siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 15 மே, 2019

இலங்கையில் பிரித்தானிய மனைவிக்கு எமனாக மாறிய ஹொட்டல்

இலங்கைக்கு தேனிலவு சென்ற போது மனைவியை பறிகொடுத்த கணவன் அவரை மறக்க முடியாமல் இரவில் நட்சத்திரங்களைப் பார்த்து பேசிக் கொள்வதாக வேதனையுடன் கூறியுள்ளார்.லண்டன் நகரைச் சேர்ந்தவர் கிளன் சந்தாரியா. 33 வயதாகும் இவர் வடக்கு லண்டனில் உள்ள பின்ச்லே பகுதியில் வசித்து வருகிறார்.
இவருக்கும் இதே பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணான உஷிலா படேல் என்பவரும் மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் 19ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.திருமணத்தை கொண்டாடும் வகையில் இரண்டு நாள் தேனிலவு பயணமாக இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள் அங்கிருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். கடந்த 25ம் திகதி உணவருந்திய தம்பதியினர் இருவரும் அங்கேயே 
மயங்கி விழுந்தனர். இதில் உஷிலா படேல் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்தார்.இந்நிலையில் அன்று நடந்த சம்பவத்தைப் பற்றி சந்தாரியா கூறுகையில், முதல் நாள் இரவில் தான் உணவு சாப்பிட்டோம். மறுநாள் காலையில் அவள் வாந்தி எடுக்க ஆரம்பித்துவிட்டாள்.மூன்று பேர் எங்களை மருத்துவமனையில் சேர்த்தனர். 
வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருப்பாள். இங்கு இருக்கும் அதிகாரிகள் என்னை ஒரு குற்றவாளியாக நடத்துவதில்லை. என்றாலும் என்னைப் பாதிக்கப்பட்டவனைப்போலும் நடத்துவதில்லை.இந்த உலகம் முழுவதும் எனக்கு எதிராக இருப்பது போல் உணர்கிறேன். இருந்தாலும், அவளை விட்டு வரப்போவதில்லை என்று சோகமுடன் கூறியுள்ளார்.மேலும், இந்த விவகாரத்தில் சந்தாரியாவுக்கு ஆதரவாக இருக்கப்போவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்திருந்தது 
குறிப்பிடத்தக்கது.
உஷிலாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், உடல் வறட்சி மற்றும் வாந்தியின் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மனைவியின் மரணத்துக்கு ஹோட்டலில் கொடுத்த உணவே காரணம் என சந்தாரியா குற்றம் 
சாட்டிய நிலையில், ஹோட்டல் நிர்வாகமோ சாண்ட்விட்ச், சிப்ஸ் இவர்கள் சாப்பிட்டனர்.கூடவே வோட்கா மற்றும் 
கூல்ட்ரிங்ஸ் மட்டுமே குடித்தனர். அப்படி இருக்கையில் எங்கள் உணவு தரமானதாக இல்லை எனக் கூறுவதே ஏற்க 
முடியாது என ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 comments:

கருத்துரையிடுக