25.07.2012. |
வரலாற்றுப் புகழ் மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய
வருடாந்தக் கொடியேற்ற நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு
அடியார்களின் அரோகரா ஒலியுடன் இடம்பெற்றது.
யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில்
இருந்தும் வருகை தந்த பக்த அடியார்கள் பெரும் எண்ணிக்கையில் ஆலயத்தில் காலை முதல்
காணப்பட்டார்கள். கொடியேற்றம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான ஆண்கள்
அங்கப்பிரதட்ணம் செய்ததுடன் பெண்கள் அடிஅழித்தார்கள்.
ஆலயச் சுற்றாடலில்
பொலிசாரும் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் மற்றும் செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் பலரும்
சேவையில் ஈடுபட்டிருந்தார்கள்.___
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக