siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 26 ஜூன், 2021

அவுஸ்ரேலியாவில் நடேசன் - பிரியா தம்பதிக்கு இணைப்பு வீசா

 அவுஸ்ரேலியாவில் நிர்கதியாகியுள்ள இலங்கைத்தீவைச் சேர்ந்த நடேசன் - பிரியா தம்பதிக்கு அந்நாட்டின் இணைப்பு வீசா வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹவ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லேண்ட் - பிலோயிலா (BILOELA) நகரில் வசித்து வந்த இவர்களை, வீசா காலம் நிறைவடைந்த நிலையில் 2018ம் ஆண்டு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எனினும் அதற்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் நிமித்தம் வழக்கு விசாரணை வரையில் கிறிஸ்மஸ் தீவில் உள்ள ஏதிலிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களது இளைய மகள் சுகவீனமற்று பேர்த் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனவே பிரியா - நடேஸ் குடும்பத்தின் 4 பேரும் 
3 மாதங்களுக்கு பேர்த் நகரில் தங்கி இருப்பதற்கான இணைப்பு வீசா வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீசாவின் மூலம் சுகாதாரம், வீடு, தொழில் வசதிகள் அவர்களுக்கு வழங்கப்படும். அவர்களது வீசா உரிமை தொடர்பான நிலைப்பாட்டில் இன்னும் எந்த மாற்றமும் 
செய்யப்படவில்லை.
அவர்கள் அங்கிருந்த படி வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர்
 தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

வியாழன், 3 ஜூன், 2021

வேலிகளுக்கு அடியே குழித்தோண்டி செல்லும் புலம்பெயர்ந்தவர்கள்

தாய்லாந்து- மலேசிய எல்லையில் தாய்லாந்தின் Songkhla  மாகாணத்தில் உள்ள Sadao மாவடத்தில் 7 சட்டவிரோத வழிகளை தாய்லாந்து எல்லை ரோந்து படையினர் கண்டறிந்துள்ளனர். 
மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் நுழையும் தாய்லாந்து நாட்டவர்களும் புலம்பெயர்ந்தவர்களும் இவ்வழிகளை பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகின்றது. 
Sadao மாவட்டத்தில் உள்ள 85 கி.மீ. எல்லையில் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்கக்கூடிய 7 இடங்களை தாய்லாந்து அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக Songkhla மாகாண ஆளுநர்  Jaruwat Kliangkla
o தெரிவித்திருக்கிறார். 
கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக எல்லையில் தொடர்ந்து ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பலர் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்கக்கூடிய நிலை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எல்லைப்புற வேலிகளைக் கடக்கும் விதமாக வேலிகள் மீது ஏணிகள் அல்லது மரக்கட்டைகளை பயன்படுத்தியும் இன்னும் சில இடங்களில் வேலிகளை வெட்டியும் சில இடங்களில் வேலிகளுக்கு அடியில குழித்தோண்டியும் பலர் எல்லைகளை கடந்திருப்பதிருப்பதாக தாய்லாந்தின் Songhkla மாகாண ஆளுநர்  Jaruwat Kliangklao 
தெரிவித்துள்ளார்.  

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>