Link

ணக்கம் வருக வருக....

Pages

புதன், 25 ஜூலை, 2012

12 சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சிறுவர் இல்ல அதிகாரி கைது _

_
25.07.2012.மாவனெல்லை பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த சிறுமிகள் ஐவரையும்; எம்பிலிப்பிட்டிய எஹலியகொட பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்;கியிருந்த சிறுமிகள் ஏழு பேருமாக 12 சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் சிறுவர் இல்லப் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத் துர்நடத்தைக்கு துணை புரிந்ததாகக் கூறப்படும் பெண் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டு இவர்கள் இருவரும் இன்று மாவனெல்லை நீதிமன்றம் முன் ஆஜர் செய்யப்பட்டனர்.

சமர்ப்பிக்கப்பட்ட வைத்திய அறிக்கையை அடுத்து எதிர்வரும் ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக