Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 16 நவம்பர், 2021

டோக்கியோவில் செயற்கையாக பூமிக்கடியில் நீர் சேமிப்பு தொட்டிகள்

உலகெங்கும் நகரங்கள் உருவானபோது பல நாடுகளிலும் இதுபோன்ற இயற்கை அழிப்புகள் நடந்து இருக்கின்றன. அதற்கு அந்த நாடுகள் தற்போது தீர்வும், பரிகாரமும் தேடிக்கொண்டு இருக்கின்றன. இயற்கையை அழித்து விட்டு, அவற்றை செயற்கையாக தற்போது உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள்.
பூமிக்கடியில் நீர் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ராட்சத சுரங்கப்பாதை அதற்கு உதாரணமாக ஜப்பான் நாட்டை எடுத்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் மழையால் ஜப்பானின் தலைநகரான டோக்கியோ நகரம் மிகுந்த பாதிப்பு அடைந்து வந்தது. அங்குள்ள வீடுகள் எல்லாம் பல நாட்கள் நீரில் மிதக்கும். அதற்கு அவர்கள் கண்ட தீர்வுதான் பூமிக்கடியில் நீர் வெளியேற்றும் வாய்க்கால் திட்டம்.
டோக்கியோவின் மேல்பரப்பில் இருந்த வாய்க்கால், நீர்நிலைகள் எல்லாம் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் எழும்பி விட்டன. அதனால் அவர்கள் செயற்கையாக பூமிக்கடியில் 50 மீட்டர் ஆழத்தில் மழை நீர் செல்லும் மிகப்பெரும் சுரங்கத்தை (செயற்கை வாய்க்கால்) உருவாக்கினர். இந்த சுரங்கத்தின் முடிவில், பூமிக்கடியில் மிகப்பெரும் நீர் சேமிப்பு 
தொட்டிகளை கட்டினர்.
இந்த தொட்டிகள் 6 கால்பந்து மைதானம் அளவு கொண்டது. சுரங்கத்தின் வழியாக வரும் மழை நீர், சேமிப்பு தொட்டியில் வந்து சேருகிறது. பின்னர் இந்த சேமிப்பு தொட்டியில் இருக்கும் நீர், ராட்சத குழாய்கள் மூலம் பம்பிங் செய்யப்பட்டு அதன் அருகில் உள்ள எடவா ஆற்றில் 
வெளியேற்றப்படுகிறது.
சேமிப்பு தொட்டிகளில் இருந்து ஒரு நிமிடத்திற்கு 7 ஆயிரம் கன அடி நீரை ஆற்றில் வெளியேற்றுகிறார்கள்.ர் சேமிப்பு தொட்டியில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் காட்சி
இந்த திட்டத்தின் மூலம் தற்போது மழை வெள்ள பாதிப்பில் இருந்து டோக்கியோ நகரம் முழுமையாக தன்னை காத்து கொள்கிறது. வெள்ள பாதிப்பில் இருந்து தப்பித்தல் மற்றும் மழை நீரை முழுவதுமாக சேகரித்தல் என ஒரே கல்லில் இரண்டு மாங்காயை இந்த திட்டத்தின் மூலம் செய்து வெற்றி பெற்று இருக்கிறது ஜப்பான்.
நீர் சேமிப்பு தொட்டிக்கு செல்லும் நுழைவுவாயில் இந்த திட்டம் 1992-ம் ஆண்டு தொடங்கி 2006-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதற்காக செலவான தொகை இந்திய மதிப்பில் ரூ.15 ஆயிரம் 
கோடி ஆகும்.
மழை வெள்ளத்தில் இருந்து பூமிக்கடியில் கட்டப்பட்ட சேமிப்பு தொட்டி தங்களை காப்பதால் ஜப்பான் மக்கள் அதனை பூமிக்கடியில் ஒரு கோவில் என்றுதான் சொல்கின்றனர்.  ஜப்பானின் இந்த தொழில்நுட்பத்தை அமெரிக்கா உள்பட பல நாடுகளும் பின்பற்றி வருகின்றன.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வியாழன், 4 நவம்பர், 2021

கொவிட்டுக்கு பலனளிக்கிறது மன நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து

மனநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மலிவான மற்றும் பரவலாகக் கிடைக்கும் மருந்தான Fluoxetine, கொவிட்-19 வைரஸால் ஏற்படும் மரண அபாயத்தையும், தீவிர மருத்துவ சிகிச்சையின் அவசியத்தையும் குறைக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
‘தி லான்செட்’ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை மேற்கோள்காட்டி ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவர் ஜீவந்தர இத்தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆய்வில் பங்கேற்றவர்களிடையே கொவிட்-19 இறப்பு வீதம் 90ஆகக் குறைந்துள்ளது மற்றும் தீவிர மருத்துவ சிகிச்சையின் தேவை 65 வீதம் குறைந்துள்ளது.
மனச்சோர்வு மற்றும் பிற உளக்கோளாறு நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க Fluoxetine பயன்படுத்தப்படுகிறது.
பிரேஸிலில் கொவிட்-19 நோயை உருவாக்கும் அதிக ஆபத்துள்ள 1,497 பேர் இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>