Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

அடுக்குமாடித் தொடரில் சுவீடன் நாட்டில் திடீர் வெடிவிபத்து

 சுவீடன் நாட்டின் தென்மேற்கு நகரான கோத்தன்பர்க்கில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 பேர் வரையில் காயடைந்துள்ளனர்.
அடுக்குமாடி மற்றும் ஜன்னல்களிலிருந்து சாம்பல் புகை வெளியேறியதால் தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்திலிருந்து மக்களை வெளியேற்றி 
வருகின்றனர். 
இந்த சம்பவத்தில் 20 முதல் 25 பேர் வரை காயமடைந்துள்ளனர்.  3 பேர் வரை பலத்த காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
குண்டுவெடிப்பினை தொடர்ந்து பல்வேறு கட்டிடங்களுக்கும் தீ பரவியுள்ளது.  இதனை தொடர்ந்து 100 முதல் 200 பேர் வரை அந்த கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
இந்த வெடிவிவத்தில் குண்டு வைத்து வெடிக்கப்பட்டதா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை 
நடத்திவருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>


வியாழன், 16 செப்டம்பர், 2021

வெளிநாட்டு வேலைவாய்ப்பு இலங்கை வாழ் இளைஞர்களுக்கு

ஜப்பானிய அரசாங்கம் இலங்கை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க உடன்பட்டுள்ளது.ஜப்பானில் விவசாயப் பண்ணைகளில் ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க ஜப்பானிய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சு
 தெரிவித்துள்ளது.
அடுத்த இரு வாரங்களுக்குள் இது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் குணசேகர தெரிவித்தார். இன்று காலை விவசாய அமைச்சுடன் ஸூம் கலந்துரையாடலில் பேசும் போது அவர் இதைத் தெரிவித்தார்.
ஜப்பானில் 1,000 இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் தலையிட்டமைக்காக ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவருக்கு விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே நன்றி 
தெரிவித்துள்ளார்.
இந்த வேலை வாய்ப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து தேவையான மொழிப் பயிற்சி மற்றும் பிற தொடர்புடைய பயிற்சித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>