Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 17 மார்ச், 2020

கொரோனா வைரஸ் கட்டாரிலும் பரவுகின்றது கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளின் கீழ் கட்டார் மார்ச் 18 முதல் இரண்டு வாரங்களுக்கு முழுமை அடைப்பை அறிவித்துள்ளது.இதன்படி வருகைதரும் விமானங்கள் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளன.பொதுப் போக்குவரத்துக்கள் உட்பட்ட அனைத்து பணிகளும் இடை நிறுத்தப்பட்டு 
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு வாரங்களுக்கு பின்னர் நிலைமை ஆராயப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என்று கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.55 வயதானவர்கள், கர்ப்பிணி தாய்மார், சுவாசப்பிரச்சினை உடையவர்கள் 
வீடுகளில் இருந்தே பணியாற்ற 
அனுமதிக்கப்படுவர்.
அனைத்து பொது போக்குவரத்துக்களும் நேற்று முதலே மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன. உணவு மற்றும் மருந்துகளுக்கு 6 மாத கால வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தெரிவு 
செய்யப்பட்டவர்களுக்கு மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களில் இருந்து 6 மாத விலக்களிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 1 மார்ச், 2020

நுரையீரலை ஆய்வு செய்த அமெரிக்க மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

சீனப் பிரஜை ஒருவரின் நுரையீரலில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள மவுண்ட் சினாய் உடல் பரிசோதனை வைத்தியர்கள் குறித்த சீன பிரஜையை ஸ்கான் செய்தவேளை அவருக்கு கொரோனா 
தாக்கம் ஏற்படாத நிலையில் அறிக்கைகள் வெளியாகின.ஆனால், அவரை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்தியர்கள் அவதானித்த நிலையில் அவரின் நுரையீரலில் சில மாற்றங்கள் தெரிந்தன
.அதிக தொற்று நோயால் பாதிக்கப்பட்ட அவரின் நுரையீரலை ஸ்கான் மூலம் ஆராய்ச்சி செய்தபோது அதில் வைரஸ் பரவி வருவதை காணக்ககூடியதாக இருப்பதை வைத்தியர்கள் அவதானித்த
 நிலையில் அதனை 
புகைப்படங்கள் மூலம் வெளியிட்டுள்ளனர்.வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை இருவாரங்கள் சோதனை செய்தபோதே 
இவ்வாறு அவரின் நுரையீரலில் வைரஸ் வளர்ந்திருப்பதை அவதானிக்க
 முடிந்தது.அதேவேளை இவ்வாறான அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் கொரோனா நோயாளி ஒருவரை தனிமைப்படுத்தி அவருக்கான சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கலாம் என அ
வர் தெரிவித்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>