Link

ணக்கம் வருக வருக....

Pages

புதன், 13 பிப்ரவரி, 2019

தமிழ் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கத்துக்கு வீடு அன்பளிப்பு

 ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனான 2018ஆம் ஆண்டின் இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் உள்பட 12 வீராங்கனைகளுக்கும் இன்று புதிய வீடுகள் வழங்கிவைக்கப்பட்டன .
வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் மொறட்டுவயின் 
அமைக்கப்பட்ட சாயுராபுர வீடமைப்பு வளாகத்திலேயே இந்த 12 வீடுகளும் இலங்கை அணியின் வீராங்கனைகளுக்கு
 வழங்கிவைக்கப்பட்டன .
வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவால் இந்த வீடுகள் இன்று கையளிக்கப்பட்டன .
2018ஆம் ஆண்டு செப்ரெம்பரில் சிங்கப்பூரில் ஆசிய சாம்பியன்ஷிப் வலைபந்தாட்டத் தொடர் நடைபெற்றது . இறுதிப் போட்டி சிங்கப்பூரின் ஸ்போர்ட்ஸ் ஹப் உள்ளக விளையாட்டரங்கில் செப்ரெம்பர்
 9ஆம் திகதி நடைபெற்றது .
இதில் இலங்கை அணி 69 – 50 என்ற புள்ளிகள் அடிப்படையில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாகவும் சம்பியின் பட்டத்தை சுவீகரித்து கொண்டுள்ளது .
இலங்கை வலைபந்தாட்ட அணியில் யாழ் . மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் இடம்பெற்றனர் .
ஆசியாவின் உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையும் அதி சிறந்த கோல் போடும் வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம்  , எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவர் இடம்பெற்றனர் . தேசிய வலைபந்தாட்ட அணியில் இரண்டு தமிழர்கள் ஏக காலத்தில் இடம்பெற்றமை இதுவே முதல் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


தமிழுக்கு புதிய பெருமை கனடாவில் இரண்டாம் மொழியாக கற்பிப்பு..

கனடா பள்ளிகளில் தமிழ் மொழி..! இரண்டாம் மொழியாக கற்பிப்பு..! தமிழுக்கு புதிய பெருமை…!!
தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும்.தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் 
வழங்கி வருகின்றது.
தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின.
இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், 
மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்.தென்னாபிரிக்கா, குயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட் டொபாகோ போன்ற 
நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், 
அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.புலம் பெயர்ந்த தமிழர்களின் பெரு முயற்சியினால்
 தற்போது ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழ்மொழி இரண்டாம் மொழியாக பள்ளிகளில்
 கற்பிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இலங்கையர்களுடன் ரியூனிஷின் தீவை சென்றடைந்த கப்பல்

பெருமளவு இலங்கையர்களை ஏற்றிய கப்பல் ஒன்று பிரான்ஸிற்கு சொந்தமான தீவான ரீயூனியனை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.பெண்கள், சிறுவர்கள் உட்பட 72 இலங்கையர்கள்
 இந்த கப்பலில் பயணிப்பதாக தெரியவந்துள்ளது.குறித்த கப்பல் நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து பிரான்ஸ் தீவை நோக்கி பயணித்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 9ஆம்
 திகதி நீர்கொழும்பில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பல், 25 நாட்களுக்குள் ரீயூனியன் தீவை நெருங்கியுள்ளது
சிலாபம் மீன் வர்த்தகரான சுதர்ஷன் பெரேரா என்பவருக்கு சொந்தமான கப்பலை மஹவெவ பிரதேசத்தை சேர்ந்த பெர்னாண்டோ என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்தக் கப்பலை ஓட்டியவர் ஆட்கடத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக கப்பல் உரிமையாளர் நீர்கொழும்பு பொலிஸ் மற்றும் குற்ற விசாரணை திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.கடந்த மாதம் 9ஆம் திகதி கப்பல் உரிமையாளர் தேவையான உணவு மற்றும் ஐஸ் ஆகியவற்றை வழங்கி மீன் பிடிக்க அனுப்பியுள்ளார். இதன் பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த கப்பலில் பயணித்தவர்களிடம் 6 முதல் 8 லட்சம் ரூபாய் வரை பணம் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்
 கிடைத்துள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>