siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 19 டிசம்பர், 2022

பெர்லினின் மையப்பகுதியில் 1500 உயிர்கள் துடிதுடித்து உயிரிழப்பு.

ஜெர்மனியில் பிரமாண்ட மீன் தொட்டி உடைந்து சாலையில் நீர் சாலையில் ஓடியது. ஆயிரக்கணக்கான அரிய வகை மீன்கள் தரையில் விழுந்து துடிதுடித்து இறந்தன.ஐரோப்பிய நாடான ஜெர்மன் தலைநகர் பெர்லினின் மையப்பகுதியில், ‘ராடிசன் ப்ளூ’ என்ற பிரபல ஹோட்டல்
 அமைந்துள்ளது.
இங்கு, 82 அடி உயரம் கொண்ட பிரமாண்ட மீன் தொட்டி உள்ளது. , இதில் 1,500 வகையான மீன்கள் வளர்க்கப்பட்டன.‘அக்வாடோம்’ என பெயரிடப்பட்ட இந்த தொட்டியில் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. இந்த தொட்டி நேற்று அதிகாலை 6:00 மணிக்கு திடீரென
 உடைந்து சிதறியது.
வெப்பநிலை மைனஸ் 10 டிகிரிக்கும் குறைவாக சென்றதால் கண்ணாடி தொட்டியில் விரிசல் ஏற்பட்டு உடைந்ததாக கூறப்படுகிறது. மீன் தொட்டியிலிருந்து வெளியேறிய நீர், சாலையில் ஓடியது. இதில் இருந்த அரிய வகை மீன்களும் தரையில் விழுந்து 
துடிதுடித்து இறந்தன

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 9 டிசம்பர், 2022

அஸர்பைஜான் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட 7 இலங்கையர்களும் நிறுவன உரிமையாளரும் கைது

அஸர்பைஜான் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட 7 பேரையும், கடத்தலுக்கு தலைமை தாங்கிய கஹதுடுவ பகுதியிலுள்ள வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் ஒருவரையும் கைது செய்ததாக கஹதுடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அஸர்பைஜான் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருமாறு கஹதுடுவ பிரகதி மாவத்தை பகுதியிலுள்ள வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் அறிவித்துள்ளார்.
அதற்கமைய, விமான நிலையத்திற்குச் சென்ற போது விசா இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பியதாக வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த மோசடி நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் செல்வதற்காக தான் 8 லட்சம் ரூபாயை வேலைவாய்ப்பு முகவருக்கு கொடுத்ததாக குறித்த நபர் தனது முறைப்பாட்டில் 
குறிப்பிட்டுள்ளார்.
இவருடன் மேலும் 6 பேர் விமான நிலையத்திற்கு சென்ற போதிலும் அவர்களும் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த நபர் செய்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறிது நேரத்தில் மேலும் 6 பேர் காவல்துறை நிலையத்திற்கு தாம் கஹதுடுவ வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு 62 லட்சம் ரூபாய் வழங்கியதாக 
குறிப்பிட்டுள்ளனர்.
வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த போதும், வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளரால் தாம் விமான நிலையத்திற்குள் மாத்திரம் அழைத்துச் செல்லப்பட்டதாக முறைப்பாட்டாளர்கள் தங்கள் முறைப்பாட்டில்
 தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

செவ்வாய், 29 நவம்பர், 2022

புகலிடக்கோரிக்கையாளர்களை வெளியேற்ற பிரித்தானியா வெள்ளை பட்டியல்

பாதுகாப்பான நாடுகள் என கருதப்படும் நாடுகளிலிருந்து வந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை பிரித்தானியாவிலிருந்து வெளியேற்றுவதை விரைவுபடுத்த ரிஷி சுனக் அரசு திட்டமிட்டுவருகிறது.
பாதுகாப்பான நாடுகள் என கருதப்படும் நாடுகள் கொண்ட 
வெள்ளைப் பட்டியல் ஒன்றை உருவாக்க பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன் விரும்புவதாக கூறப்படுகிறது.
அதாவது, ஒரு நாட்டில் போர், பஞ்சம், அரசியல் 
பிரச்சினைகள் போன்ற காரணங்கள் எதுவும் இல்லாத நிலையிலும், அந்த நாட்டிலிருந்து படகு மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோர்
 இருக்கிறார்கள். தன் நாட்டில் வாழ்வதைவிட நன்றாக வாழ்வதற்காக அவர்கள் பிரித்தானியாவுக்கு வருகிறார்கள். அவர்களை அவர்கள்
 நாட்டுக்கே திருப்பி அனுப்பவேண்டும் என்பதுதான் பிரித்தானியாவின் திட்டம்.
ஆக, அப்படிப்பட்ட பாதுகாப்பான நாடுகள் கொண்ட பட்டியல்தான் ‘வெள்ளைப் பட்டியல் என இங்கு குறிப்பிடப்படுகிறது.
புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்களுடைய நாட்டுக்கே திருப்பி அனுப்பத் திட்டம்அப்படிப்பட்ட நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்து புகலிடம் கோருவோரை அவர்களுடைய நாட்டுக்கே திருப்பி அனுப்புவதுதான் திட்டம்.
இன்னொரு விடயம், இப்படி திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை நிரூபிக்க முடியாத பட்சத்தில், அதை எதிர்த்து மேல் முறையீடும் செய்யமுடியாத வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




திங்கள், 12 செப்டம்பர், 2022

ஒரு நகரம், உலகிலேயே முதல் தடவையாக பொதுவெளிகளில் இறைச்சி விளம்பரங்கள் செய்வதற்கு தடை

நெதர்லாந்து நாட்டில் இருக்கும் ஒரு நகரம், உலகிலேயே முதல் தடவையாக பொதுவெளிகளில் இறைச்சி குறித்த விளம்பரங்கள் செய்வதற்கு தடை அறிவித்திருக்கிறது.
நெதர்லாந்து நாட்டின் ஹார்லெம் என்னும் டச்சு நகர், பருவநிலை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் இறைச்சிக்காக பொதுவெளிகளில் விளம்பரம் செய்யப்படுவதற்கு தடை அறிவித்திருக்கிறது. 
உலகிலேயே இறைச்சி விளம்பரம் செய்வதற்கு தடை விதித்த முதல் நகரமாக ஹார்லெம் மாறவிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
அதன்படி, 1,60,000 பேர் வாழும் அந்த நகரில் வரும் 2024 ஆம் வருடத்திலிருந்து திரையரங்குகள், பேருந்துகள் முதலான பொதுவெளிகளில், தீவிர முறை பண்ணை வளர்ப்பு இறைச்சிக்கான விளம்பரங்கள் 
செய்யக்கூடாது 
என்றும் அது சட்டவிரோதமானது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவெளிகளில் மோசமான இறைச்சி குறித்து விளம்பரங்கள் செய்வதை அந்நகரம் தடை செய்திருக்கிறது. அதே நேரத்தில் இயற்கையான இறைச்சிகளுக்கு செய்யப்படும் விளம்பரங்களுக்கும் தடை இருக்குமா? என்பது குறித்து அந்நகரம் தற்போது வரை தீர்மானிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





திங்கள், 25 ஜூலை, 2022

நாட்டிலிருந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து

நாட்டிலிருந்து லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு செல்லும் சில விமானங்களை தொடர்ந்தும் ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 
அறிவித்துள்ளது.
 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் முகாமையாளர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்

விமான நிலையத்தில் பணியாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து லண்டனுக்கான இரண்டு விமானங்களும், லண்டனிலிருந்து கொழும்புக்கான இரண்டு விமானங்களும் கடந்த மூன்று வாரங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாளாந்தம் லண்டனுக்கு ஒரு விமானம் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த ரத்துகளின் விளைவாக, ரத்து செய்யப்பட்ட விமான பயணிகளுக்கு பணத்தைத் திருப்பித் தருவதாகவும், அவர்களுக்காக வேறு விமானங்களை தயார்படுத்தி வருவதாகவும் அவர் மேலும்
 தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 1 ஜூலை, 2022

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் அமெரிக்காவில் சாதனை

அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய்ஸ் தொகுதியில் ஜனநாயகக் கட்சியின் பிரைமரியில் வெற்றி 
பெற்றுள்ளார்.
இந்திய வம்சாவளி அமெரிக்க காங்கிரஸின் ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய்ஸில் இருந்து ஜனநாயகக் கட்சியின் பிரைமரியில் ஒரு தீர்க்கமான ஆணையை வென்றார், அவரது எதிர் வேட்பாளரான அகமது நடத்திய பிரசாரத்தை வெற்றிகரமாக முறியடித்தார்.
இல்லினாய்ஸின் எட்டாவது காங்கிரஸ் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கிருஷ்ணமூர்த்தி (48), ஜுனைத் அகமதுவை (71) சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் தோற்கடித்தார்.
இந்நிலையில் “எனது தொகுதி மக்கள் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பை விரும்புகிறார்கள். காங்கிரசில், நான் நடுத்தர வர்க்கத்தினருக்காகவும், பெண்களின் இனப்பெருக்க உரிமைகளுக்காகவும், பணவீக்கம் மற்றும் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராகவும் இருக்கிறேன். வரும் முக்கியமான மாதங்களில் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க நான் தொடர்ந்து அயராது உழைப்பேன்” 
என்று கூறினார். 
அவர் 2017 முதல் இல்லினாய்ஸின் 8-வது காங்கிரஸ் மாவட்டத்திற்கான அமெரிக்கப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். புது டெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை ராஜபாளையம். தாயார் தஞ்சாவூர். இவருடைய மனைவியும் தமிழ்நாடு தான். இவருடைய தந்தைக்கு அமெரிக்காவில் பேராசிரியர் பணி கிடைக்க,
 அங்கு சென்றனர்.
பின்னர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். மருத்துவமனை பொறுப்பாளராக இருந்த போது ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. ராஜா கிருஷ்ணமூர்த்தி 2004-ஆம் ஆண்டு ஒபாமாவின் செனட் பிரசார ஆலோசகராக பணியாற்றினார்.
2008-ல் ஒபாமாவின் தனி ஆலோசகராக இருந்தார். 2007 – 2009 காலகட்டத்தில் இல்லினாய்ஸ் மாகாணத்தின் துணை நிதியமைச்சராக இருந்தார்.
அவர், வரும் நவம்பர் 8-ஆம் திகதி பொதுத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் கிறிஸ் டர்கிஸை எதிர்கொள்கிறார். கடந்த மாதம்,
 அவரது சிறந்த தொழில் மற்றும் பொது சேவைக்கான அர்ப்பணிப்பை பாராட்டி அவருக்கு சிறப்புமிக்க தலைமைத்துவ விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



புதன், 15 ஜூன், 2022

ஸ்ரீலங்கன் விமானியின் திறமையால் 275 பயணிகள் காப்பாற்றப்பட்டனர்

லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று முன்தினம் (13-06-2022) பயணத்தை மேற்கொண்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யு.எல் 504 என்ற விமானம் நடுவானில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை தவிர்த்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று பிற்பகல் குறித்த விமானம் பாதுகாப்பாக இலங்கைவந்து தரையிறங்கியது. இந்த விமானம், 275 பயணிகளுடன் லண்டனிலிருந்து கட்டுநாயக்க நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.சுமார் 33,000 அடி உயரத்தில் குறித்த பறந்துகொண்டிருந்தபோது, பிரிட்டிஷ் எயார்வேய்ஸூக்கு சொந்தமான விமானம் ஒன்று 35,000 அடி உயரத்தில் 
பறந்துகொண்டிருந்தது.
துருக்கி வான்வெளியில் 33,000 அடியில் இருந்து 35,000 அடி உயரத்திற்கு பயணிக்குமாறு துருக்கி – அங்காரா விமானக் கட்டுப்பாடு அறையில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது.
விழிப்புடன் இருந்த ஸ்ரீலங்கன் விமானி, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமொன்று 35,000 அடி உயரத்தில் தமது விமானத்திலிருந்து 15 மைல் தொலைவில் பயணிப்பதை கண்டறிந்து, அங்காராவில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கினார்.
யு.எல் 504 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் குறித்த பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானம் புறப்பட்டிருந்தது. இந்நிலையில், ஸ்ரீலங்கன் விமானி வழங்கிய தகவலை சரிபார்த்த போது, அங்காரா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை, யு.எல் விமானியிடம் 35,000 அடி உயரத்தில் எந்த விமானத்தையும் தாங்கள் ரேடாரில் கண்டறியவில்லை என்று தெரிவித்ததுடன், ஸ்ரீலங்கன் விமானம் மேல் நோக்கி பயணிக்க பணிக்கப்பட்டது.
எனினும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தை தமது விமானத்தின் ரேடாரில் கண்டறிந்த ஸ்ரீலங்கன் விமானி, மீண்டும் அங்காரா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பிரிவினருக்கு தகவல் கொடுத்தார்.சில நிமிடங்களுக்குப் பிறகு 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் விமானத்தை ரேடாரில் கண்டறிந்த கட்டுப்பாட்டு பிரிவு, ஸ்ரீலங்கன் விமானத்தை மேலே பயணிக்க வேண்டாம் என்று அவசரமாக பணித்தது.
ஸ்ரீலங்கன் விமானம் பணிக்கப்பட்ட உயரத்தில் பயணித்திருந்தால், பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானத்துடன் மோதி பாரிய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இந்த சம்பவம் குறித்து அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
யு.எல் 504 விமானத்தில் இருந்த 275 பயணிகள், அதன் பணியாளர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் அதன் பணியாளர்களின் உயிர்கள், யு.எல் விமானத்தின் தலைமை விமானியின் விழிப்புணர்வு மற்றும் சாமர்த்தியமான தீர்மானத்தின் காரணமாக காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ், UL 504 விமான மற்றொரு விமானத்துடன் மோதும் அபாயத்தை ஏற்படுத்தவில்லை என்பதை தாம் வலியுறுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளது.அத்துடன், தமது விமானிகளின் புத்திசாலித்தனமும், விமானத்தின் அதிநவீன தகவல் தொடர்பு அமைப்பும் விமானம் பாதுகாப்பாக பறக்க உதவியது என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 
தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

ஞாயிறு, 12 ஜூன், 2022

நாட்டில் ஜேர்மன் நாட்டவர் பட்டரி மின்சாரத்தில் இயங்கக்கூடிய வண்டியைவடிவமைத்துள்ளார்

முழுமையாக பட்டரி மின்சாரத்தில் இயங்கக்கூடிய முச்சக்கர வண்டியை ஜேர்மன் நாட்டவர் இலங்கையி்ல் 
வடிவமைத்துள்ளார்.
ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்த ஒருவரே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இதன் மூலம் இலங்கையில் தனது சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டில் தொடரும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சுற்றுலா வந்த இவர், தனது பயணத் தேவையை பூர்த்திசெய்ய இந்த முயற்சியே மேற்கொண்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



சனி, 4 ஜூன், 2022

அணுசக்தி நிறுவனம் ஒன்றின் லண்டனில் பொறியியலாளராக பணியாற்றும் வாய்ப்பை பெற்ற தமிழ்ப்பெண்

லண்டனில் உள்ள உலகின் தலைசிறந்த அணுசக்தி நிறுவனம் ஒன்றின் பொறியியலாளராக பணியாற்றும் வாய்ப்பை தமிழ்ப்பெண் 
ஒருவர் பெற்றுள்ளார்.
தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தென்னடாா் கிராமத்தைச் சோ்ந்த சுபிக்சா என்ற பெண்னே இந்த வாய்ப்பை
 பெற்றுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்ற நிலையில், யுஎஸ்ஏவில் எம்.எஸ் படிப்பை தொடர்ந்து இவ்வாறு
 தேர்வாகியுள்ளார்.
இதையடுத்து சுபிக்சாவை பலரும் வரவேற்று பாராட்டியுள்ளதுடன், சமூகவலைதளங்களிலும் அவருக்கு வாழ்த்துக்கள் 
குவிந்துள்ளது.இவருக்கு 
என்  இந்த இணையங்களின் வாழ்த்துக்கள் 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 3 ஜூன், 2022

நிகரகுவா நாட்டில்ல் மருத்துவ உதவி இன்றி குழந்தை பெற்றெடுத்த பெண்

பசிபிக் சமுத்திரத்தில் நிகரகுவா நாட்டில் பிளேயா மஜகுவால் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் ஜோசி புக்கெர்ட் (வயது 37) என்ற பெண் தனது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். அவர் கர்ப்பிணியான காலம் முதல் மருத்துவரை அணுகவோ அல்லது ஸ்கேன் செய்யவோ என எதுவும் மேற்கொள்ளவில்லை. மருத்துவர்களின் உதவி இன்றியே குழந்தை 
பெற்றும் உள்ளார்.
இவருக்கு கடந்த பிப்ரவரி 27ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு போதி அமோர் ஓசன் கார்னீலியஸ் என பெயரிடப்பட்டு உள்ளது. இதுபற்றி ஜோசி கூறும்போது, சமுத்திரத்தில் குழந்தை பெற்று கொள்ள விரும்பினேன். இது எனது யோசனையில் இருந்தது. அதனுடன், அன்றைய தினம் சூழ்நிலைகளும் சரியாக இருந்தன. அதனால், சமுத்திரத்தில் குழந்தையை பெற்று 
கொண்டேன் என கூறியுள்ளார்.
இதற்காக பல வாரங்களாக அலையை கண்காணித்து வந்தேன். பின்பு குழந்தை பெற்றெடுக்க சரியான நேரம் வந்தபோது, பீச் பாதுகாப்புடன் இருக்கும் என தெரிந்து கொண்டேன் என கூறுகிறார்.
ஜோசிக்கு பிரசவ வலி வரப்போகிறது என தெரிந்ததும், அவரது குழந்தைகள் நண்பர்களுடன் தங்க வைக்கப்பட்டனர். அவரது கணவர், ஜோசியை வாகனத்தில் அழைத்து கொண்டு பீச்சுக்கு சென்றுள்ளார். உடன் துண்டுகள், நஞ்சுக்கொடியை எடுக்க பயன்படுத்த சல்லடை, ஒரு கிண்ணம், துணி வலை மற்றும் காகித துண்டுகள் உள்ளிட்ட குழந்தை பிறப்புக்கான உபகரணம் ஒன்றும் எடுத்து சென்றுள்ளார். ஏற்கனவே 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள ஜோசி, அலைகளின் ஓசை உண்மையில் என்னை நன்றாக உணர 
செய்தது என கூறுகிறார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், பசிபிக் சமுத்திர கடலோரம் பிரசவத்திற்கு முன் அமர்ந்து இருப்பது போன்றும் மற்றொரு வீடியோவில், தொப்புள் கொடியுடன் புதிதாக பிறந்த தனது மகனை கையில் வைத்திருக்கும் காட்சிகளும் உள்ளன. இந்த முறையில் குழந்தை பெற்றெடுத்ததற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்தபோதிலும், ஒரு சிலர் விமர்சனமும் 
செய்துள்ளனர்.
இது தூய்மையானதா? கடலில் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன என ஒருவர் தெரிவித்து உள்ளார். இதேபோன்று மற்றொருவர், வெப்பம் நிறைந்த கருவறையில் இருந்து குளிரான சமுத்திரத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என தெரிவித்து உள்ளார்.
ஆனால் அதற்கு ஜோஷி கூறும்போது, போதி நண்பகலில் சூரிய வெப்பம் 35 டிகிரி இருக்கும்போது பிறந்துள்ளான். அதனால், அவனுக்கு குளிர் ஏற்படும் என நாங்கள் கவலை கொள்ளவில்லை. நீர்சார்ந்த தொற்றுகளை பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. அவன் ஆரோக்கியமுடனேயே இருக்கிறான். இதற்காக தேவையான அனைத்து ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு, இது பாதுகாப்பானது என உறுதி செய்தே குழந்தை பெற்றெடுத்தேன் 
என்று அவர் கூறுகிறார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


செவ்வாய், 31 மே, 2022

அவுஸ்திரேலியாவில் இலங்கையில் வளர்ந்து வரும் நடிகையொருவர் அழகிப் போட்டியொன்றில் வெற்றி

இலங்கையில் வளர்ந்து வரும் நடிகையொருவர் அவுஸ்திரேலியாவின் அழகிப் போட்டியொன்றில் வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கான போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டியில் இலங்கை சிங்கள தொலைக்காட்சி நாடக நடிகையொருவர் வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜனிதா பெரேரா எனும் மாடல் அழகியே இவ்வாறு அழகிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் ஸ்பெயினின் சான் ஜோஸ் நகரில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அழகிக்கு கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற இந்திய அழகி ஹர்னாஸ் சந்து கிரீடம் சூட்டவுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 27 மே, 2022

தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் வாக்குறுதி

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு வருவதற்காக இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் மீண்டும் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டம் தொடர்பான தொழில்நுட்ப கலந்துரையாடலின் ஒரு கட்டத்தை முடித்துக் கொண்டதன் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதற்கமைய, நிலையான முறைகள் அடங்கிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஏனைய தரப்பினரின் ஆதரவுடன் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் 
தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு ஆதரவளிக்கும் ஒரு வேலைத்திட்டத்திற்கு கடன் நிலைத்தன்மை மீளமைக்கப்படும் என்பதற்கான போதுமான உத்தரவாதம் அவசியமாகும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



ஞாயிறு, 22 மே, 2022

அசத்தல் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலியா தேர்தலில் இலங்கைப் பெண்

அவுஸ்திரேலிய தேர்தலில் இலங்கை வம்சாவளி பெண் ஒருவர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.அவுஸ்திரேலிய தேர்தலில் தொழிற்கட்சி வேட்பாளர் கசாண்ட்ரா பெர்னாண்டோ வெற்றி பெற்றார். அவர் இலங்கையைச் சேர்ந்த ரங்கே பெரேராவை (லிபரல்) தோற்கடித்ததாக 
கூறப்படுகிறது.
வில்ஸ் பகுதியில் கசாண்ட்ரா பெர்னாண்டோ போட்டியிடுகிறார். அவர் சமையல் துறையில் நன்கு அறியப்பட்ட சமையல்காரர். கசாண்ட்ரா ஒரு பெருமைமிக்க வெளிநாட்டவர், பேஸ்ட்ரி செஃப். அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கான வழக்கறிஞர் 
தேர்தல் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவர் தனது 11 வயதில் தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியா சென்றார்.
அன்றிலிருந்து அவர் மெல்போர்னில் வசித்து வருகிறார். அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றை கசாண்ட்ரா பெர்னாண்டோ படைக்கவுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




வெள்ளி, 20 மே, 2022

இலங்கையர் களமிறங்கும் அவுஸ்திரேலியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டாட்சி தேர்தலில்

அவுஸ்திரேலியாவின் 47வது நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டாட்சி தேர்தலில் அவுஸ்திரேலியாவில் உள்ள Skullin தொகுதியில் இலங்கையர் ஒருவர் போட்டியிடுகிறார்.
மருதானை புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவரும் மொரட்டுவையை வதிவிடமாகவும் கொண்ட விரோஷ் பெரேரா அவுஸ்திரேலியாவில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
விரோஷ் வணிக மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் விரிவுரையாளர் மற்றும் ஆராய்ச்சியாளராக 13 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.
நாளை (21) தேர்தல் நடைபெற உள்ளது தான் ரே்தலில் போட்டியிடுவது தொடர்பில் விரோஷ் தெரிவிக்கையில், ‘
விக்டோரியா மாகாணத்திற்கு 38 லிபரல் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் நானும் ஒருவன். எனது திறமைகள் மற்றும் தொழில்முறை திறன்களின் அடிப்படையில் நான் லிபரல் கட்சிக்கு மதிப்புமிக்க நபராக இருப்பேன் என்று நம்புகிறேன். கடந்த காலத்திலும் இதே எம்.பி.க்கள் குழுவே ஆசனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.
நமக்கு மாற்றம் வேண்டும். ஸ்கல்லின் தொகுதியில் மக்கள் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதுடன், வாழ்க்கைச் செலவைக் குறைப்பது, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது மற்றும் குடும்பங்களின் சமூக மதிப்பைப் பாதுகாப்பது என்பவற்றை நான் செய்வேன் என நம்புகிறேன், ”என்று விரோஷ் கூறினார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



திங்கள், 16 மே, 2022

மூன்று நாட்களில்வட கொரியாவில் எட்டு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று

வட கொரியாவில் 3 நாட்களில் மட்டும் 8,20,620 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.உலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் பல நாடுகளில் கடும் பாதிப்பை
 ஏற்படுத்தின. ஆனால் இரும்புத்திரை நாடாக வர்ணிக்கப்படும் வடகொரியாவில் எந்த பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. வட கொரியாவில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறியது.
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் சீனா தயாரித்த சினோவாக் தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டன. இதனால் சீனா தங்களுக்கு வழங்கிய சுமார் 30 லட்சம் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை
 வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு
 வடகொரியா கேட்டுக் கொண்டது.யாருக்குமே கொரோனா இல்லாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என வடகொரியா அதிபர் கிம் 
ஜாங் உன் அறிவித்தார்.
இந்நிலையில் எளிதில் பரவக் கூடிய ஒமைக்ரோன் வகை கொரோனா தொற்று காரணமாக வட கொரியாவில் முதல் கொவிட் -19 பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு
 வருகின்றது.
சீனாவுடனான வர்த்தக உறவினால் இந்த கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று முதலில் கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நடந்த பிரமாண்ட இராணுவ அணிவகுப்பின் மூலமாகவே கொரோனா பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா காரணமாக இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை 1,74,440 பேருக்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர். இந்தநிலையில் 3 நாட்களில் மட்டும் 820,620 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதில் 3.2 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஞாயிறன்று காய்ச்சலால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் அனைத்து மாகாணங்கள், நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் முற்றிலுமாக ஊரடங்கில் உள்ளன. அலுவலகங்கள், உற்பத்தி அலகுகள் மற்றும் குடியிருப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகையில் தடுக்கப்பட்டுள்ளன. நோய் பரவுவதை தடுக்க அவசரகால அதிகபட்ச தனிமைப்படுத்தல் அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



திங்கள், 2 மே, 2022

நியூசிலாந்து இலங்கைக்கு பால் மற்றும் விலங்கு பொருட்களுக்கு சலுகைக் கடன் திட்டம்

இலங்கையில் பால் மற்றும் விலங்கு பொருட்களுக்கு சலுகைக் கடன் திட்டங்களை வழங்க நியூசிலாந்து முன்வந்துள்ளது.
நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த முடிவு 
எட்டப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி உறவுகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



சனி, 16 ஏப்ரல், 2022

விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் பறக்கும் இயந்திரப் போட்டி 2022

சிங்கப்பூர் பறக்கும் இயந்திரப் போட்டி 2022-இன் விருது வழங்கும் விழா.16-04-2022. இன்று சிங்கப்பூர் Expoவில் நடைபெற்றது.
COVID-19 தொடங்கியதிலிருந்து மாணவர்களுக்கான ஆகப்பெரிய நேரடி நிகழ்ச்சியாக அது அமைந்தது.
13ஆம் ஆண்டாக நடைபெற்ற சிங்கப்பூர் பறக்கும் இயந்திரப் போட்டி, DSO தேசிய ஆய்வுக் கூடத்தின் 50ஆம் ஆண்டுநிறைவைக்
 கொண்டாடியது.
இவ்வாண்டு 1,500க்கும் அதிகமானோர் போட்டியில் பங்கேற்றனர்.
சென்ற ஆண்டு போட்டியில் கலந்துகொண்டோரைவிட அந்த
 எண்ணிக்கை அதிகம்.
60க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
பங்கேற்பாளர்கள் 3 மாதப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
தங்களுடைய சொந்த பறக்கும் இயந்திரங்களை ஆராய்ந்து வடிவமைப்பதிலிருந்து அவர்களின் பிரமாண்டப் படைப்பை நீதிபதிகளிடம் முன்வைப்பதுவரை பங்கேற்பாளர்கள் கடினமாக
 உழைத்தனர்.
இறுதியாக Challenge Week எனும் சவால் வாரத்தின்போது தங்களின் பறக்கும் இயந்திரங்களின் திறனை பங்கேற்பாளர்கள் நிரூபிக்க வேண்டும்.
A பிரிவில் காகித விமானங்களை boomerang போல் தூக்கியெறியும் சவாலில் வென்றது இயூ டீ தொடக்கப்பள்ளியைச் (Yew Tee Primary School) சேர்ந்த குழு
அக்குழுவில் ஒருவர் சதீஷ் குமார்.
சிறுவயதிலேயே காகித விமானங்களைச் செய்த அவருக்கு வரையவும் பிடித்ததால் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள அவை தூண்டியதாக
 சதீஷ் கூறினார்.
"என் காகித விமானத்தை boomerang போல் எவ்வாறு தூக்கியெறிவது என்பதை நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. நான் நிறைய முறை அவ்வாறு செய்துபார்த்தேன். பல முறை அதை செய்த பிறகு நான் வெற்றியடைந்தேன்" என்றார் சதீஷ்.
முதல்முறையாக போட்டியில் கலந்துகொண்ட அவர் விமானங்கள் என்றால் தனக்குப் பிரியம் எனக் கூறினார்.
எதிர்காலத்தில் பொறியியல் படிக்க ஆசைப்படுவதாகவும்
 அவர் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>






வியாழன், 17 மார்ச், 2022

அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்சர்வதேச நீதிமன்ற உத்தரவு உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி

சர்வதேச நீதிமன்ற உத்தரவு உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்று 21-வது நாளாகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவை கைப்பற்றுவதில் மும்முரம் 
காட்டி வருகின்றன
இதற்கிடையே, உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் நிலைமையை மேலும் மோசமாக்கும் அல்லது நீடிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சர்வதேச நீதிமன்ற உத்தரவு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஷ்யாவிற்கு எதிரான வழக்கில் முழுமையான வெற்றியை
 பெற்றுள்ளோம்.
சர்வதேச நீதிமன்ற உத்தரவிற்கு ரஷ்யா உடனடியாக இணங்க வேண்டும். உத்தரவைப் புறக்கணித்தால் ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>> 


செவ்வாய், 8 மார்ச், 2022

தமிழ் இளைஞர்உக்ரைன் இராணுவத்தில் இணைந்த பின்னணி என்ன?

உக்ரைன் மீது ரஷ்யா ஆரம்பித்த இராணுவ நடவடிக்கை தொடர்ந்தும் உக்கிரமடைந்து வரும் நிலையில் தமிழ் இளைஞரொருவர் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த 21 வயது மாணவரொருவரே இவ்வாறு உக்ரைன் துணை இராணுவத்தில் இணைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உக்ரைனில் உள்ள கார்கோ நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைகழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் தற்போது நடைபெறும் போர் காரணமாக அந்த நாட்டில் உள்ள துணை ராணுவ பிரிவில் மாணவர் இணைந்துள்ளார் என கூறப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



புதன், 2 மார்ச், 2022

ரஷ்யா உலகில் தடைசெய்யப்பட்ட சக்திவாய்ந்த குண்டை வீசியது

உக்ரைனின் ஒக்த்ரைகா நகர் மீதே மிகவும் சக்தி வாய்ந்த வக்யூம் குண்டினை வீசியதாக அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மிக சக்திவாய்ந்த வக்யூம் குண்டு காற்றில் உள்ள ஒக்சிஜனை எரிபொருளாக பயன்படுத்தி வெடிக்கப்படுகிறது. குண்டு வீசும் பகுதிகளில் உள்ள ஒக்சிஜன் வெடிபொருளுடன் கலந்து வெடிக்கும் போது, சாதாரண குண்டுகளை விட அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தி பெரும் சேதத்தை 
உண்டாக்கும்.
ஜெனீவா உடன்படிக்கைகளின்படி தடைசெய்யப்பட்ட வக்யூம் குண்டுகளை உக்ரைன் மீது ரஷ்யா வீசியதாக அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதர் 
மார்க்ரோவே கூறினார்.
இந்த குண்டுவீச்சினால் ஏராளமான உக்ரைன் இராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
வேக்யூம் குண்டை பயன்படுத்துவது போர்க்குற்றம் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர்
 கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 1 மார்ச், 2022

இலங்கைத் தமிழ் அகதிகளிற்கு ஜேர்மனியில்ஏற்பட்டுள்ள நெருக்கடி

ஜோ்மனியில் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களை நாடு கடத்தும் திட்டத்தைக் கைவிட கோரியும், தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் ஜேர்மனியில் புலம்பெயர் தமிழர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
50 க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை கடந்த ஆண்டு ஜேர்மனி இலங்கைக்கு நாடு கடத்தியது. இந்நிலையில் மற்றொரு தொகுதி தமிழர்களை நாடுகடத்த ஜேர்மன் குடிவரவு துறை தயாராகி வருவதாக
 கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜேர்மன் அதிகாரிகள் நாடு முழுவதும் பாரிய சோதனைகளை நடத்தி 100 தமிழ் அகதிகளை தடுத்து வைத்து அவர்களின் வீடுகளை சோதனையிட்டனர்.
அத்துடன், புகலிடக் கோரிக்கையாளர்களை தங்களுடைய அனுமதியைப் புதுப்பிக்குமாறு அதிகாரிகள் அழைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் கட்டடத்திற்கு வந்தவுடன் அவர்கள் பொலிஸ் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு அவர்களின் தொலைபேசிகள் பறிமுதல்
 செய்யப்பட்டன.
இதன் காரணமாக அவர்களது உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் தொடர்புகொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டதுடன் அதன் பின்னர் அவர்கள் பலர் நாடு கடத்தப்பட்டனர்.
அதேவேளை கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையை உருவாக்குவதிலும் இணை அனுசரணை வழங்குவதிலும் ஜேர்மனி முக்கிய பங்கு வகித்தது எனினும் அகதிகளை அந்நாடு இலங்கைக்கு நாடு கடத்தி இருந்தமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

அரசாங்கதின் மகிழ்ச்சியான தகவல் பிரித்தானிய மக்களுக்கு

பிரித்தானியாவில் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் 
அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை முதல் பிரித்தானியாவில் கோவிட் கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
அந்த வகையில், நேர்மறை சோதனை செய்தவர்களை சுயமாக தனிமைப்படுத்துவதற்கான சட்டத் தேவை கைவிடப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் முதலாம் திகதி முதல் கோவிட் தொற்று தொடர்பான இலவச ரேபிட்- ஆன்டிஜென் சோதனை முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும், இலவச ரேபிட் ஆன்டிஜென் சோதனை குறிப்பிட்ட பிரிவினரை இலக்காகக் கொண்டதாக இருக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகளின் அர்த்தம், இப்போது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விலகி தனிப்பட்ட பொறுப்புக்கு செல்ல தயாராக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரித்தானியாவில் பல்வேறு கோவிட் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படவுள்ளது. இது அங்கு வாழும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?
பெப்ரவரி 21- பெரும்பாலான கல்வி மற்றும் குழந்தை பராமரிப்பு அமைப்புகளில் உள்ள ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை அறிகுறியற்ற பரிசோதனையை மேற்கொள்ளும் வழிகாட்டுதலை 
அரசாங்கம் கைவிடுகிறது.
பெப்ரவரி 24 – கோவிட் தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்தவர்கள் இனி சட்டப்பூர்வமாக சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை.
பெப்ரவரி 24 – முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நெருங்கிய தொடர்புகள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்கள் இனி ஏழு நாட்களுக்கு தினசரி சோதனை செய்ய சட்டப்பூர்வமாகத் தேவையில்லை.
ஏப்ரல் 1 முதல் – அறிகுறி மற்றும் அறிகுறியற்ற நபர்களுக்கான இலவச ரேபிட்- ஆன்டிஜென் சோதனை முடிவடையும்.
ஏப்ரல் 1 முதல் – கோவிட் அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும்போது தனிப்பட்ட பொறுப்பைச் செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள், அதுவரை அவ்வாறு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>