30.07.2012.இந்தியாவுக்கு எதிரான
நேற்றைய ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா வீசிய பந்து வீச்சில் இலங்கை
அணியன் வீரர் சங்கக்காரவின் கையில் காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்த அவருக்கு
ஸ்கேன் பரிசோதனை எடுத்து பார்த்த போது, விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது
தெரியவந்தது.
இதனால் இந்த தொடரில் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாட
மாட்டார். அவர் 4 முதல் 6 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் விரைவில் தொடங்க உள்ள இலங்கை பிரிமியர்
லீக்கில் அவர் கலந்து கொள்வது சந்தேகமாக உள்ளது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக