Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

அரசாங்கதின் மகிழ்ச்சியான தகவல் பிரித்தானிய மக்களுக்கு

பிரித்தானியாவில் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் 
அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை முதல் பிரித்தானியாவில் கோவிட் கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
அந்த வகையில், நேர்மறை சோதனை செய்தவர்களை சுயமாக தனிமைப்படுத்துவதற்கான சட்டத் தேவை கைவிடப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் முதலாம் திகதி முதல் கோவிட் தொற்று தொடர்பான இலவச ரேபிட்- ஆன்டிஜென் சோதனை முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும், இலவச ரேபிட் ஆன்டிஜென் சோதனை குறிப்பிட்ட பிரிவினரை இலக்காகக் கொண்டதாக இருக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகளின் அர்த்தம், இப்போது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விலகி தனிப்பட்ட பொறுப்புக்கு செல்ல தயாராக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரித்தானியாவில் பல்வேறு கோவிட் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படவுள்ளது. இது அங்கு வாழும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?
பெப்ரவரி 21- பெரும்பாலான கல்வி மற்றும் குழந்தை பராமரிப்பு அமைப்புகளில் உள்ள ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை அறிகுறியற்ற பரிசோதனையை மேற்கொள்ளும் வழிகாட்டுதலை 
அரசாங்கம் கைவிடுகிறது.
பெப்ரவரி 24 – கோவிட் தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்தவர்கள் இனி சட்டப்பூர்வமாக சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை.
பெப்ரவரி 24 – முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நெருங்கிய தொடர்புகள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்கள் இனி ஏழு நாட்களுக்கு தினசரி சோதனை செய்ய சட்டப்பூர்வமாகத் தேவையில்லை.
ஏப்ரல் 1 முதல் – அறிகுறி மற்றும் அறிகுறியற்ற நபர்களுக்கான இலவச ரேபிட்- ஆன்டிஜென் சோதனை முடிவடையும்.
ஏப்ரல் 1 முதல் – கோவிட் அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும்போது தனிப்பட்ட பொறுப்பைச் செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள், அதுவரை அவ்வாறு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>





வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

எச்சரிக்கை சூரியனில் இருந்து வெளியாகும் மின்காந்த புயலால் பூமிக்கு ஆபத்தாம்

சூரியனில் இருந்து வெளியாகும் மின்காந்த புயலால் பூமியில் உள்ள மின் சாதன பொருட்கள் பாதிக்கப்படலாம் என அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
சூரியனில் இருந்து அவ்வப்போது மின்காந்த புயல்கள் புறப்படும். தற்போது பூமி நோக்கி மிகுந்த வேகத்தில் வந்து கொண்டிருக்கும் மின்காந்த புயலால் செயற்கை கோள்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள்
 பாதிக்கப்படலாம்.
இன்று இரவுக்குள் இது பூமியை அடையும். எனவே மின்னணு, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து அமைப்புகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிக்கையில் 
கூறப்பட்டுள்ளது.
எனவே மின்னணு, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து அமைப்புகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




வியாழன், 3 பிப்ரவரி, 2022

தற்காலிக விசாவுடன் ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்


ஆஸ்திரேலியாவில் கடந்த பல ஆண்டுகளாக தற்காலிக விசாவுடன் வாழ்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கு வழியேற்படுத்தப்படவேண்டுமென பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் விரும்புவதாக ஆய்வு முடிவொன்று கூறுகின்றது.

மனித உரிமைகள் சட்ட மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற ஆஸ்திரேலியர்களில் 78 சதவீதமானோர், தற்காலிக விசாக்களில் உள்ளவர்கள் இங்கு நிரந்தரமாக குடியமர்த்தப்பட வேண்டுமென கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக நிலையற்ற வாழ்க்கை வாழும் அவர்களுக்கு, நிலையான எதிர்காலம் அமையவேண்டுமென கருத்து தெரிவித்த 78 வீதமானோரும் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை தற்காலிக விசாவுடன் இங்கிருப்பவர்கள், நாட்டின் சில துறைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வாக அமைவர் என, கடந்த டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 58 வீதமானோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் ஆஸ்திரேலியர்கள் பணிபுரியத் தயங்கும் பல துறைகளில், இவர்கள் வேலைசெய்ய முன்வருவர் எனவும் 33 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல்லாமல் பல்கலாச்சார நாடான ஆஸ்திரேலியா, இவர்களால் மேலும் மெருகூட்டப்படும் எனவும், என்னவிதமான விசாவில் இருந்தாலும் தமக்கான நிலையான எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு வழங்கப்படவேண்டுமெனவும், குறித்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் கூறியுள்ளனர்

இதுதொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள மனித உரிமை சட்ட மையத்தின் David Burke, தமது வாழ்க்கையைத் தாம் விரும்பியபடி திட்டமிட்டமிடுவதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளதாகவும், ஆனால் ஆஸ்திரேலிய அரசின் விசா முறைமை பல குடும்பங்களை ஒன்றிணையமுடியாதவாறு பிரித்துவைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்காலிக விசாவுடன் இங்கு வாழ்பவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை, ஆஸ்திரேலியர்கள் தெளிவாக உணர்ந்துள்ளமையை இந்த ஆய்வு முடிவு வெளிப்படுத்துவதாகவும் David Burke மேலும் தெரிவித்தார்.