siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 25 ஜூலை, 2022

நாட்டிலிருந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து

நாட்டிலிருந்து லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு செல்லும் சில விமானங்களை தொடர்ந்தும் ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 
அறிவித்துள்ளது.
 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் முகாமையாளர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்

விமான நிலையத்தில் பணியாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து லண்டனுக்கான இரண்டு விமானங்களும், லண்டனிலிருந்து கொழும்புக்கான இரண்டு விமானங்களும் கடந்த மூன்று வாரங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாளாந்தம் லண்டனுக்கு ஒரு விமானம் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த ரத்துகளின் விளைவாக, ரத்து செய்யப்பட்ட விமான பயணிகளுக்கு பணத்தைத் திருப்பித் தருவதாகவும், அவர்களுக்காக வேறு விமானங்களை தயார்படுத்தி வருவதாகவும் அவர் மேலும்
 தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 comments:

கருத்துரையிடுக