Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 4 ஆகஸ்ட், 2012

1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் கந்தையா தயாநிதி
(தயா – Marche JVT உரிமையாளர்)
அன்னை மடியில் : 5 சனவரி 1959 — ஆண்டவன் அடியில் : 15 ஓகஸ்ட் 2011

அச்சுவேலி ஸ்ரீ விக்னேஸ்வர வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தயாநிதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சேராத செல்வமெல்லாம் சேர்த்துவிட்டு
சேர்ந்திருக்க மறந்து நீங்கள் சென்றதெங்கே?
பாரினிலே பந்தங்கள் பலவிருக்கு – எம் செல்வமே
பக்கத்துணை நீங்கள் இன்றி பயனேது எமக்கு...!!!
ஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எமது மனம் ஏற்றதில்லை
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் எம்முடன் நீங்கள்
வாழ்வதாகவே பாவனை செய்கின்றோம்...!!!
ஆண்டு ஒன்றில் ஒருகணம் ஏனும் உங்களை நாங்கள்
மாண்டதாக மறந்ததே இல்லை
ஆண்டுகள் எத்தனை இனி இனி வரினும்
மீண்டும் மீண்டும் உங்கள் நினைவுடன் வாழ்வோம்
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக