் குற்றப்புலனாய்வுப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். கடந்த ஜனவரி 24ம் திகதி 72 பேருடன் சிலாபத்தில் இருந்து ஆழ்கடல் படகொன்றில் குறித்த நபர்கள் ரியூனியன் நோக்கி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 13 பிப்ரவரி, 2019

தமிழ் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கத்துக்கு வீடு அன்பளிப்பு

 ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனான 2018ஆம் ஆண்டின் இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் உள்பட 12 வீராங்கனைகளுக்கும் இன்று புதிய வீடுகள் வழங்கிவைக்கப்பட்டன .
வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் மொறட்டுவயின் 
அமைக்கப்பட்ட சாயுராபுர வீடமைப்பு வளாகத்திலேயே இந்த 12 வீடுகளும் இலங்கை அணியின் வீராங்கனைகளுக்கு
 வழங்கிவைக்கப்பட்டன .
வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவால் இந்த வீடுகள் இன்று கையளிக்கப்பட்டன .
2018ஆம் ஆண்டு செப்ரெம்பரில் சிங்கப்பூரில் ஆசிய சாம்பியன்ஷிப் வலைபந்தாட்டத் தொடர் நடைபெற்றது . இறுதிப் போட்டி சிங்கப்பூரின் ஸ்போர்ட்ஸ் ஹப் உள்ளக விளையாட்டரங்கில் செப்ரெம்பர்
 9ஆம் திகதி நடைபெற்றது .
இதில் இலங்கை அணி 69 – 50 என்ற புள்ளிகள் அடிப்படையில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாகவும் சம்பியின் பட்டத்தை சுவீகரித்து கொண்டுள்ளது .
இலங்கை வலைபந்தாட்ட அணியில் யாழ் . மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் இடம்பெற்றனர் .
ஆசியாவின் உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையும் அதி சிறந்த கோல் போடும் வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம்  , எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவர் இடம்பெற்றனர் . தேசிய வலைபந்தாட்ட அணியில் இரண்டு தமிழர்கள் ஏக காலத்தில் இடம்பெற்றமை இதுவே முதல் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


தமிழுக்கு புதிய பெருமை கனடாவில் இரண்டாம் மொழியாக கற்பிப்பு..

கனடா பள்ளிகளில் தமிழ் மொழி..! இரண்டாம் மொழியாக கற்பிப்பு..! தமிழுக்கு புதிய பெருமை…!!
தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும்.தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் 
வழங்கி வருகின்றது.
தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின.
இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், 
மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்.தென்னாபிரிக்கா, குயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட் டொபாகோ போன்ற 
நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், 
அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.புலம் பெயர்ந்த தமிழர்களின் பெரு முயற்சியினால்
 தற்போது ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழ்மொழி இரண்டாம் மொழியாக பள்ளிகளில்
 கற்பிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இலங்கையர்களுடன் ரியூனிஷின் தீவை சென்றடைந்த கப்பல்

பெருமளவு இலங்கையர்களை ஏற்றிய கப்பல் ஒன்று பிரான்ஸிற்கு சொந்தமான தீவான ரீயூனியனை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.பெண்கள், சிறுவர்கள் உட்பட 72 இலங்கையர்கள்
 இந்த கப்பலில் பயணிப்பதாக தெரியவந்துள்ளது.குறித்த கப்பல் நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து பிரான்ஸ் தீவை நோக்கி பயணித்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 9ஆம்
 திகதி நீர்கொழும்பில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பல், 25 நாட்களுக்குள் ரீயூனியன் தீவை நெருங்கியுள்ளது
சிலாபம் மீன் வர்த்தகரான சுதர்ஷன் பெரேரா என்பவருக்கு சொந்தமான கப்பலை மஹவெவ பிரதேசத்தை சேர்ந்த பெர்னாண்டோ என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்தக் கப்பலை ஓட்டியவர் ஆட்கடத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக கப்பல் உரிமையாளர் நீர்கொழும்பு பொலிஸ் மற்றும் குற்ற விசாரணை திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.கடந்த மாதம் 9ஆம் திகதி கப்பல் உரிமையாளர் தேவையான உணவு மற்றும் ஐஸ் ஆகியவற்றை வழங்கி மீன் பிடிக்க அனுப்பியுள்ளார். இதன் பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த கப்பலில் பயணித்தவர்களிடம் 6 முதல் 8 லட்சம் ரூபாய் வரை பணம் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்
 கிடைத்துள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

பிரித்தானியாவில் தஞ்சமடைந்த தமிழ்ப் பெண் கதறியழுகின்றார்

அழகான குடும்பத்தை பிரித்து விடாதீர்கள் இலங்கையை சேர்ந்த ஒரு குடும்பம் பிரித்தானியாவில் தஞ்சமடைந்த நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த வயதான பெண்ணை சொந்த நாட்டுக்கு செல்லும்படி உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.இலங்கையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (71). இவர் மனைவி சுஷிதா (63). தம்பதிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில், பாலசுப்ரமணியம் கடந்த 1994-ல் பிரித்தானியாவில் தஞ்சமடைந்தார்.அவருக்கு அப்போது 
அகதி அந்தஸ்து கொடுக்கப்பட்டது.
இதன்பின்னர் அவரின் நான்கு பிள்ளைகளும் சில ஆண்டுகள் கழித்து பிரித்தானியா வந்த நிலையில் அவர்களுக்கும் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது.இதையடுத்து பாலசுப்ரமணியத்தின் மனைவி சுஷிதா கடந்த 2014-ல் துணைவியாருக்கு வழங்கப்படும் விசா மூலம் பிரித்தானியாவுக்கு வந்தார்.பின்னர் இருவரும் தங்களின் மகன் மோகனதாஸ் (35) உடன் வசித்து வந்தனர்.தனது பிள்ளை மற்றும் பேர குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து கொடுப்பது, வீட்டு உதவிகளை செய்வது போன்ற விடயங்களை 
இருவரும் செய்து வந்தனர்.
இந்நிலையில், தனது விசாவை புதுப்பிக்க சுஷிதா 2016-ல் விண்ணப்பித்த நிலையில் அதை உள்துறை அமைச்சகம் நிராகரித்தது.காரணம், உணவு தொழிற்சாலை மேலாளராக பணிபுரிந்த சுஷிதாவின் கணவர் பாலசுப்ரமணியம் பணிஓய்வு பெற்ற நிலையில் அவரால் போதிய வருமானத்தை ஈட்ட முடியாது என்பதால், மனைவியான சுஷிதா அவருடன் தங்கமுடியாது என கூறப்பட்டுள்ளது.
து குறித்து சுஷிதா கூறுகையில், எனக்கு உடல்நலம் சரியில்லை, என் மொத்த குடும்பமும் இங்கு தான் உள்ளது. இலங்கையில் என்னை கவனித்து கொள்ள யாருமில்லை.பிரித்தானியாவில் செளகர்யமாக இருக்கிறேன். என் பேர பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பது மகிழ்ச்சியாக
 உள்ளது என கூறியுள்ளார்.
சுஷ்மிதாவின் மகன் மோகனதாஸ் கூறுகையில், என் அம்மாவை இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் அவர் தனியாக தான் வாழ வேண்டும். நான் இங்கே செட்டில் ஆகிவிட்டேன். என்னால் அடிக்கடி இலங்கைக்கு சென்று தாயை பார்த்து கொள்ள முடியாது.என் பெற்றோர் என் வீட்டில் தங்கியுள்ளனர். அவர்கள் எந்தவொரு சலுகைகளையும் பெறவில்லை.நான் அவர்களை கவனித்துக் கொள்வேன், வயதானவர்களை எப்படி அனுப்புவது? என கூறியுள்ளார்.
இவர்களின் குடும்ப வழக்கறிஞர் நாக கந்தையா கூறுகையில், இது ஒரு சோகமான வழக்கு, புலம்பெயரும் முறையின் கடுமையான உண்மைகளை இது காட்டுகிறது. குடும்பங்கள் ஒன்றாக இருக்க 
வேண்டும் என்பதே என் எண்ணம்
இதுபோல கடுமையான சட்டங்கள் தொடர்ந்து பின்பற்றப்பட்டால் முதியவர்கள் அதிகளவில் தங்கள் குடும்பத்தை பிரிந்திருப்பதை தான் காண வேண்டும் என கூறியுள்ளார்.உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், தனிப்பட்ட வழக்கு
 குறித்து நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை.சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது, இது குறித்து கருத்து தெரிவிப்பது பொருத்தமானது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>